NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / அதிக காட்சிகளை திரையிட்டதற்காக திருப்பூர் சுப்பிரமணியம் திரையரங்குக்கு நோட்டீஸ்
    அடுத்த செய்திக் கட்டுரை
    அதிக காட்சிகளை திரையிட்டதற்காக திருப்பூர் சுப்பிரமணியம் திரையரங்குக்கு நோட்டீஸ்
    திருப்பூர் சுப்பிரமணியம், தனது சமீபத்திய செயல்பாடுகள் மற்றும் கருத்துகளால் தொடர் சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

    அதிக காட்சிகளை திரையிட்டதற்காக திருப்பூர் சுப்பிரமணியம் திரையரங்குக்கு நோட்டீஸ்

    எழுதியவர் Srinath r
    Nov 14, 2023
    05:27 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியத்திற்கு சொந்தமான திரையரங்கில், சல்மான்கான் திரைப்படத்தை அதிக காட்சிகள் திரையிட்டதற்காக, மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

    சல்மான் கான், கத்ரீனா கைஃப் உள்ளிட்டோர் நடிப்பில் டைகர் 3 திரைப்படம் தீபாவளி அன்று வெளியானது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும், ரசிகர்கள் திரைப்படத்தை கொண்டாடி மகிழ்கின்றனர்.

    இந்நிலையில், இப்படம் தமிழிலும் வெளியாகி உள்ளது. இதனை திருப்பூரில் உள்ள தனது திரையரங்கில் சுப்பிரமணியம் திரையிட்டுள்ளார்.

    தமிழ்நாடு அரசின் அறிவிப்பின்படி, ஒரு திரைப்படத்திற்கு அதிகபட்சமாக 5 காட்சிகள் திரையிடவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், காலை 9 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 12 மணிக்குள் அனைத்து காட்சிகளையும் முடிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    2nd card

    தொடர் சர்ச்சையில் சிக்கும் திருப்பூர் சுப்பிரமணியம்

    தீபாவளிக்கு வெளியான ஜப்பான், ஜிகர்தண்டா டபுள்X திரைப்படங்களுக்கு அரசு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்த நிலையில், டைகர் 3 திரைப்படத்திற்கு சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

    இந்நிலையில், திருப்பூர் சுப்பிரமணியம் தனது திரையரங்கில் டைகர் 3 திரைப்படத்தை காலை 7 மணிக்கு திரையிட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    மேலும், சமீபத்தில் வெளியான லியோ திரைப்படத்தில், திரையரங்க உரிமையாளர்களுக்கு பெரிய லாபம் கிடைக்கவில்லை என திருப்பூர் சுப்ரமணியம் கூறியிருந்தார்.

    லியோ படத்தின் தயாரிப்பாளரான லலித்குமாரும், திருப்பூர் சுப்ரமணியம் மீது சில குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    திரைப்படம்
    திருப்பூர்
    திரையரங்குகள்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    தமிழ்நாடு

    மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு  ஆட்சியர்
    தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது; நாளை கனமழை பெய்ய வாய்ப்பு கனமழை
    ஜார்கண்ட் மருத்துவக்கல்லூரியில் தமிழக மருத்துவர் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு  மருத்துவக் கல்லூரி
    அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக தொடரும் ரெய்டு நெடுஞ்சாலைத்துறை

    திரைப்படம்

    மார்க் ஆண்டனி பட வெற்றி: இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு BMW கார் பரிசளித்த தயாரிப்பாளர் இயக்குனர்
    படக்குழுவினருக்கு மருத்துவ முகாம் நடத்த கேட்டுக் கொண்ட நடிகர் அஜித் நடிகர் அஜித்
    விக்ரமின் தங்கலான் டீசர் வெளியானது விக்ரம்
    KH234 படத்தில் முதல் முறையாக இணையும் திரிஷா, நயன்தாரா கமலஹாசன்

    திருப்பூர்

    திருமணத்துக்கு வற்புறுத்தல்: காதலியை உயிரோடு தீ வைத்து கொளுத்திய காதலன் தமிழ்நாடு
    திருப்பூரில் வாடகை வீடு எடுத்து கள்ளநோட்டு அச்சடிப்பு-வனத்துறை அதிகாரியாக நடித்தவர் கைது காவல்துறை
    திருப்பூரில் வசிக்கும் வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பினை உறுதிப்படுத்த கோரிக்கை சமூக வலைத்தளம்
    வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தை விட்டு வெளியேறுவது ஹோலி பண்டிகைக்காக, வேறு பிரச்சனை இல்லை தமிழ்நாடு

    திரையரங்குகள்

    RRR புதிய சாதனை: ஜப்பான் திரையரங்குளில் 100 நாட்கள் தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது ஜப்பான்
    இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை விமான நிலையத்தில் பிவிஆர் மல்டிபிளக்ஸ் திரையரங்கம் இந்தியா
    இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாக போகும் படங்களின் பட்டியல் தமிழ் திரைப்படம்
    OTT வெளியீடு தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கு புதிய விதிமுறையை தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் விதித்துள்ளது ஓடிடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025