
மோகன்லால், ப்ரித்விராஜின் L2 எம்பூரான் OTT வெளியீடு: எப்போது, எங்கே பார்க்கலாம்?
செய்தி முன்னோட்டம்
மோகன்லால் நடிப்பில், பிரித்விராஜ் இயக்கத்தில் உருவான 'L2 எம்பூரான்' திரைப்படத்தின் உலகளாவிய OTT வெளியீட்டு தேதி தற்போது வெளியாகியுள்ளது.
அறிவிப்பின்படி, இப்படம் வரும் ஏப்ரல் 24 முதல் உலகெங்கிலும் ஜியோஹாட்ஸ்டாரில் காணலாம்.
L2 எம்பூரான் திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ், ஆசீர்வாத் சினிமாஸ் மற்றும் ஸ்ரீ கோகுலம் மூவிஸ் தயாரித்துள்ளன.
இப்படம் கடந்த மார்ச் 27 அன்று திரையரங்குகளில் வெளியானது.
இப்படத்தில் மோகன்லாலுடன் இந்திரஜித் சுகுமாரன், மஞ்சு வாரியர், சானியா ஐயப்பன், அர்ஜுன் தாஸ், சாய்குமார், சுராஜ் வெஞ்சாரமூடு மற்றும் பைஜு சந்தோஷ் ஆகியோரும் நடித்துள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
BLOCKBUSTER #Empuraan will be Streaming From APRIL 24th On Jio Hotstar in Mal,Tam,Tel & Kan💥🔥
— OTT STREAM UPDATES (@newottupdates) April 17, 2025
Streaming in Hindi On MAY ✅#Mohanlal | #PrithvirajSukumaran | #ManjuWarrier | #TovinoThomas | #IndrajithSukumaran#Lucifer2#L2EOnJioHotstar#EmpuraanOnJioHotstar#L2Empuraan pic.twitter.com/0CyCdUwZCA
சர்ச்சை
எல்2 எம்பூரான் படத்தை தொடர்ந்த சர்ச்சை
எம்புரான் திரைப்படம் வெளியான பிறகு, அதில் குஜராத் கலவரம் என்று கூறப்படும் காட்சிகள் சித்தரிக்கப்பட்டதில் சர்ச்சை எழுந்தது.
ஹிந்துத்துவ அமைப்புகள் தொடர்ந்து போர்க்கொடி எழுப்பியதனால், L2 எம்பூரான் படத்தின் 17 பகுதிகளை நீக்க தயாரிப்பாளர்கள் முடிவு செய்தனர்.
அதைத்தொடர்ந்து மோகன்லால் ஒரு அறிக்கையை வெளியிட்டார், படத்தின் சில அம்சங்கள் அவரது ரசிகர்களில் சிலருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும், அத்தகைய குறிப்புகளை நீக்க குழு முடிவு செய்துள்ளதாகவும் உறுதியளித்தார்.
எனினும், அதன் பின்னர், படத்தயாரிப்பாளரான ஸ்ரீ கோகுலம் மூவிஸ் மற்றும் இயக்குனர்-நடிகர் ப்ரித்விராஜின் வீட்டிற்கு அமலாக்கத்துறையினர் ரெய்டு செய்தனர்.
விவரங்கள்
L2 எம்பூரான் படத்தை பற்றிய விவரங்கள்
L2 எம்பூரான் படம், 2019 ஆம் ஆண்டு வெளியான பிளாக்பஸ்டர் படமான 'லூசிஃபரின்' தொடர்ச்சியாகும்.
இதில், மோகன்லால், குரேஷி-அப்ராம் அல்லது ஸ்டீபன் நெடும்பள்ளியாக மீண்டும் நடித்தார். பிரித்விராஜ் மீண்டும் சயீத் மசூத் வேடத்தில் நடித்தார். இந்த முறை பிரித்விராஜ் கதாபாத்திரத்தின் முன்கதையே படத்தின் பின்புலமாக அமைந்தது.
இந்த படத்தை முரளி கோபி எழுதியுள்ளார்.
இந்தப் படத்தின் ஆரம்பகட்ட படப்பிடிப்பு, ஃபரிதாபாத்தில் தொடங்கி, பின்னர் சிம்லா, லே, இங்கிலாந்து, அமெரிக்கா, சென்னை, குஜராத், ஹைதராபாத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மும்பை மற்றும் கேரளா போன்ற இடங்களில் படம் பிடிக்கப்பட்டது.
இந்தப் படம் ஐந்து மொழிகளில் வெளியிடப்பட்டது.
ஒரு மாதத்திற்குள், இந்தப் படம் இந்தியாவில் ₹ 105 கோடிக்கு மேல் நிகரமாக சம்பாதித்ததாக Sacnilk.com தெரிவித்துள்ளது.