NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை எண்ணூர் கடற்பகுதியில் 20 சதுர கி.மீ.,பரப்பளவில் பரவிய கச்சா எண்ணெய்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை எண்ணூர் கடற்பகுதியில் 20 சதுர கி.மீ.,பரப்பளவில் பரவிய கச்சா எண்ணெய்
    சென்னை எண்ணூர் கடற்பகுதியில் 20 சதுர கி.மீ.,பரப்பளவில் பரவிய கச்சா எண்ணெய் - ஆய்வில் தகவல்

    சென்னை எண்ணூர் கடற்பகுதியில் 20 சதுர கி.மீ.,பரப்பளவில் பரவிய கச்சா எண்ணெய்

    எழுதியவர் Nivetha P
    Dec 11, 2023
    03:42 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை மாநகரை அண்மையில் மிக்ஜாம் புயல் பெருமளவில் தாக்கி பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.

    அதிலிருந்து இன்னமும் முழுமையாக சென்னை மீண்டு வரவில்லை.

    இந்நிலையில் இந்த புயலின் பொழுது சென்னை எண்ணூர் பகுதியில் கொசஸ்தலையாற்றில் சிபிசிஎல் ஆலையில் இருந்து கச்சா எண்ணெய் வெளியேறி பரவியுள்ளது.

    இந்த எண்ணெய் பரவல் சுற்றுச்சூழல் மற்றும் மீன்கள் இனப்பெருக்கத்திற்கு மிகப்பெரிய ஆபத்த்தை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.

    மேலும் கடல்நீரில் கச்சா எண்ணெய் பரவிய காரணத்தினால் அப்பகுதி மக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    இதன் காரணமாக இந்திய கடற்படை கச்சா எண்ணெய் பரவிய கடற்பகுதியினை ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்துள்ளது என்று கூறப்படுகிறது.

    இந்த ஆய்வில் ஓர் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

    ஆய்வு 

    நிலப்பகுதியில் பரவியுள்ள கச்சா எண்ணெயினை அகற்றும் பணி நடந்து வருவதாக தகவல் 

    அதன்படி ஹெலிகாப்டர் கொண்டு ஆய்வு மேற்கொண்டதில் கொசஸ்தலை ஆற்றின் முகத்துவாரத்தில் இருந்து காசிமேடு துறைமுகம் வரையில் சுமார் 20 சதுர கி.மீ.,பரப்பளவிற்கு கச்சா எண்ணெய் பரவியுள்ளது என்பது தெரியவந்துள்ளது.

    இதற்கிடையே கடல்நீரில் இருந்து கச்சா எண்ணெய்யை கப்பல் கொண்டு அகற்றும் பணிகள் நடந்து வருவதாக கடலோர காவல்படை கூறியுள்ளது.

    அதே சமயம், நிலப்பகுதியில் பரவியுள்ள கச்சா எண்ணெயினை அகற்றும் பணியில் மாநில அரசு மாசு கட்டுப்பாடு வாரியம் ஈடுப்பட்டுள்ளது.

    இவர்களுக்கு உதவ கடலோர காவல்படை நிபுணர்களும் அனுப்பப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    கச்சா எண்ணெய் பரவியுள்ள எண்ணூர் முதல் காசிமேடு வரையிலான பகுதிகள் மீன்படி பகுதிகள் என்பதால் இது மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்தக்கூடும் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    ஹெலிகாப்டர் மூலம் மேற்கொண்ட ஆய்வின் பதிவு 

    கொற்றலை ஆற்றின் முகத்துவாரம் முதல் காசிமேடு துறைமுகம் வரையில் 20 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு எண்ணெய் கசிவு காணப்பட்டுள்ளதாக @IndiaCoastGuard நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.#oilspill #Ennore #cpcl #tnpcb pic.twitter.com/G2sIBI4tfC — Satheesh lakshmanan 🖋‏‎‎சதீஷ் லெட்சுமணன் (@Saislakshmanan) December 10, 2023

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    கடற்படை
    மாநில அரசு

    சமீபத்திய

    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    சென்னை

    சென்னை: மீண்டும் இயங்க தொடங்கியது விமானங்கள்; மின் விநியோகம் திரும்பிய பகுதிகளின் விவரங்கள்  மின்சார வாரியம்
    சென்னை எம்எல்ஏக்கள் வெளியில் வந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்- விஷால் வலியுறுத்தல் விஷால்
    மிக்ஜாம் புயல் எதிரொலி - சென்னை மாநகர பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது  கனமழை
    மிக்ஜாம் புயல் எதிரொலி- சென்னை உட்பட 4 மாவட்டங்களில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடுமுறை

    கடற்படை

    வரலாறு படைத்த INS விக்ராந்த்: முதன்முதலில் விகாரந்த் கப்பலில் தரையிறங்கிய ஜெட் இந்தியா
    மீன்பிடி பைபர் படகில் கடத்திவரப்பட்டு கடலில் வீசப்பட்ட மர்ம பொருள்-விசாரணையில் தங்கம் என தகவல் இலங்கை
    ராமேஸ்வர கடலில் வீசப்பட்ட கடத்தல் தங்கக்கட்டிகள்-12 கிலோ தங்கம் பறிமுதல் ராமேஸ்வரம்
    தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படை - மத்தியமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் இலங்கை

    மாநில அரசு

    தமிழகத்தில் 20 மாதங்களில் 444 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் - அறநிலையத்துறை அமைச்சர் தமிழ்நாடு
    முதலமைச்சருக்கு ஷூவை பரிசாக வழங்கி சவால் விட்ட பெண் ஆந்திரா
    சென்னையில் பேனா நினைவு சின்னம்-மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு மத்திய அரசு
    வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2500 - சத்தீஸ்கர் மாநில அரசு அறிவிப்பு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025