NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / IIT பாம்பேயில் மாணவர் உயிரிழப்பு: சாதிய பாகுபாடுகளால் தற்கொலை செய்து கொண்டாரா
    IIT பாம்பேயில் மாணவர் உயிரிழப்பு: சாதிய பாகுபாடுகளால் தற்கொலை செய்து கொண்டாரா
    இந்தியா

    IIT பாம்பேயில் மாணவர் உயிரிழப்பு: சாதிய பாகுபாடுகளால் தற்கொலை செய்து கொண்டாரா

    எழுதியவர் Sindhuja SM
    February 13, 2023 | 06:28 pm 1 நிமிட வாசிப்பு
    IIT பாம்பேயில் மாணவர் உயிரிழப்பு: சாதிய பாகுபாடுகளால் தற்கொலை செய்து கொண்டாரா
    SC/ST மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் அனைவரிடமிருந்தும் பெரும் துன்புறுத்தலையும் பாகுபாட்டையும் எதிர்கொள்கின்றனர்: APPSC

    IIT பாம்பேயில் 18 வயது மாணவர் ஒருவர், நேற்று(பிப் 12) பிற்பகல் கல்லூரி வளாகத்தில் உள்ள தனது விடுதி கட்டிடத்தின் ஏழாவது மாடியில் இருந்து குதித்து இறந்தார். தற்கொலைக் கடிதம் எதுவும் இல்லை என்பதால் போலீஸார் விபத்து என்று வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதற்கிடையில், பட்டியல் சாதி மாணவர்களுக்கு எதிரான பாகுபாடு காரணமாக அவர் தற்கொலைக்குத் தூண்டப்பட்டதாக ஒரு மாணவர் குழு குற்றம் சாட்டியுள்ளது. BTech மாணவர் தர்ஷன் சோலங்கி அகமதாபாத்தைச் சேர்ந்தவர் என்று போலீசார் தெரிவித்தனர். அவர் மூன்று மாதங்களுக்கு முன்பு கல்லூரியில் சேர்ந்தார் என்றும் அவரது முதல் செமஸ்டர் தேர்வுகள் சனிக்கிழமை முடிவடைந்தது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    அம்பேத்கர் பெரியார் புலே படிப்பு வட்டத்தின்(APPSC) ட்வீட்

    படிப்பு சுமை காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டாரா என்பதை பவாய் போலீசார் கண்டுபிடிக்க முயன்று வருகின்றனர். IIT பாம்பேவை சேர்ந்த அம்பேத்கர் பெரியார் புலே படிப்பு வட்டத்தின்(APPSC) ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கும் கருத்துகள்: 3 மாதங்களுக்கு முன் IIT பாம்பேயில் BTech-க்காக சேர்ந்த தர்ஷன் சோலங்கி என்ற 18 வயது தலித் மாணவனின் இறப்புக்கு இரங்கல் தெரிவிக்கிறோம். இது ஒரு தனிப்பட்ட பிரச்சினை அல்ல, மாறாக ஒரு நிறுவன கொலை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தலித் பகுஜன் ஆதிவாசி மாணவர்களுக்கு உகந்த பாதுகாப்பான இடமாக கல்லூரியை மாற்றுவதற்கு நிறுவனம் அக்கறை காட்டவில்லை. முதலாம் ஆண்டு மாணவர்கள் இடஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்துக்களால் கேலி செய்யப்படுவதால் மிகவும் துன்புறுத்தப்படுகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    மும்பை
    மகாராஷ்டிரா

    இந்தியா

    இந்த வருடம் வறட்சி ஏற்படுவதற்கு வாய்ப்ப: நிபுணர்கள் எச்சரிக்கை வானிலை எச்சரிக்கை
    காஷ்மீரில் பனிப்பொழிவில் சிக்கிய கர்ப்பிணி-வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் பிரசவம் பார்த்த மருத்துவர்கள் ஜம்மு காஷ்மீர்
    அட்டகாசமான அம்சங்களுடன் Yamaha 2023 மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்! யமஹா
    மீண்டும் சர்ப்ரைஸ் கொடுத்த தங்கம் விலை! இன்றைய விலை விபரம்; தங்கம் வெள்ளி விலை

    மும்பை

    கூகுள் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - ஒருவர் கைது! கூகுள்
    மும்பை-டெல்லி விரைவு சாலையின் ஒரு பகுதியை திறந்து வைத்தார் பிரதமர் மோடி டெல்லி
    தங்கப் பல்லை வைத்து 15 வருடங்களுக்கு பிறகு திருடனை பிடித்த போலீஸ் இந்தியா
    அதானி குழும பிரச்சனை: செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் இந்தியா

    மகாராஷ்டிரா

    மகாராஷ்டிராவில் 512 கிலோ வெங்காயம் வெறும் ரூ.2 - விவசாயி அதிர்ச்சி இந்தியா
    உலகின் முதல் மூங்கில் விபத்து தடுப்பு மஹாராஷ்டிராவில் நிறுவப்பட்டுள்ளது: நிதின் கட்கரி இந்தியா
    5ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ஆபாச வீடியோக்களைக் காட்டிய ஆசிரியர் கைது இந்தியா
    மகாராஷ்டிரா பூஷன் விருது விழா: அதிக வெப்பத்தால் 11 பேர் உயிரிழப்பு இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023