NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருவண்ணாமலை கார்த்திகை தீபம் திருநாள் - 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்
    அடுத்த செய்திக் கட்டுரை
    திருவண்ணாமலை கார்த்திகை தீபம் திருநாள் - 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்
    திருவண்ணாமலை கார்த்திகை தீபம் திருநாள் - 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

    திருவண்ணாமலை கார்த்திகை தீபம் திருநாள் - 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

    எழுதியவர் Nivetha P
    Nov 21, 2023
    07:18 pm

    செய்தி முன்னோட்டம்

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபம் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் 10 நாட்கள் நடைபெறும்.

    அதன்படி, இந்தாண்டிற்கான திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

    இதன் கடைசி தினமான 26ம் தேதியன்று இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் ஆலைய கருவறையில் அதிகாலை 4 மணிக்கும்,

    மகா தீபம் மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறமுள்ள 2,668 அடி உயரம் கொண்ட அண்ணாமலையார் மலை மீது ஏற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

    இந்த நிகழ்வில் பங்கேற்று சாமியை தரிசனம் செய்ய உலகம் முழுவதுமிருந்து 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பேருந்துகள் 

    திருவண்ணாமலை நகரின் 9 சாலைகளில் தற்காலிக பேருந்து நிலையங்கள்

    இதற்கான முன்னேற்பாடுகளை தற்போது திருவண்ணாமலை கோயில் நிர்வாகம் மற்றும் காவல்துறை மேற்கொண்டு வருகிறது.

    இதன் ஓர் பகுதியாக திருவண்ணாமலை நகரின் 9 சாலைகளில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இந்த திருவிழாவையொட்டி திருவண்ணாமலைக்கு பயணம் மேற்கொள்ளும் பக்தர்களின் வசதிக்காக வரும் நவம்பர் 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

    இந்த சிறப்பு பேருந்துகளானது சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பிற முக்கிய நகரங்கள் மற்றும் பெங்களூர், புதுச்சேரி உள்ளிட்ட வெளிமாநிலங்கள் இடையே இயக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    கோபுரங்களை சுத்தம் செய்யும் பணி 

    கார்த்திகை தீபம் வருவதையொட்டி திருவண்ணாமலை கோவில் கோபுரங்களை சுத்தம் செய்யும் பணியை தமிழ்நாடு “திமுக அரசு” செய்துவருகிறது...!!#DMK #DMKITWING #BJP #admk pic.twitter.com/oyP5cC0Pzf

    — Rise Media (@Risemedia_of) November 21, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருவண்ணாமலை
    திருவிழா

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    திருவண்ணாமலை

    திருவண்ணாமலையில் கார்த்திகைத் தீபத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாட்டம் பர்வதமலை
    பர்வதமலையில் சாலை மற்றும் ரோப் கார் வசதி அமைக்க திட்டம் - ட்ரோன் கேமரா மூலம் ஆய்வு பர்வதமலை
    பூட்டை உடைத்து ஒடுக்கப்பட்ட மக்களை கோவிலுக்குள் அழைத்து சென்ற மாவட்ட ஆட்சியர் தமிழ்நாடு
    திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் இயந்திரங்களில் கொள்ளை - தனிப்படைகள் அமைத்து காவல்துறை தேடல் காவல்துறை

    திருவிழா

    கிருஷ்ணகிரி எருதுவிடும் விழா கலவரம்-வாலிபரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்த எஸ்.பி. விளக்கம் காவல்துறை
    பழனி முருகர் கோயில் தைப்பூசத் திருவிழா - தேரோட்டத்தை முன்னிட்டு குவியும் பக்தர்கள் தமிழ்நாடு
    இன்று மஹாவீரர் ஜெயந்தி: இந்த நாளை பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள் இந்தியா
    உதவியாளரை தனது காலணியை எடுக்க சொன்ன கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025