NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை IITஇல் தற்கொலைக்கு முயன்ற 2 மாணவர்களில் ஒருவர் பலி
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை IITஇல் தற்கொலைக்கு முயன்ற 2 மாணவர்களில் ஒருவர் பலி
    22 வயது மாணவர், IIT-மெட்ராஸ் வளாகத்தில் உள்ள தனது விடுதி அறையில் தூக்கு போட்டு உயிரிழந்தார்

    சென்னை IITஇல் தற்கொலைக்கு முயன்ற 2 மாணவர்களில் ஒருவர் பலி

    எழுதியவர் Sindhuja SM
    Feb 14, 2023
    07:22 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னையில் உள்ள IIT-மெட்ராஸில் முதுகலை பொறியியல் மாணவர் ஒருவர் அவரது விடுதி அறையில் இறந்து கிடந்ததாக போலீஸார் இன்று(பிப் 14) தெரிவித்துள்ளனர்.

    எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் எம்எஸ் படித்து வரும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த 22 வயது மாணவர், IIT-மெட்ராஸ் வளாகத்தில் உள்ள தனது விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

    மற்றொரு மாணவர் தன் நண்பரை காணவில்லை என்று விடுதி காப்பாளரிடம் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து, சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

    உயிரிழந்தவர் தங்கியிருந்த அறையின் கதவைத் திறந்து பார்த்தபோது, அவர் தூக்கில் தொங்கி கொண்டிருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

    இந்தியா

    தற்கொலைக்கு முயன்ற இன்னொரு மாணவர்

    குடும்ப பிரச்சனைகளால் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கோட்டூர்புரம் போலீஸார் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதே போல், இன்னொரு சம்பவமும் அங்கு நடந்திருக்கிறது.

    கர்நாடகாவைச் சேர்ந்த இந்த கல்லூரியின் மற்றொரு மாணவர், தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்ய முயன்றிருக்கிறார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த இரண்டு சம்பவங்கள் குறித்து IIT மெட்ராஸ் தரப்பில் இருந்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    தமிழ்நாடு

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    சென்னை

    போகி: மாசு படுவதை தடுக்க பழைய பொருட்களை வாங்கும் மாநகராட்சி! தமிழ்நாடு செய்தி
    இந்தியாவில் பெண்கள் பணிபுரிய பாதுகாப்பான சூழலுள்ள நகரங்கள் பட்டியல் - சென்னை முதலிடம் இந்தியா
    சென்னையில் ஆளுநருக்கு எதிரான போஸ்டர்கள் திமுக
    புத்தக கண்காட்சி: சிறைவாசிகளுக்கு தானம் கொடுக்கலாம் தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழகத்தில் மின்சார கணக்கெடுப்பு தாமதமாவதால் பாதிக்கப்படும் மக்கள்-அதிக கட்டணம் செலுத்தவேண்டிய கட்டாயம் மாவட்ட செய்திகள்
    தமிழகத்தில் மழையால் சேதமடைந்த பயிர்களுக்கான நிவாரண தொகை ஏக்கருக்கு ரூ.35,000 கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் மு.க ஸ்டாலின்
    தமிழ்நாடு, நெல்லையப்பர் கோயிலில் பர்தா அணிந்த பெண் வருகை - இந்து முன்னணி வலியுறுத்தல் இந்தியா
    வேங்கைவயல் வழக்கில் முன்னேற்றம் இருக்கிறது: சிபிசிஐடி தகவல் வேங்கை வயல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025