NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / நடிகர் சல்மான் கான் வீடு மீது துப்பாக்கி சூடு நடத்தினால், ₹ 4 லட்சம் பரிசு: போலீஸ் விசாரணையில் அம்பலம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நடிகர் சல்மான் கான் வீடு மீது துப்பாக்கி சூடு நடத்தினால், ₹ 4 லட்சம் பரிசு: போலீஸ் விசாரணையில் அம்பலம்
    மற்றொரு சந்தேக நபர், புதன்கிழமை இரவு ஹரியானாவில் கைது செய்யப்பட்டார்

    நடிகர் சல்மான் கான் வீடு மீது துப்பாக்கி சூடு நடத்தினால், ₹ 4 லட்சம் பரிசு: போலீஸ் விசாரணையில் அம்பலம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 18, 2024
    10:41 am

    செய்தி முன்னோட்டம்

    ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, மும்பையில் நடிகர் சல்மான் கான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு வெளியே, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    அந்த இருவரையும் காவல்துறையினர் மேற்கு வங்காளத்தில் கைது செய்தனர்.

    இந்த நிலையில், மற்றொரு சந்தேக நபர், புதன்கிழமை இரவு ஹரியானாவில் கைது செய்யப்பட்டார்.

    போலீஸ் ஆதாரங்களின்படி, இந்த நபர் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுக்கும், தற்போது துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ள இருவருக்கும் இடையே ஒரு தொடர்பாளராக பணியாற்றியவர்.

    போலீஸ் வட்டாரங்களின்படி, இருவருக்கும் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்காக ₹4 லட்சம் தரப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    ஆரம்பத் தொகையாக ₹ 1 லட்சம் முன்கூட்டியே வழங்கப்பட்டது.

    கொலை நோக்கமல்ல

    சல்மான் கானை  அச்சுறுத்துவதே நோக்கம்

    மும்பை குற்றப்பிரிவு அதிகாரிகள் கூறியது போல், உத்தேசிக்கப்பட்ட நோக்கம் சல்மான் கானை கொலை செய்வது அல்ல. அவரை அச்சுறுத்துவதே நோக்கம்.

    "குற்றம் சாட்டப்பட்டவர்கள் அவரை பயமுறுத்தவே அப்படி செய்துள்ளனர். கொலை செய்வது அவர்களின் நோக்கமல்ல. ஹரியானா மற்றும் பிற மாநிலங்களில் இருந்து சுமார் 7 பேர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்" என்று மும்பை குற்றப்பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாக, செய்தி நிறுவனமான ANI மேற்கோள் காட்டியது.

    இந்த வழக்கில் மும்பை குற்றப்பிரிவும் சல்மான் கானின் வாக்குமூலத்தை ஒரு சாட்சியாக பதிவு செய்ய உள்ளது.

    நேற்று மதியம், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே சல்மான் கானை சந்தித்து அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சல்மான் கான்
    துப்பாக்கி சூடு

    சமீபத்திய

    கிடுகிடுக்க வைக்கும் அமெரிக்கா-பாகிஸ்தான் நிறுவனங்களின் கிரிப்டோகரன்சி ஒப்பந்தம்; சர்ச்சையில் சிக்கிய டிரம்ப்-அசிம் முனீர் தொடர்பு அமெரிக்கா
    NDA கூட்டணியில் ஓ.பி.எஸ்., மற்றும் இ.பி.எஸ். இருவரும் தொடர்கிறார்கள்: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நயினார் நாகேந்திரன்
    துருக்கி மற்றும் அஜர்பைஜானுடன் எந்த வணிக உறவும் கிடையாது; அகில இந்திய வர்த்தகர் கூட்டமைப்பு முடிவு வர்த்தகம்
    பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை அழிக்க வெறும் 23 நிமிடங்கள் தான்; ராஜ்நாத் சிங் அதிரடி ராஜ்நாத் சிங்

    சல்மான் கான்

    'சிகந்தர்': சல்மான் கான்- ஏஆர் முருகதாஸ் இணையும் படத்தின் பெயர் வெளியீடு இயக்குனர்
    சல்மான் கான் வீட்டில் துப்பாக்கி சூடு எதிரொலி: பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்த சினிமா தொழிலாளர்கள் அமைப்பு துப்பாக்கி சூடு
    சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கி சூடு நடத்திய மர்மநபர்கள் குஜராத்தில் கைது துப்பாக்கி சூடு

    துப்பாக்கி சூடு

    பிபா மகளிர் உலகக்கோப்பை : கால்பந்து அணிகள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகே துப்பாக்கிச் சூடு கால்பந்து
    ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில் ரயில்வே பாதுகாப்புப் படை கான்ஸ்டபிளால் 4 பேர் சுட்டுக் கொலை ரயில்கள்
    சென்னையில் பதற்றம் - என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 2 ரவுடிகள்  சென்னை
    ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில் நடந்த துப்பாக்கி சூடு: உண்மையில் என்ன நடந்தது? மகாராஷ்டிரா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025