NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மணிப்பூர் வன்முறை - குகி சமூகத்தினை சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொலை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மணிப்பூர் வன்முறை - குகி சமூகத்தினை சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொலை 
    மணிப்பூர் வன்முறை - குகி சமூகத்தினை சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொலை

    மணிப்பூர் வன்முறை - குகி சமூகத்தினை சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொலை 

    எழுதியவர் Nivetha P
    Aug 18, 2023
    05:21 pm

    செய்தி முன்னோட்டம்

    மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்தில் நாகா பழங்குடியினரான தாங்குல்ஸ் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று(ஆகஸ்ட்.,18) அதிகாலை 4.30 மணியளவில் உக்ருல் மாவட்டத்தில் இருந்து 47 கி.மீ.,தொலைவில் அமைந்திருக்கும் குகி பழங்குடியின மக்கள் வாழும் தவுவாய் என்னும் கிராமத்தில் துப்பாக்கி சூடு நடந்துள்ளது என்று கூறப்படுகிறது.

    அதன்படி, இந்த கிராமத்தின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மலைபகுதிகளில் இருந்து கீழே இறங்கிய ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று, குகி பழங்குடியினர் வாழும் கிராமத்தினை நோக்கி தாக்குதல் நடத்தியுள்ளது.

    காவலர்களை நோக்கி இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் 3 பேர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

    வன்முறை 

    பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் 

    இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து உக்ருல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் என்.வஷும் கூறியதாவது, "இந்த தாக்குதலில் 3 பேர் பலியாகியுள்ள நிலையில், காயம் அடைந்தோர் குறித்த விவரங்கள் ஏதும் இன்னும் அறியப்படவில்லை" என்று கூறியுள்ளார்.

    மேலும், இந்திய ராணுவமும், மாநில காவல்துறையும் இணைந்து இந்த தாக்குதல் நடத்திய கும்பலினை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த சம்பவத்தினை தொடர்ந்து அப்பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றும் என்.வஷும் கூறினார்.

    இதனிடையே கடந்த 5ம் தேதி சுராசந்த்பூர், பிஷ்ணுபூர் உள்ளிட்ட 2 மாவட்டங்களிலுள்ள 2 வெவ்வேறு சமூகத்தினர் மத்தியில் நடந்த 2 துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் குகி சமுதாயத்தினை சேர்ந்த 2 பேரும், மைத்தேயி சமூகத்தினை சேர்ந்த 3 பேரும் பலியானது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மணிப்பூர்
    காவல்துறை
    காவல்துறை
    கொலை

    சமீபத்திய

    ஜாஃபர் எக்ஸ்பிரஸ் சம்பவம் பண்ணியது இப்படித்தான்; வீடியோ வெளியிட்டு பாகிஸ்தானை அலறவிட்ட பலோச் போராளிகள் பலுசிஸ்தான்
    ஹேக்கிங் அபாயம்; டெஸ்க்டாப்களில் கூகுள் குரோம் பயன்படுத்துபவர்களுக்கு அதி உயர் எச்சரிக்கை கூகுள்
    கிரிக்கெட்டில் கோலியின் இறுதி கவுண்டவுன்: 2027 ஒருநாள் உலகக் கோப்பையுடன் முழுவதுமாக வெளியேற திட்டமா? விராட் கோலி
    கொரோனா பாதிப்புகளில் இந்தியாவில் மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? கொரோனா

    மணிப்பூர்

    மணிப்பூர்: உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரரின் மனைவி  கலவரம்
    மணிப்பூர் விவகாரம் - சென்னை வள்ளுவர் கோட்டத்தில் எம்.பி.கனிமொழி பேச்சு  கனிமொழி
    கலவரத்தின் போது பதிவு செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான ஜீரோ FIRகள்: அலறும் மணிப்பூர் போலீஸ்  காவல்துறை
    'மணிப்பூர் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயார்': அமித்ஷா  கலவரம்

    காவல்துறை

    லிவ்-இன் டூகெதர் காதலியை கொலை செய்து சினிமா பாணியில் மறைக்க முயன்ற காதலன் - க்ரைம் ஸ்டோரி  கைது
    ஆலந்தூர் ரயில்வே ஸ்டேஷன் கொலை வழக்கு - கைதானவர் மீதான குண்டர் சட்டம் ரத்து  காவல்துறை
    இருவிரல் பரிசோதனை விவகாரம் - தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு  காவல்துறை
    அலுவலகத்திற்குள் புகுந்து CEOவை வெட்டி கொன்ற முன்னாள் ஊழியர் பெங்களூர்

    காவல்துறை

    காங்கிரஸ் தலைவரின் மொபைலை 'ஹேக்' செய்து பணம் பறிக்க முயன்ற இருவர் கைது  மத்திய பிரதேசம்
    முன்னாள் டிஜிபியின் பெயரை வைத்து பேஸ்புக்கில் மோசடி செய்த கும்பல்  சென்னை
    நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் படியில் பயணம் செய்ய ஏற்பட்ட மோதல் - 2 பேர் பலி  நாகர்கோவில்
    பீகார் மாநிலத்தில் அதிகளவு மோமோக்கள் சாப்பிட்ட நபர் மரணம் - அதிர்ச்சி சம்பவம்  காவல்துறை

    கொலை

    டெல்லி இளம்பெணின் கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க கோரிக்கை  இந்தியா
    காதலியின் உடலை துண்டுதுண்டாக வெட்டி குக்கரில் அவித்த காதலன்: மும்பையின் கொடூர கொலை வழக்கு  இந்தியா
    மும்பை கொடூர கொலை: குற்றம்சாட்டப்பட்டவருக்கு HIV பாசிட்டிவ் இந்தியா
    தாயின் உடலுடன் காவல்துறையில் சரணடைந்த மகள்: பெங்களூரில் பரபரப்பு  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025