Page Loader
கார் மோதி பெண் உயிரிழந்த சம்பவம் - பிரபல யூடியூபர் இர்பான் சொகுசு கார் பறிமுதல்
கார் மோதி பெண் உயிரிழந்த சம்பவம் - பிரபல யூடியூபர் இர்பான் சொகுசு கார் பறிமுதல்

கார் மோதி பெண் உயிரிழந்த சம்பவம் - பிரபல யூடியூபர் இர்பான் சொகுசு கார் பறிமுதல்

எழுதியவர் Nivetha P
May 30, 2023
10:54 pm

செய்தி முன்னோட்டம்

பிரபல யூடியூபர் இர்பான் 'இர்பான் வியூஸ்' என்னும் சேனல் மூலம் உணவு வகைகளை ரிவியூ செய்து மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமடைந்தவர். தற்போது திரை பிரபலங்களுடன் உணவகங்களில் உணவுகளை அருந்தியவாறே நேர்காணலும் செய்து வருகிறார். சமீபத்தில் தான் இவருக்கு மிக பிரம்மாண்டமாக திருமணம் நடந்தது. இந்நிலையில் கடந்த 25ம் தேதி இரவுநேரத்தில் புத்தேரி அருகேயுள்ள கோனாதி என்னும் பகுதியினை சேர்ந்தவர் பத்மாவதி(55), தனது மகளை பார்ப்பதற்காக மறைமலை நகருக்கு சென்று வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார். அப்போது மறைமலை நகரின் நகராட்சி அலுவலகம் அருகே சென்னை-திருச்சி நெடுஞ்சாலையினை கடக்க முயன்ற இர்பானின் சொகுசு கார் பத்மாவதி மீது மோதியுள்ளது. இதில் சுமார் 20 அடிக்கு மேல் தூக்கி வீசப்பட்ட பத்மாவதி அங்கேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பரிசோதனை 

மீண்டும் பரிசோதனைக்கு செல்லும் இர்பானின் சொகுசு கார் 

இந்த சமபவத்தினையடுத்து இர்பானின் காரை ஓட்டிச்சென்ற அவரது உறவினர் அசாருதீன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதனிடையே விபத்தின் போது யூடியூபர் இர்பானும் அவரது மனைவியும் காரில் இருந்தது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரது சொகுசு காரினை போலீசார் பறிமுதல் செய்து, செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பரிசோதனைக்காக ஆஜர்படுத்தினர். ஆனால் அந்த காருக்கான முறையான ஆவணங்களை போக்குவரத்து புலனாய்வு போலீசார் கொடுக்காததால் இர்பானின் கார் மீண்டும் காவல் நிலையத்திற்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. தற்போது மீண்டும் இர்பானின் கார் பரிசோதனை செய்யப்படவுள்ளது என்று கூறப்படுகிறது. பரிசோதனை முடிந்த பின்னர் இர்பான் கார் விடுவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.