
ஐந்து ஆண்டு தடைக்கு பின், தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி ஆன பாடகி சின்மயி
செய்தி முன்னோட்டம்
பாடகி சின்மயி ஐந்தாண்டு தடைக்கு பின் மீண்டும் சினிமாவிற்குள் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.
நடிகர் விஜய் நடிப்பில் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் லியோ திரைப்படத்தில், சின்மயி, நடிகை த்ரிஷாவிற்கு டப்பிங் பேசியுள்ளார்.
பாடகர் மற்றும் டப்பிங் கலைஞரான சின்மயி, கடந்த 2018 பாடலாசிரியர் வைரமுத்து உள்ளிட்டோர் மீது #metoo இயக்கம் மூலம் குற்றச்சாட்டை வைத்திருந்தார்.
வைரமுத்து தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்றதாக குற்றச்சாட்டு முன்வைத்திருந்தார்.
சின்மயியின் குற்றச்சாட்டுகள், மேலும் பல பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாதிப்புகளை வெளியில் சொல்ல மன தைரியத்தை அளித்தது.
இச்சம்பவத்திற்கு பின், சின்மயி தமிழ் சினிமாவில் இருந்து ஐந்து வருடத்திற்கு தடை செய்யப்பட்டார்.
தற்போது அந்த தடை முடிந்து, மீண்டும் லியோ படத்திற்காக டப்பிங் பேசியுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
திரிஷாவிற்காக, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் டப்பிங் பேசிய சின்மயி
I am a million times grateful to Mr Lokesh Kanagaraj and Mr Lalit for having taken this stand.
— Chinmayi Sripaada (@Chinmayi) October 5, 2023
THAT. IS. MY. VOICE. IN. LEO. FOR. TRISHA.
And guess what? I have dubbed in Tamil, Telugu AND Kannada. #Badass https://t.co/x747eBCzU7