NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கழிவுநீர் தொட்டியில் 3 பேர் உயிரிழந்தோர் விவகாரம் - தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கழிவுநீர் தொட்டியில் 3 பேர் உயிரிழந்தோர் விவகாரம் - தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
    கழிவுநீர் தொட்டியில் 3 பேர் உயிரிழந்தோர் விவகாரம் - தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

    கழிவுநீர் தொட்டியில் 3 பேர் உயிரிழந்தோர் விவகாரம் - தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

    எழுதியவர் Nivetha P
    May 17, 2023
    03:04 pm

    செய்தி முன்னோட்டம்

    கடலூர், ஸ்ரீமுஷ்ணம் அருகேயுள்ள கானூர் மாஞ்சோலையை சேர்ந்தவர் பிச்சமுத்து மகன் கிருஷ்ணமூர்த்தி(40),அவரது மனைவி காயத்ரி(35).

    இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளார்கள்.

    கிருஷ்ணமூர்த்தியுடன் சேலம் ஆத்தூர் அருகேயுள்ள தலைவாசலை சேர்ந்த அவரது மாமா மகன் சக்திவேல்(22)என்பவரும் தங்கி தச்சு வேலை செய்துவந்துள்ளார்.

    இதற்கிடையே கிருஷ்ணமூர்த்தி உள்ள அதேப்பகுதியில் அவர் புதிதாக வீடு கட்டி வருகிறார்.

    இப்பணியில் கானூர் பகுதியினை சேர்ந்த கொத்தனார் பாலச்சந்திரன்(32)என்பவர் ஈடுபட்டிருந்தார்.

    இந்த வீட்டின் முன்பே புதிதாக ஒரு செப்டிக்டேங்க் ஒன்று கட்டப்பட்டுள்ளது.

    அந்த டேங்கின் மேற்பகுதியில் கான்கிரீட் போடுவதற்காக செப்டிக்டேங்க் குழிக்குள் சாரம் ஒன்று அமைக்கப்பட்டிருந்துள்ளது.

    அந்த சாரத்தினை அகற்றுவதற்காக கடந்த 12ம்தேதி கிருஷ்ணமூர்த்தி,பாலச்சந்திரன்,சக்திவேல் ஆகியோர் செப்டிக்டேங்க் மேற்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிறுத்துளை வழியே ஒருவர்பின் ஒருவராக உள்ளே இறங்கியுள்ளார்கள்.

    விஷ வாயு 

    4 வாரத்தில் அறிக்கை அளிக்க உத்தரவு 

    உள்ளே இறங்கிய 3 பேருமே வெகுநேரம் ஆகியும் வெளியே வரவில்லை.

    இதனால் கிருஷ்ணமூர்த்தி தாயார் சரஸ்வதி குழிக்குள் எட்டிப்பார்த்தார்.

    அப்போது அவர்கள் மூவரும் விஷவாயு தாக்கி இறந்துக்கிடந்தது தெரியவந்துள்ளது.

    இந்த மரணத்தால் அந்த 3பேரின் குடும்பத்தாரும், அப்பகுதி மக்களும் பெரும்சோகத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.

    மேலும் இந்த விவகாரம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டிருகிறார்கள்.

    இந்நிலையில் கழிவுநீர்தொட்டியில் சுத்தம்செய்ய இறங்கிய 3பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    அதன்படி இதுபோன்ற மரணங்கள் நடக்காமல் தடுக்க மாநில அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்தும்,

    மரணமடைந்த குடும்பத்தாருக்கு அரசு கொடுத்த நிவாரணத்தொகை குறித்தும் 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கடலூர்
    மாநில அரசு
    மனித உரிமைகள் ஆணையம்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    கடலூர்

    தமிழகத்தில் 4 இடங்களில் மிதக்கும் இறங்கு தளங்கள் அமைக்க அனுமதி தமிழ்நாடு
    கடலூரில் முழு அடைப்பு போராட்டத்திற்கு பாமக அழைப்பு பாமக
    கடலூரில் என்.எல்.சி. நிறுவனத்தை எதிர்த்து பாமக முழு அடைப்பு போராட்டம் - 7,000 போலீசார் குவிப்பு காவல்துறை
    அன்பு ஜோதி ஆசிரமம் - கடலூர் தனியார் காப்பகத்தில் இருந்து 5 பேர் தப்பியோட்டம் விழுப்புரம்

    மாநில அரசு

    தமிழகத்தில் 20 மாதங்களில் 444 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் - அறநிலையத்துறை அமைச்சர் தமிழ்நாடு
    முதலமைச்சருக்கு ஷூவை பரிசாக வழங்கி சவால் விட்ட பெண் ஆந்திரா
    சென்னையில் பேனா நினைவு சின்னம்-மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு மத்திய அரசு
    வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2500 - சத்தீஸ்கர் மாநில அரசு அறிவிப்பு இந்தியா

    மனித உரிமைகள் ஆணையம்

    அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - விரிவான அறிக்கையளிக்க 6 வார கால அவகாசம் விழுப்புரம்
    திருநெல்வேலியில் பற்களை பிடுங்கிய விவகாரம் - மனித உரிமை மீறல் ஆணையத்தில் புகார் தமிழ்நாடு
    திருநெல்வேலியில் பற்களை பிடுங்கிய விவகாரம் - சிசிடிவி காட்சிகள் மாயம் திருநெல்வேலி
    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - மனித உரிமை ஆணையத்தில் மேலும் 2 புகார் மனு விசாரணைக்கு ஏற்பு திருநெல்வேலி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025