NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / IIT பாம்பேயில் மாணவர் உயிரிழப்பு: சாதிய பாகுபாடுகளால் தற்கொலை செய்து கொண்டாரா
    அடுத்த செய்திக் கட்டுரை
    IIT பாம்பேயில் மாணவர் உயிரிழப்பு: சாதிய பாகுபாடுகளால் தற்கொலை செய்து கொண்டாரா
    SC/ST மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் அனைவரிடமிருந்தும் பெரும் துன்புறுத்தலையும் பாகுபாட்டையும் எதிர்கொள்கின்றனர்: APPSC

    IIT பாம்பேயில் மாணவர் உயிரிழப்பு: சாதிய பாகுபாடுகளால் தற்கொலை செய்து கொண்டாரா

    எழுதியவர் Sindhuja SM
    Feb 13, 2023
    06:28 pm

    செய்தி முன்னோட்டம்

    IIT பாம்பேயில் 18 வயது மாணவர் ஒருவர், நேற்று(பிப் 12) பிற்பகல் கல்லூரி வளாகத்தில் உள்ள தனது விடுதி கட்டிடத்தின் ஏழாவது மாடியில் இருந்து குதித்து இறந்தார்.

    தற்கொலைக் கடிதம் எதுவும் இல்லை என்பதால் போலீஸார் விபத்து என்று வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    இதற்கிடையில், பட்டியல் சாதி மாணவர்களுக்கு எதிரான பாகுபாடு காரணமாக அவர் தற்கொலைக்குத் தூண்டப்பட்டதாக ஒரு மாணவர் குழு குற்றம் சாட்டியுள்ளது.

    BTech மாணவர் தர்ஷன் சோலங்கி அகமதாபாத்தைச் சேர்ந்தவர் என்று போலீசார் தெரிவித்தனர்.

    அவர் மூன்று மாதங்களுக்கு முன்பு கல்லூரியில் சேர்ந்தார் என்றும் அவரது முதல் செமஸ்டர் தேர்வுகள் சனிக்கிழமை முடிவடைந்தது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    மும்பை

    அம்பேத்கர் பெரியார் புலே படிப்பு வட்டத்தின்(APPSC) ட்வீட்

    படிப்பு சுமை காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டாரா என்பதை பவாய் போலீசார் கண்டுபிடிக்க முயன்று வருகின்றனர்.

    IIT பாம்பேவை சேர்ந்த அம்பேத்கர் பெரியார் புலே படிப்பு வட்டத்தின்(APPSC) ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கும் கருத்துகள்:

    3 மாதங்களுக்கு முன் IIT பாம்பேயில் BTech-க்காக சேர்ந்த தர்ஷன் சோலங்கி என்ற 18 வயது தலித் மாணவனின் இறப்புக்கு இரங்கல் தெரிவிக்கிறோம். இது ஒரு தனிப்பட்ட பிரச்சினை அல்ல, மாறாக ஒரு நிறுவன கொலை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

    தலித் பகுஜன் ஆதிவாசி மாணவர்களுக்கு உகந்த பாதுகாப்பான இடமாக கல்லூரியை மாற்றுவதற்கு நிறுவனம் அக்கறை காட்டவில்லை.

    முதலாம் ஆண்டு மாணவர்கள் இடஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்துக்களால் கேலி செய்யப்படுவதால் மிகவும் துன்புறுத்தப்படுகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    மும்பை

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    இந்தியா

    2 புதிய நீதிபதிகள்: முழு பலத்துடன் இனி இயங்க இருக்கும் உச்சநீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    தென் ஆப்ரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு 14-16 சிறுத்தைகள் இடமாற்றம்-மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ஆப்பிரிக்கா
    பிபிசியை தடை செய்ய கோரிய மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    தமிழகத்திலுள்ள ஜெயின் சுற்றுலாத்தலங்களுக்கு 5 நாள் பயணம் - தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் தமிழ்நாடு

    மும்பை

    செல்ல நாய்க்கு முன்னுரிமை கொடுத்து நடந்த அம்பானி வீட்டு விசேஷம் வைரல் செய்தி
    ஐஸ்வர்யா ராய் முதல் சச்சின் டெண்டுல்கர் வரை: அம்பானி வீட்டு விசேஷத்தில் பங்கு பெற்ற பிரபலங்களின் பட்டியல் ஐஸ்வர்யா ராய்
    விஸ்தாரா விமானத்தில் அரை நிர்வாணமாக தகராறு செய்த பயணி கைது இந்தியா
    மும்பையில் பொது இடத்தில் கணவன் மனைவி அடித்துக்கொள்ளும் வீடியோ: Couplegoals என்று வைரல் வைரல் செய்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025