Page Loader
பிரபல பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தர் மருத்துவமனையில் அனுமதி; தற்கொலைக்கு முயற்சித்ததாக தகவல்
பிரபல பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தர் மருத்துவமனையில் அனுமதி

பிரபல பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தர் மருத்துவமனையில் அனுமதி; தற்கொலைக்கு முயற்சித்ததாக தகவல்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 05, 2025
09:02 am

செய்தி முன்னோட்டம்

பிரபல பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தர் கடந்த மார்ச் 2 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள நிஜாம்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் தற்கொலைக்கு முயன்றதாக செய்தி வெளியாகியுள்ளது. கல்பனா தூக்க மாத்திரைகளை உட்கொண்டதாக நம்பப்படுகிறது. தகவல்களின்படி, அவர் தனது வீட்டில் மயக்கமடைந்து காணப்பட்டார். தற்போது அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது கல்பனா வென்டிலேட்டர் உதவியுடன் மருத்துவர்கள் கண்கணிப்பில் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

விவரங்கள் 

அண்டை வீட்டார் அளித்த தகவலின்படி, காவல்துறை வருகை

கல்பனா இரண்டு நாட்களாக கதவைத் திறக்காததால், அவரது அண்டை வீட்டார் காவல்துறையினரைத் தொடர்பு கொண்டனர். விரைந்து வந்த காவல்துறையினர் வீட்டின் கதவை உடைத்து பார்க்கையில் கல்பனா மயக்க நிலையில் இருந்ததை கண்டுள்ளனர். அளவிற்கு அதிகமாக தூக்கமாத்திரை உட்கொண்டுள்ளதையும் அறிந்துள்ளனர். அவர் தற்கொலைக்கு முயன்றாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளனர். எனினும், அவரது தற்கொலை முயற்சிக்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. சம்பவம் நடந்த நேரத்தில் கல்பனாவின் கணவர் சென்னையில் இருந்தார். செய்தி கேட்டதும், அவர் ஹைதராபாத்திற்கு விரைந்தார்.

தொழில்

தென்னிந்திய மொழிகளில் 1,500க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் கல்பனா

கல்பனா பிரபல பின்னணிப் பாடகர், நடிகர் டி.எஸ். ராகவேந்திராவின் மகள் ஆவார். அவர் ஸ்டார் சிங்கர் மலையாளத்தில் பங்கேற்று 2010 இல் அந்தப் பட்டத்தை வென்றார். அவரது வெற்றியைத் தொடர்ந்து, இளையராஜா மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பல குறிப்பிடத்தக்க இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றினார். இசைக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், ஐந்து வயதிலிருந்து தனது இசை வாழ்க்கையைத் தொடங்கினார். பல மொழிகளில் 1,500க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். அதோடு, கமல்ஹாசன் நடித்த 'புன்னகை மன்னன்' படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்துள்ளார் கல்பனா. அவர் பாடல் சார்ந்த ரியாலிட்டி ஷோக்களிலும் நடுவராக இருந்துள்ளார். ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் தெலுங்கு சீசன் 1 இல் கல்பனா பங்கேற்றார்.