NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருப்பத்தூரில் போலி மருத்துவரிடம் ஊசி போட்டுக்கொண்ட 13 வயது சிறுவன் பரிதாப பலி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    திருப்பத்தூரில் போலி மருத்துவரிடம் ஊசி போட்டுக்கொண்ட 13 வயது சிறுவன் பரிதாப பலி 
    திருப்பத்தூரில் போலி மருத்துவரிடம் ஊசி போட்டுக்கொண்ட 13 வயது சிறுவன் பரிதாப பலி

    திருப்பத்தூரில் போலி மருத்துவரிடம் ஊசி போட்டுக்கொண்ட 13 வயது சிறுவன் பரிதாப பலி 

    எழுதியவர் Nivetha P
    Jul 05, 2023
    06:33 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலம் திருப்பத்தூரில் வாணியம்பாடி தோப்பலகுண்டா ஊராட்சிக்குட்பட்ட ஜாடன்குட்டை கிராமப்பகுதியில் வசித்து வரும் விவசாயி சக்ரவர்த்தி. இவருக்கு 13 வயதில் சூர்யப்பிரகாஷ் என்னும் மகன் உள்ளார்.

    இவர் அதே பகுதியிலுள்ள பள்ளியில் 8ம்வகுப்பு படித்து வந்துள்ளார்.

    இந்நிலையில், நேற்று(ஜூலை.,4)மாலை சூர்யபிரகாஷுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது.

    இதனால் அவரது பெற்றோர் அவனை நாயனசெருவுப்பகுதியில் கிளினிக் ஒன்றினை நடத்தும் 38 வயதுடைய கோபிநாத் என்பவரிடம் அழைத்து சென்றுள்ளார்கள்.

    அந்த சிறுவனை பரிசோதித்த அவர் அவனுக்கு ஒரு ஊசியினை செலுத்தியுள்ளார்.

    அதன்பின்னர் வீட்டிற்கு வந்து ஓய்வு எடுத்து கொண்டிருந்த சிறுவனுக்கு சிறிது நேரத்திலேயே உடல்நிலை மிக மோசமாக மாறியுள்ளது.

    சிறுவன் மயக்கமடைந்த நிலையில் அவனை தூக்கிக்கொண்டு அவனது பெற்றோர் நாட்றம்பள்ளி அரசு சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

    முற்றுகை 

    லேப் டெக்னீஷியன் படித்துவிட்டு மருத்துவம் செய்து வந்த போலி மருத்துவர் 

    அங்கு அந்த சிறுவனை பரிசோதித்த மருத்துவர், சூர்யபிரகாஷ் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

    தங்கள் மகனை இழந்த சோகத்தில் அந்த பெற்றோர் கதறி அழுதுள்ளனர்.

    பின்னர், தனியார் கிளினிக்கில் போட்ட ஊசியால் தான் தங்கள் மகன் இறந்ததாக கூறிய சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு சென்று முற்றுகையிட்டதோடு, திம்மம்பேட்டை காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளனர்.

    இந்த புகாரின்பேரில் காவல்துறை சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அதனையடுத்து, அந்த கோபிநாத்தை காவல்துறை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    அதில் லேப் டெக்னீஷியன் படித்துவிட்டு மருத்துவராக தன்னை காட்டிக்கொண்டு மருத்துவம் செய்து வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    கைது
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    வெயிலில் அதிகம் செல்வதால் ஏற்படும் sunburn-ஐ இயற்கையாகவே சரி செய்ய உதவும் கற்றாழை! சரும பராமரிப்பு
    இப்போது நீங்கள் கூகிள் சர்ச்சிலேயே ஆடைகளை ட்ரை செய்து பார்க்கலாம் கூகிள் தேடல்
    தனது 65வது பிறந்தநாளில் 'முகரகம்' என்ற சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டார் மோகன்லால் மோகன்லால்
    கல்வி நிதி வழங்க மறுக்கும் மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தமிழக அரசு

    தமிழ்நாடு

    மூலதன முதலீட்டு நிதியில் தமிழகத்திற்கு ரூ.4,079 கோடி ஒதுக்கீடு - மத்திய அரசு  மத்திய அரசு
    பொத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாலைநேர வகுப்புகள் கட்டாயம் - பள்ளிக்கல்வித்துறை மறுப்பு  பள்ளிக்கல்வித்துறை
    மாத வருமானமாக ரூ.10,000 சம்பாதிக்கும் சிறை கைதிகள்  தமிழக அரசு
    தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு தமிழகம்

    கைது

    தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்  தமிழ்நாடு

    காவல்துறை

    வருமான வரிசோதனை விவகாரம் - 2 திமுக கவுன்சிலர்கள் உள்பட 10 பேர் கைது  தமிழ்நாடு
    டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் கைது - முதல்வர் ஸ்டாலின் கண்டனம் மு.க ஸ்டாலின்
    இரவு நேர வாகன சோதனையில் ஈடுபடும் போலீசாருக்கு ஒளிரும் ஆடை கட்டாயம் காவல்துறை
    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - சிபிசிஐடி ரகசிய விசாரணை திருநெல்வேலி

    காவல்துறை

    பிரிஜ் பூஷனை கைது செய்ய போதுமான ஆதாரம் இல்லை: டெல்லி காவல்துறை  இந்தியா
    'குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், நான் தூக்கில் தொங்க தயார்': பிரிஜ் பூஷன் இந்தியா
    சீமான் ட்விட்டர் கணக்கு முடக்கம் குறித்து சென்னை காவல்துறை விளக்கம்  நாம் தமிழர்
    டெல்லியின் "மிஷன் மலாமல்" கொலை வழக்கு: உறவினர்கள் இருவர் கைது  டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025