NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 63 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை
    63 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை
    இந்தியா

    63 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை

    எழுதியவர் Nivetha P
    August 29, 2023 | 07:51 pm 0 நிமிட வாசிப்பு
    63 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை
    63 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை

    கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் புதுச்சேரி மாநிலம் பாகூர் என்னும் பகுதியினை சேர்ந்த 63 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு சென்ற கடலூர் பள்ளிப்பட்டு என்னும் கிராமத்தினை சேர்ந்த சிலம்பரசன்(25) என்னும் வாலிபர் வேலையில் ஈடுபட்டிருந்த மூதாட்டியை கடுமையாக தாக்கி அவரிடமிருந்து பணம், மொபைல் போன் உள்ளிட்டவற்றை பறித்துக்கொண்டதோடு, மிக கொடூரமாக அந்த மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இத்தகவல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அந்த மூதாட்டி பாகூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

    இந்திய தண்டனை சட்டப்பிரிவு 376(2)ன்படி தண்டனை 

    மூதாட்டி அளித்த புகாரின்பேரில் காவல்துறை அந்த வாலிபர் மீது வழக்குபதிவு செய்தனர் என்று கூறப்படுகிறது. மேலும், காவல்துறையினர் அவர் மீது கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குகளை பதிவு செய்துள்ளனர். வாலிபர் சிலம்பரசனையும் காவல்துறை கைது செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. தொடர்ந்து, இதன் மீதான விசாரணை இன்றும்(ஆகஸ்ட்.,29)நடந்த நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த வழக்கினை விசாரித்த புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் நீதிமன்ற நீதிபதி இளவரசன், சிலம்பரசன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்ட்டுள்ளதால், இந்திய தண்டனை சட்டப்பிரிவு 376(2)ன்படி, ஆயுள் தண்டனையும், ரூ.5,000 அபாரதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    பலாத்காரம்
    கொள்ளை
    புதுச்சேரி
    கைது

    பலாத்காரம்

    நண்பனின் 14 வயது மகளுக்கு மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்த கொடூரன்  இந்தியா
    நண்பனின் மகளை பலமுறை பலாத்காரம் செய்த அரசு அதிகாரி: யாரிந்த பிரேமோதய் காக்கா? டெல்லி
    பலாத்காரத்தால் கர்ப்பமான பெண்: கருவை கலைக்கூடாது என்று உத்தரவிட்ட நீதிபதியை வெளுத்து வாங்கிய உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    நண்பனின் மகளை பல மாதங்களாக பலாத்காரம் செய்த அரசு அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை டெல்லி

    கொள்ளை

    திருச்சியை உறையவைத்த லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம், பாகம் 1 - க்ரைம் ஸ்டோரி க்ரைம் ஸ்டோரி
    ரூ.8½ கோடி கொள்ளையடித்த தம்பதியை ஜூஸ் கொடுத்து மடக்கிய போலீஸ்  பஞ்சாப்
    சிங்கப்பூர் மாரியம்மன் கோவில் நகைகளை அடகு வைத்த அர்ச்சகர்-6 ஆண்டு சிறை  சிங்கப்பூர்

    புதுச்சேரி

    14 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  தமிழ்நாடு
    9 தமிழக மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு  தமிழ்நாடு
    13 தமிழக மாவட்டங்களுக்கு கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை  தமிழ்நாடு
    10 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  தமிழ்நாடு

    கைது

    ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பு மனுதாக்கல் செந்தில் பாலாஜி
    மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜி - செப்டம்பர் 15ம்தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு செந்தில் பாலாஜி
    நகையால் பறிபோன ஆசிரியை உயிர், பின்னணி என்ன? - க்ரைம் ஸ்டோரி க்ரைம் ஸ்டோரி
    அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கைது அமெரிக்கா
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023