NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கோவை மாவட்டம் வால்பாறை அரசு பள்ளி மாணவர்கள் 24 பேருக்கு வாந்தி, மயக்கம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கோவை மாவட்டம் வால்பாறை அரசு பள்ளி மாணவர்கள் 24 பேருக்கு வாந்தி, மயக்கம் 
    கோவை மாவட்டம் வால்பாறை அரசு பள்ளி மாணவர்கள் 24 பேருக்கு வாந்தி, மயக்கம்

    கோவை மாவட்டம் வால்பாறை அரசு பள்ளி மாணவர்கள் 24 பேருக்கு வாந்தி, மயக்கம் 

    எழுதியவர் Nivetha P
    Apr 28, 2023
    01:13 pm

    செய்தி முன்னோட்டம்

    கோவை மாவட்டம் வால்பாறையில் ஸ்டேன்மோர் சந்திப்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது.

    இங்கு 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 60 மாணவ-மாணவியர்கள் படித்து வருகிறார்கள்.

    அதன்படி நேற்று(ஏப்ரல்.,27)பள்ளிக்கு 45 மாணவர்கள் வருகைத்தந்தாக கூறப்படுகிறது.

    இவர்கள் வழக்கம்போல் மதியம் பள்ளியில் உணவை உட்கொண்டுள்ளார்கள்.

    பின்னர் 3.15மணியளவில் பள்ளியில் 24 மாணவ-மாணவியருக்கு திடீரென வாந்தி, மயக்கம், வயிற்று வலி, தலைவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டு அவதிப்பட்டுள்ளார்கள்.

    இதனையடுத்து பள்ளி தலைமை ஆசிரியை கலைச்செல்வி வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தகவலளித்துள்ளார்.

    அதன்பேரில், அங்கு வந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மாணவ-மாணவியர்களை சோதித்து பார்த்து சிகிச்சை அளித்தார்கள்.

    அதில் 24 மாணவர்கள் மட்டும் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    வாந்தி

    வாந்தி மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை 

    இதுகுறித்து அறிந்த பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து பாதிப்பில்லாத குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

    மீதிப்பேர் மருத்துவமனைக்கு பிள்ளைகளை காணச்சென்றனர்.

    பின்னர் இதுகுறித்து அறிந்த மாவட்ட தாசில்தார், நகராட்சி ஆணையாளர், நகராட்சி தலைவர் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு வந்து நிலவரம் குறித்து கேட்டறிந்தனர்.

    வீட்டிற்கு அழைத்துச்செல்லப்பட்ட மாணவர்களையும் மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    அதன்பின்னர் நலமாக இருந்த 27பேர் பெற்றோருடன் வீட்டிற்குச்சென்ற நிலையில், மிக சோர்வாக காணப்பட்ட 8பேர் மட்டும் தொடர்ந்து சிகிச்சைப்பெற்று வருகிறார்கள்.

    தற்போது மாணவ-மாணவியரின் வாந்தி மாதிரிகள் மற்றும் குடிநீர் பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்டுள்ளது.

    மாணவ-மாணவியரின் இந்த திடீர் வாந்தி,மயக்கத்திற்கு சத்துணவும், குடிநீரும் தான் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து மருத்துவர்கள் ஆராய்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கோவை
    அரசு மருத்துவமனை
    பள்ளி மாணவர்கள்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    கோவை

    சிவபெருமானின் ஏழு மலையாக கருதப்படும் வெள்ளியங்கிரி மலையின் சிறப்புகள் தமிழ்நாடு
    நீர்நிலைகளை மேம்படுத்த ரூ.10 லட்சத்தொகை-விருது தொகையை தானம் செய்த 'சிறுதுளி' அறங்காவலர் தமிழ்நாடு
    கின்னஸ் சாதனைக்கு முயற்சி-15 மொழிகளை கற்றுத்தேர்ந்த இளம்பெண் கிருபாஷிணி தமிழ்நாடு
    பொள்ளாச்சி பாலியல் சம்பவம்: இபிஎஸுக்கு எதிராக வழக்கு தமிழ்நாடு

    அரசு மருத்துவமனை

    தமிழக அரசு மருத்துவமனைகளில் நாளை முதல் முகக்கவசம் கட்டாயம் - மா.சுப்ரமணியம் கொரோனா
    நாமக்கல் மாவட்டம் விஷ ஊசிப்போட்டு 300 பேர் கொலை?-அரசு மருத்துவமனையில் விசாரணை  காவல்துறை
    தூத்துக்குடியில் கிராம நிர்வாக அதிகாரி படுகொலை - 4 தனிப்படை அமைப்பு  தூத்துக்குடி
    சேலம் அரசு மருத்துவமனை ஆவின் பாலகத்தில் திடீர் சோதனை நடத்திய அதிகாரிகள்  சேலம்

    பள்ளி மாணவர்கள்

    சார், மேடம் என்று அழைக்கக்கூடாது: கேரளாவில் உத்தரவு இந்தியா
    இந்திய பணக்காரர்களில் 1% நபர்களிடம், நாட்டின் 40% சொத்து உள்ளது: ஆக்ஸ்ஃபேம் கவலை! இந்தியா
    தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கான புதிய கட்டுப்பாடுகள் குறித்த அரசாணை வெளியீடு தமிழ்நாடு
    தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இலவச கல்விக்கான மாணவர் சேர்க்கை - ஆர்டிஈ தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025