NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 2ம் கட்ட கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    2ம் கட்ட கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார்
    2ம் கட்ட கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார்

    2ம் கட்ட கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார்

    எழுதியவர் Nivetha P
    Nov 10, 2023
    02:53 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாட்டில் கடந்த செப்டம்பர் 15ம்.,தேதி முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமை தொகை வழங்கும் திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார்.

    இந்த திட்டத்திற்கு கிட்டத்தட்ட 1.70 வரையிலான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் ஒரு கோடியே 6 லட்சத்தி 50 ஆயிரம் விண்ணப்பங்கள் தகுதியானவை என்று தேர்வு செய்யப்பட்டது.

    அவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இத்திட்டம் மூலம் மாதந்தோறும் அவர்களது வங்கிக்கணக்கில் நேரடியாக ரூ.1,000 தமிழக அரசால் செலுத்தப்படுகிறது.

    இந்நிலையில் இந்த உதவி தொகைக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் இ-சேவை மையத்திற்கு சென்று மேல்முறையீடு செய்யலாம் என்று மாநில அரசு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டது.

    இதனையடுத்து 11 லட்சத்து 85 ஆயிரம் பெண்கள் இத்திட்டத்திற்காக மேல்முறையீடு செய்துள்ளனர் என்று தகவல்கள் வெளியானது.

    தொகை 

    விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றினார் முதல்வர் 

    அதனுள் 7 லட்சத்து 35 ஆயிரத்து 58 விண்ணப்பங்கள் தகுதியுடையதாக தேர்வுச்செய்யப்பட்டது.

    அதன்படி ஏற்கனவே ரூ.1000 உரிமை தொகை வழங்கப்படும் ஒரு கோடியே 6 லட்சத்தி 50 ஆயிரம் மகளிர்களோடு சேர்த்து புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள 7 லட்சத்து 35 ஆயிரத்து 58 மகளிருக்கும் இம்மாத தொகை ரூ.1,000'ஐ வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு முன்னதாக இத்தொகையினை வழங்க முதல்வர் கூறியதன்பேரில், மொத்தம் ஒரு கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்தி 300 பேருக்கு அவர்களது வங்கிக்கணக்கில் ரூ.1,000 நேற்று(நவ.,9)வரவு வைக்கப்பட்டது.

    இதனிடையே இத்திட்டத்தின் 2ம்-கட்ட ஆரம்பவிழா இன்று(நவ.,10)சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.

    இதில் கலந்துக்கொண்டு 2ம்-கட்ட ரூ.1,000 உரிமை தொகை வழங்கும் திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்து உரையாற்றியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மு.க ஸ்டாலின்
    மாநில அரசு
    சென்னை

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    மு.க ஸ்டாலின்

    மகளிர் உரிமை தொகையில் பிடித்தம் செய்ய கூடாது - வங்கிகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்  தமிழக அரசு
    கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு
    மெட்ரோ பணிகளை நிறுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு மெட்ரோ
    துருக்கியில் சிகிச்சைப்பெறும் குழந்தை-சென்னைக்கு அழைத்துவர முதல்வர் ரூ.10 லட்சம் நிதியுதவி தமிழ்நாடு

    மாநில அரசு

    தமிழகத்தில் 20 மாதங்களில் 444 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் - அறநிலையத்துறை அமைச்சர் தமிழ்நாடு
    முதலமைச்சருக்கு ஷூவை பரிசாக வழங்கி சவால் விட்ட பெண் ஆந்திரா
    சென்னையில் பேனா நினைவு சின்னம்-மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு மத்திய அரசு
    வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2500 - சத்தீஸ்கர் மாநில அரசு அறிவிப்பு இந்தியா

    சென்னை

    ஆளுநர் வாகனம் மீது தாக்குதல் நடத்தியதாக எழுந்த புகார் தவறானது - ஏடிஜிபி அருண் விளக்கம்  காவல்துறை
    தீபாவளி பண்டிகை - சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்த அறிவிப்பு வெளியானது  தீபாவளி
    சிறை நூலகங்களுக்கு புத்தகங்களை நன்கொடையாக வழங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறை
    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது - போலீசார் அதிரடி  கம்யூனிஸ்ட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025