NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட பின்னர் தஹாவூர் ராணாவை 18 நாள் காவலில் எடுத்தது NIA
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட பின்னர் தஹாவூர் ராணாவை 18 நாள் காவலில் எடுத்தது NIA
    தஹாவூர் ராணாவை 18 நாள் காவலில் எடுத்தது NIA

    இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட பின்னர் தஹாவூர் ராணாவை 18 நாள் காவலில் எடுத்தது NIA

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 11, 2025
    08:46 am

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட தஹாவூர் ராணாவை NIA காவலில் 18 நாள் வைக்க சிறப்பு NIA நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

    2008 மும்பை தாக்குதலில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்ட ராணா, நேற்று மாலை 6.30 மணியளவில் சிறப்பு விமானத்தில் டெல்லி வந்தார்.

    அவர் இந்தியாவில் தரையிறங்கியதும் அவரை NIA கைது செய்தது.

    அதிகாரபூர்வ அறிக்கையில் தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) அவரது கைது நடவடிக்கையை உறுதிப்படுத்தி,"தேவையான அனைத்து சட்ட நடைமுறைகளையும் முடித்த பிறகு, விமானத்தில் இருந்து வெளிவந்த சிறிது நேரத்திலேயே, பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்த கனடிய நாட்டவரான ராணாவை கைது செய்தது" தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நாடுகடத்தல், 166 பேர் கொல்லப்பட்ட 26/11 தாக்குதல்கள் தொடர்பான இந்தியாவின் விசாரணையின் ஒரு பகுதியாகும்.

    காவல்

    கைதானதும் இரவோடு இரவாக காவலில் எடுக்கப்பட்ட ராணா

    கைதிற்கு பிறகு, வியாழக்கிழமை இரவு டெல்லியில் உள்ள பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் சிறப்பு NIA நீதிபதி முன் ராணா ஆஜர்படுத்தப்பட்டார்.

    மின்னஞ்சல்கள் உள்ளிட்ட ஆதாரங்களை ஆதாரமாகக் கொண்டு, NIA ராணாவை 20 நாள் காவலில் வைக்கக் கோரியது.

    மேலும், பயங்கரவாத செயல்களைச் செய்ய மற்ற சதிகாரர்களுடன் ராணா குற்றவியல் சதியில் ஈடுபட்டதாக NIA கூறியது.

    அவரது கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் 18 நாள் காவலுக்கு உத்தரவிட்டது.

    தற்போது அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், அங்கு அவர் தங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிக்கப்பட்டுள்ளன.

    ராணா நாடு கடத்தப்படுவதைக் கருத்தில் கொண்டு மத்திய சிறையைச் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    நாடுகடத்தல்

    லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து நாடுகடத்தப்பட்ட ராணா

    லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து சிறப்பு விமானத்தில் மூத்த அதிகாரிகள் அடங்கிய தேசிய பாதுகாப்பு காவல்படை (NSG) மற்றும் NIA குழுக்களால் ராணா புது டெல்லிக்கு அழைத்து வரப்பட்டார்.

    வியன்னாவை தளமாகக் கொண்ட ஒரு சார்ட்டர் சேவையிலிருந்து வாடகைக்கு எடுக்கப்பட்ட கல்ஃப்ஸ்ட்ரீம் G550 ஜெட் விமானத்தைப் பயன்படுத்தி இந்த நாடுகடத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    இந்த ஜெட் விமானம் புதன்கிழமை அமெரிக்காவிலிருந்து புறப்பட்டது. அதே நாளில் இரவு 9.30 மணிக்கு ருமேனியாவின் புக்கரெஸ்டில் தரையிறங்கியது.

    விமானம் ருமேனிய தலைநகரில் கிட்டத்தட்ட 11 மணி நேரம் நின்றது.

    பின்னர் அதன் நீண்டதூர பயணத்தின் இறுதிப் கட்டத்தை மீண்டும் தொடங்கியது.

    வியாழக்கிழமை காலை 8.45 மணிக்கு (IST) கல்ஃப்ஸ்ட்ரீம் புக்கரெஸ்டிலிருந்து புறப்பட்டு மாலை 6.30 மணியளவில் டெல்லியில் தரையிறங்கியது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தஹாவூர் ராணா
    அமெரிக்கா
    மும்பை
    புலனாய்வு

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    தஹாவூர் ராணா

    16 ஆண்டு காலமாக காத்திருந்த நீதி: 26/11 சதிகாரர் தஹாவூர் ராணா இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டார் இந்தியா

    அமெரிக்கா

    இந்தியாவில் 'BOTகள்' செய்த 2,000 விசா நியமனங்களை அமெரிக்கா ரத்து செய்துள்ளது விசா
    வெளிநாட்டு மாணவர்கள் பலருக்கும் தாங்களே நாட்டைவிட்டு வெளியேற அமெரிக்க அரசு உத்தரவு; காரணம் என்ன? இந்தியர்கள்
    டிரம்ப் எச்சரிக்கையால் ஆத்திரம்; ஏவுகணைகளுடன் தாக்குதலுக்கு தயாராகும் ஈரான் ஈரான்
    மூன்றாவது முறையாக பதவியேற்பதற்கான 'வழிகளை' பரிசீலிக்கும் டிரம்ப்: அரசியலமைப்புப்படி அது சாத்தியமா? டொனால்ட் டிரம்ப்

    மும்பை

    மௌன போராட்டத்தில் குதித்த SEBI ஊழியர்கள்; SEBI தலைவர் மாதபி புச் ராஜினாமா செய்யவேண்டுமென கோரிக்கை செபி
    நடிகை மலைக்கா அரோராவின் தந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை என்ன தெரிவிக்கிறது? பாலிவுட்
    உண்மை சரிபார்ப்பு குழுக்களை அமைக்கும் மத்திய அரசின் சட்டத் திருத்தம் செல்லாது; உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு மத்திய அரசு
    கடும் மழையிலும் உணவை டெலிவெரி செய்த சோமாட்டோ ஊழியர்; இணையத்தில் குவியும் பாராட்டு சோமாட்டோ

    புலனாய்வு

    சென்னையிலுள்ள பிரபல நகைக்கடையில் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை சோதனை சென்னை
    சென்னை விமான நிலையத்தில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்  சென்னை
    ராமஜெயம் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்ட நபர் திடீர் கொலை - அதிர்ச்சியில் திருச்சி  திருச்சி
    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - சிபிஐ விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு  தூத்துக்குடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025