NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / எனது மௌனம் பலவீனத்திற்கான அறிகுறி அல்ல: ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி அறிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    எனது மௌனம் பலவீனத்திற்கான அறிகுறி அல்ல: ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி அறிக்கை
    ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்

    எனது மௌனம் பலவீனத்திற்கான அறிகுறி அல்ல: ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி அறிக்கை

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 30, 2024
    07:00 pm

    செய்தி முன்னோட்டம்

    நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்து இருந்தார்.

    ஜெயம் ரவியின் இந்த அறிக்கையையடுத்து, இது முழுக்க முழுக்க அவர் தன்னிச்சையாக எடுத்த முடிவு என்றும், இது தன் ஒப்புதல் இல்லாமல் அவர் வெளியிட்ட ஒன்று என ஆர்த்தி ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

    அதன் தொடர்ச்சியாக தனியார் ஊடகத்தினரிடம் ஜெயம் ரவி அளித்த பேட்டியில், ஆர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை மிகவும் மோசமாக நடத்தியதாகவும், 15 ஆண்டுகளில் தனக்கென ஒரு வங்கி கணக்கு கூட தன்னால் தொடங்க முடியவில்லை என்று பல்வேறு விதமான குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார்.

    இந்த நிலையில், ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராமில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அறிக்கை

    நீதித்துறை எனக்கான நியாயத்தை பெற்றுத்தரும்: ஆர்த்தி 

    ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில்,"எனது தனிப்பட்ட வாழ்க்கையைச் சுற்றி நடக்கும் விஷயத்தை பற்றி பலர் பேசி வருகின்றனர். உண்மையை மறைக்க, பொதுவெளியில் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், என்னையும் தவறாக சித்தரிப்போருக்கு நான் பதில் எதுவும் கூறாமல் அமைதி காப்பது என்னுடைய பலவீனமோ அல்லது குற்ற உணர்ச்சியோ அல்ல என்பதை வலியுறுத்துவது முக்கியமானது".

    "நான் கண்ணியமாக இருப்பதால், உண்மையை மறைப்பதற்காக என்னை மோசமாக சித்தரிக்க முயற்சிப்பவர்களுக்குத்தான் இந்த அறிக்கை. நீதித்துறை எனக்கான நியாயத்தை பெற்றுத்தரும் என்பதில் நம்பிக்கையோடு உள்ளேன்".

    "எனது முந்தைய அறிக்கையில் நான் கூறியவை தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. நான் தனிப்பட்ட முறையில் ஜெயம் ரவியை சந்திக்க அனுமதி கோரியும் தற்போது அனுமதி கிடைக்கவில்லை" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #AartiRavi's new statement📄
    I deeply respect the sanctity of marriage and won't engage in public discussions that hurt anyone's reputation. My focus is on our family's well-being, and I trust in God's grace for guidance.#JayamRavi | #Aarti pic.twitter.com/XUpyIVji2V

    — Tharani ᖇᵗк (@iam_Tharani) September 30, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜெயம் ரவி

    சமீபத்திய

    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்
    மிச்சமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் டிஜே வேண்டாம், cheer leaders வேண்டாம், உணர்வுகளை மனதில் கொள்ளுங்கள்: கவாஸ்கர் கோரிக்கை ஐபிஎல் 2025

    ஜெயம் ரவி

    சுஹாசினி வெளியிட்ட பொன்னியின் செல்வன் படத்தின் காலண்டர் தமிழ் திரைப்படம்
    ஜெயம் ரவி - நயன்தாரா நடிக்கும் 'இறைவன்' பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! திரைப்பட அறிவிப்பு
    ஜெயம் ரவியின் 'அகிலன்' படத்தின் முதல் சிங்கிள் 'துரோகம்' வெளியானது பாடல் வெளியீடு
    பொன்னியின் செல்வன் 2 அப்டேட்: பிடிஎஸ் வீடியோவை வெளியிட்டது தயாரிப்பு குழு திரைப்பட அறிவிப்பு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025