மேற்கு ஆசிய மோதலில் இதுவரை 16 இந்தியர்கள் உயிரிழப்பு: மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்
செய்தி முன்னோட்டம்
மேற்கு ஆசிய பிராந்தியத்தில் ஈரானுக்கும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும் இடையே தீவிரமடைந்து வரும் போர் சூழலில் சிக்கி இதுவரை 10 மாலுமிகள் உட்பட 16 இந்தியர்கள் உயிரிழந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநிலங்களவையில் சிபிஐ(எம்) நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் எழுப்பிய கேள்விக்கு வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் பதிலளித்தார். இந்த மோதல்களில் ஓமனில் 8 பேர், ஐக்கிய அரபு அமீரகத்தில் 4 பேர், குவைத்தில் 2 பேர், சவுதி அரேபியா மற்றும் ஈராக்கில் தலா ஒருவர் என மொத்தம் 16 இந்தியர்கள் பலியாகியுள்ளனர். மேலும், பல்வேறு அரபு நாடுகளில் நடைபெற்ற தாக்குதல்களில் 75 இந்தியர்கள் காயமடைந்துள்ளனர்.
தூதரக உதவி
பாதிக்கப்பட்டவர்களுக்கு தூதரக உதவி
போர் மோதல்கள் தவிர்த்து, கத்தாரின் ராஸ் லஃப்பான் எரிவாயு மையத்தில் ஏற்பட்ட விபத்தில் தனியாக 12 இந்தியர்கள் உயிரிழந்தனர்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான உதவிகளையும், உயிரிழந்தவர்களின் உடல்களை தாய்நாட்டிற்கு விரைவாகக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளையும் இந்தியத் தூதரகம் மேற்கொண்டு வருகிறது.
போர் மண்டலத்தில் உயிரிழந்த மாலுமிகளின் குடும்பங்களுக்குக் கடல்சார் நல நிதி திட்டத்தின் கீழ் ₹10 லட்சம் நிவாரணம் வழங்கப்படுகிறது.
மேலும், தொழிற்சங்க ஒப்பந்தங்களின் கீழ் தகுதியுள்ள அதிகாரிகளுக்கு ₹12 லட்சமும், ஊழியர்களுக்கு ₹10 லட்சமும் கூடுதல் இழப்பீடாக வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
டெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் இதுவரை 2,557 இந்தியர்கள் ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் வழியே பாதுகாப்பாகத் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.