NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியானது - மாணவிகள் அதிகளவில் தேர்ச்சி
    அடுத்த செய்திக் கட்டுரை
    10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியானது - மாணவிகள் அதிகளவில் தேர்ச்சி
    10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியானது - மாணவிகள் அதிகளவில் தேர்ச்சி

    10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியானது - மாணவிகள் அதிகளவில் தேர்ச்சி

    எழுதியவர் Nivetha P
    May 19, 2023
    12:02 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலத்தில் 2022-23ம் ஆண்டிற்கான 10ம்வகுப்பு பொதுத்தேர்வானது கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி துவங்கி 20ம் தேதி வரை நடந்தது.

    இத்தேர்வினை மொத்தம் 9,14,320 மாணவர்கள் எழுதினர் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.

    இந்த தேர்வின் முடிவுகள் இன்று(மே.,19)காலை 10 மணிக்கு வெளியானது.

    அதன்படி, 10ம்வகுப்பு பொதுத்தேர்வில் 91.39% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    தேர்வெழுதிய 9,14,320 மாணவர்களுள் மொத்தம் 8,35,614 பேர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.

    இதில் மாணவர்கள் 4,04,904 பேர் தேர்ச்சிப்பெற்றுள்ள நிலையில், மாணவிகள் 4,30,710பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    அந்த வகையில் மாணவர்களை விட மாணவிகள் 6.5% அதிகளவில் தேர்ச்சிப்பெற்றுள்ளார்கள்.

    தமிழ்நாட்டில் உள்ள 1,026 தமிழக அரசு பள்ளிகள் 100%தேர்ச்சி விகிதத்தை பெற்று சாதனை படைத்துள்ளது.

    பள்ளிக்கல்வித்துறை 

    துணை தேர்வுக்கு வரும் 23 முதல் 27 தேதி வரை விண்ணப்பிக்கலாம் 

    10ம் வகுப்பு பொதுத்தேர்வில் கடந்த ஆண்டினை விட இந்தாண்டு தேர்ச்சி விகிதமானது அதிகரித்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    இந்நிலையில் அரசு பள்ளிகளின் 87.45%, அரசு உதவி பெறும் பள்ளிகள் 92.24%, தனியார் சுயநிதி பள்ளிகள் 97.38% தேர்ச்சி பெற்றுள்ள நிலையில்,

    அரசு பெண்கள் பள்ளிகள் 94.38%, ஆண்கள் பள்ளிகளில் 83.25% தேர்ச்சி விகிதம் பெறப்பட்டுள்ளது.

    மொழி பாடங்களில் யாரும் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுக்காததால் யாரும் முழு மதிப்பெண்ணான 500 மதிப்பெண்களை இந்தாண்டு எடுக்கவில்லை என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

    மேலும் இதில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான துணைத்தேர்வுக்கு மே 23 முதல் 27 வரை விண்ணப்பிக்கலாம்.

    இதற்கான தேர்வு வரும் ஜூன் மாதம் நடத்தப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    தமிழக அரசு

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    தமிழ்நாடு

    'மோக்கா' புயல் இன்று மாலை உருவாகும்: வானிலை எச்சரிக்கை  இந்தியா
    அமைச்சரவை கூட்டத்தில் 5 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்  அமைச்சரவை
    மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அலுவலக உதவியாளர் பணியை வழங்கிய உதயநிதி ஸ்டாலின்!  உதயநிதி ஸ்டாலின்
    +2 தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு: நடிகர் விஜய்யின் புதிய திட்டம் விஜய்

    தமிழக அரசு

    தமிழகத்தில் குறவன் குறத்தி ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு தடை - தமிழக அரசு உத்தரவு தமிழ்நாடு
    தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் உயர்வு தமிழ்நாடு
    டி.எம்.சவுந்தர ராஜன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவர் பெயரில் ஒரு சாலை: தமிழக அரசு அறிக்கை கோலிவுட்
    தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டிற்கு பாராட்டு தெரிவித்த நடிகர் கார்த்தி கார்த்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025