NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / எருமை மாட்டிற்காக 16 வயது சிறுவன் அடித்து கொலை - ஜார்கண்ட் மாநிலத்தில் நேர்ந்த கொடூரம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    எருமை மாட்டிற்காக 16 வயது சிறுவன் அடித்து கொலை - ஜார்கண்ட் மாநிலத்தில் நேர்ந்த கொடூரம்
    எருமை மாட்டிற்காக 16 வயது சிறுவன் அடித்து கொலை - ஜார்கண்ட் மாநிலத்தில் நேர்ந்த கொடூரம்

    எருமை மாட்டிற்காக 16 வயது சிறுவன் அடித்து கொலை - ஜார்கண்ட் மாநிலத்தில் நேர்ந்த கொடூரம்

    எழுதியவர் Nivetha P
    Oct 24, 2023
    05:37 pm

    செய்தி முன்னோட்டம்

    ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள தும்கா மாவட்டம் சந்தாலி தோலாவி என்னும் பகுதியினை சேர்ந்த நண்பர்கள் 3 பேர் கால்பந்து போட்டியினை பார்வையிட சென்றுள்ளனர்.

    அவ்வாறு சைக்கிளில் சென்று விட்டு திரும்பி கொண்டிருக்கையில் ஹன்ஸ்திஹா என்னும் பகுதியருகே சாலையில் நின்று கொண்டிருந்த எருமை மாடு மீது மோதியதாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாக அப்பகுதியில் இருந்த மக்களுக்கும், சைக்கிளில் வந்த 3 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    இதனிடையே காயமுற்ற எருமையின் உரிமையாளருக்கு இழப்பீடு வழங்குவதாக சிறுவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

    எனினும் அக்கூட்டத்தில் இருந்த 4 பேர் சிறுவர்களை ஓயாமல் அடித்துள்ளனர்.

    கொலை 

    உயிரிழந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம் 

    இதில் 16 வயது சிறுவன் ஒருவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

    இதனையடுத்து அவரை அருகிலுள்ள சுகாதார மையத்திற்கு அழைத்து சென்று பரிசோதித்து பார்த்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

    இதனை தொடர்ந்து, ஒரு எருமை மாட்டின் மீது மோதிய காரணத்தினால் அடித்தே கொலை செய்யப்பட்ட அந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

    தங்கள் மகனை அடித்து கொன்ற குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்று கூறி அவர்கள் போராட்டம் செய்துள்ளனர்.

    மேலும் சாலை மறியலிலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறை, குற்றம்சாட்டப்பட்ட குற்றவாளிகள் 2 நாட்களுக்குள் கைது செய்யப்படுவார்கள் என்று உறுதியளித்துள்ளனர்.

    இதன் பின்னர் அவர்கள் போராட்டத்தினை கைவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கைது
    கொலை
    போராட்டம்
    கால்பந்து

    சமீபத்திய

    'கலாம்: இந்தியாவின் ஏவுகணை நாயகன்': டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கும் தனுஷ் தனுஷ்
    ஆப்பிள் ஏர்ப்ளே பிழை, ஐபோன்களை ஹேக் செய்யக்கூடியதாக ஆக்குகிறதாம்: எவ்வாறு பாதுகாப்பது?  ஆப்பிள்
    இந்த ஹோண்டா ஸ்கூட்டரின் விலை ₹12 லட்சம்: அதன் அம்சங்களை தெரிந்துகொள்ளுங்கள் ஹோண்டா
    உங்கள் ஆர்டர்களை, ட்ரோன்கள் மூலம் ஒரு மணி நேரத்தில் டெலிவரி செய்யும் அமேசான் அமேசான்

    கைது

    அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கைது அமெரிக்கா
    நகையால் பறிபோன ஆசிரியை உயிர், பின்னணி என்ன? - க்ரைம் ஸ்டோரி க்ரைம் ஸ்டோரி
    மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜி - செப்டம்பர் 15ம்தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு செந்தில் பாலாஜி
    ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பு மனுதாக்கல் செந்தில் பாலாஜி

    கொலை

    மும்பை கொடூர கொலை: குற்றம்சாட்டப்பட்டவருக்கு HIV பாசிட்டிவ் இந்தியா
    தாயின் உடலுடன் காவல்துறையில் சரணடைந்த மகள்: பெங்களூரில் பரபரப்பு  இந்தியா
    டிஜிட்டல் ஆதாரங்கள் சேகரிப்பதற்கான விதிகள் வகுக்க 4 வார கால அவகாசம் - உயர்நீதிமன்றம் உயர்நீதிமன்றம்
    மனைவியுடன் கள்ளத்தொடர்பு: நண்பனின் கழுத்தை அறுத்து ரத்தத்தை குடித்த கணவன் இந்தியா

    போராட்டம்

    2வது நாளாக தொடரும் ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம் - 2 ஆசிரியர்கள் மயக்கமடைந்ததால் பரபரப்பு தமிழ்நாடு
    கொரோனா காலத்தில் பணியாற்றிய ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப்பணி -அமைச்சர் மா.சுப்பிரமணியம் உறுதி தமிழக அரசு
    நிரந்தர பணி கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடும் ஒப்பந்த செவிலியர்கள் சென்னை
    வண்டலூர் உயிரியல் பூங்கா- ஒப்பந்த ஊழியர்கள் 3வது நாளாக உள்ளிருப்பு போராட்டம் இந்தியா

    கால்பந்து

    அடிடாஸ் நிறுவனத்துடன் 10 ஆண்டுகளுக்கு ஒப்பந்தத்தை நீடித்தது மான்செஸ்டர் யுனைடெட் மான்செஸ்டர் யுனைடெட்
    பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து தொடர்: இன்று அடுத்த சுற்றுக்கு முன்னேறும் அணிகள் எவை? கால்பந்து செய்திகள்
    இந்திய கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரியின் 39வது பிறந்தநாள் இன்று; குவியும் வாழ்த்துக்கள் கால்பந்து செய்திகள்
    அதிக முறை ஹெட் கோல் அடித்து சாதனை படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ கிறிஸ்டியானோ ரொனால்டோ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025