NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னை ECR -இல் புதிய உயர்மட்ட மேம்பாலம்: அமைச்சர் தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னை ECR -இல் புதிய உயர்மட்ட மேம்பாலம்: அமைச்சர் தகவல்
    இந்த மேம்பாலம் 15 கி.மீ தூரத்திற்கு அமைக்கப்படும்

    போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னை ECR -இல் புதிய உயர்மட்ட மேம்பாலம்: அமைச்சர் தகவல்

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 20, 2024
    11:54 am

    செய்தி முன்னோட்டம்

    சென்னை ECRஇல் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க 15 கிமீ நீளத்திற்கு புதிய உயர்மட்ட மேம்பாலம்(elevated corridor) அமைக்கவிருப்பதாக மாநில நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்துள்ளார்.

    இந்த மேம்பாலத்தில், ஐந்து நுழைவு, வெளியேறும் வழிகளும், 15 கி.மீ தூரத்திற்கு டைடல் பார்க் சந்திப்பில் இருந்து உத்தண்டியில் முடிவடையும் வகையில் அமைக்கப்படும் எனவும் அறிவித்தார்.

    மேம்பாலத்தின் கட்டுமான பணிகள் 18 மாதங்களில் முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

    இந்த பாதையில், எல்பி ரோடு சந்திப்பு, திருவான்மியூர் ஆர்டிஓ, நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம் மற்றும் அக்கரை ஆகிய இடங்களில் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்கள் அமைக்கப்படும்.

    மேம்பால பணிகளுக்காக ரூ.1,075 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், இதில் ரூ.940 கோடி நிலம் கையகப்படுத்துவதற்காக செலவிடப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

    ட்விட்டர் அஞ்சல்

    புதிய உயர்மட்ட மேம்பாலம்

    #NewsUpdate | கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, 18 மாதங்களுக்குள் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தகவல்!#SunNews | #EastCoastRoad | #Thiruvanmiyur | #Uthandi | @evvelu pic.twitter.com/WsruwfQ5hr

    — Sun News (@sunnewstamil) August 20, 2024

    தகவல்

    ஆறுவழி சாலை அமைக்கவும் திட்டம்

    திருவான்மியூர் முதல் அக்கரை வரையிலான 10 கி.மீ., தூரத்துக்கு ஆறுவழிச்சாலை விரிவாக்கப்பணியை ஆய்வு செய்த அமைச்சர்.

    "அடுத்த ஆண்டு ஏப்ரல் 11ம் தேதிக்குள் அகலப்படுத்தும் பணி நிறைவடையும். சோழிங்கநல்லூர், பாலவாக்கம், கொட்டிவாக்கம் மற்றும் பிற கிராமங்களில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று, நிதி விநியோகிக்கப்படுகிறது" என அவர் கூறினார்.

    சுமார் 69,000 வாகனங்கள் டைடல் பார்க் மற்றும் உத்தண்டி இடையே 15 கிமீ நீளமுள்ள ECR ஐப் பயன்படுத்துகின்றன. கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக தற்போது இந்த தூரத்தை கடக்க 45 முதல் 60 நிமிடங்கள் ஆகிறது.

    இந்த நெரிசலை சமாளிக்கவே இந்த elevated corridor திட்டம் முன்மொழியப்பட்டது எனவும், இதனால் பயண நேரம் 20 நிமிடங்களாக குறைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    போக்குவரத்து
    நெடுஞ்சாலைத்துறை

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    சென்னை

    தங்கத்தின் விலை சவரனுக்கு 152 ரூபாய் உயர்வு  தங்கம் வெள்ளி விலை
    சென்னையில் ஆபரண தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்  தங்கம் வெள்ளி விலை
    பெண்கள் டெஸ்ட்: SAக்கு எதிரான இந்தியாவின் வெற்றியில் பதிவு செய்யப்பட்ட சாதனைகள் மகளிர் கிரிக்கெட்
    சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்வு  தங்கம் வெள்ளி விலை

    போக்குவரத்து

    போக்குவரத்து ஊழியர்கள் ஸ்ட்ரைக்: நாளை பேருந்துகள் இயங்கும் என அமைச்சர் உறுதி வேலைநிறுத்தம்
    பஸ் ஸ்ட்ரைக்: மதுரை தவிர மற்ற ஊர்களில் பேருந்துகள் வழக்கம்போல இயக்கம் வேலைநிறுத்தம்
    பஸ் ஸ்ட்ரைக்: பணிக்கு வராமல் வேலைநிறுத்தத்தில் பங்கெடுத்துள்ள ஊழியர்களுக்கு மெமோ வேலைநிறுத்தம்
    போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ் வேலைநிறுத்தம்

    நெடுஞ்சாலைத்துறை

    அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக தொடரும் ரெய்டு ரெய்டு
    சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் U-வடிவ மேம்பாலம் திறப்பு தமிழ்நாடு
    மாடர்ன் தியேட்டர்ஸ் விவகாரம் குறித்து அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்  சேலம்
    மயிலாடுதுறை கொள்ளிடம் பகுதியில் மண் பானை தயாரிக்கும் இன்ஜினியர்  மயிலாடுதுறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025