NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / கீழடியில் திடீர் போராட்டத்தில் குதித்த இயக்குனர் பேரரசு; காரணம் தெரியுமா?
    அடுத்த செய்திக் கட்டுரை
    கீழடியில் திடீர் போராட்டத்தில் குதித்த இயக்குனர் பேரரசு; காரணம் தெரியுமா?
    இயக்குனர் பேரரசு

    கீழடியில் திடீர் போராட்டத்தில் குதித்த இயக்குனர் பேரரசு; காரணம் தெரியுமா?

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 08, 2023
    03:22 pm

    செய்தி முன்னோட்டம்

    கீழடி அகழ்வாராய்ச்சி தளத்தில், பண்டைய பொருட்களுக்கு ஒரு அருங்காட்சியகத்தை சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    அந்த அருங்காட்சியகத்தில், கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களும், பண்டைய கலை பொருட்களும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

    தென்னிந்தியா நாகரீக வளர்ச்சியை பறைசாற்றும் பல அரிய வகை பொருட்களை அங்கே காணலாம்.

    அதை காண, பல நகரங்களில் இருந்தும் மக்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர்.

    சமீபத்தில் கூட, நடிகர் சூர்யா, அவரது மனைவி ஜோதிகா, அவர்களது குழந்தைகள் மற்றும் நடிகர் சிவகுமாருடன் அங்கே வருகை தந்திருந்தார்.

    தமிழ் மொழியில், சிவகுமாருக்கு இருக்கும் ஈடுபாடு பலரும் அறிந்திருப்பார்கள். அதனால், அவர்கள் குடும்பத்தாருடன் வந்திருந்தனர்.

    கீழடி

    அருங்காட்சியகத்தை திறக்க சொல்லி போராட்டம்

    இந்நிலையில், தற்போது கோடை விடுமுறையாகையால், பல பள்ளி, கல்லூரி மாணவர்கள், கீழடி அருங்காட்சியகத்திற்கு நேற்று (ஏப்ரல் 8) வந்திருந்தனர். அந்த மக்களுடன், இயக்குனர் பேரரசுவும் அருங்காட்சியகத்தை பார்வையிட வந்திருந்தார்.

    ஆனால், அங்கே வந்த பிறகு தான் தெரிந்தது, நேற்று அருங்காட்சியகத்திற்கு விடுமுறை என்று.

    இதனால், ஆத்திரம் அடைந்த பேரரசு, அருங்காட்சியகத்தை திறக்க சொல்லி போராட ஆரம்பித்தார். இதனை அறிந்த ஊடகத்துறையினரும் அங்கே கூட்டமாக வந்துள்ளனர்.

    விஷயத்தை கேள்விப்பட்ட, அந்த தொகுதியின் MP யான சு.வெங்கடேசன், அதிகாரிகளிடம் பேசி, மக்களை உள்ளே அனுமதிக்க ஆவண செய்தார்.

    நேற்று புனித வெள்ளியை முன்னிட்டு, அரசு விடுமுறையாகையால், அருங்காட்சியகம் மூடப்பட்டுள்ளது. இதை அறியாத மக்கள், கூட்டமாக வந்து போராடினர் என்கின்றனர். அருங்காட்சியக அலுவலர்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சிவகங்கை
    கோலிவுட்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    திருமணத் தகராறு குறித்து ஆர்த்தி ரவி 'இறுதி விளக்கம்': "எங்களுக்குள் பிரிவு ஏற்பட காரணம் ஒரு மூன்றாவது நபர்" ஜெயம் ரவி
    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்

    சிவகங்கை

    கீழடி 9ம் கட்ட அகழாய்வு பணிகளை 6ம் தேதி துவக்கி வைக்கிறார் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்
    தமிழக விவசாயிகளுக்கு 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம் - மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழ்நாடு
    சிவகங்கை கீழடி அருங்காட்சியகத்தில் என்னென்ன இருக்கிறது என ஓர் பார்வை தமிழ்நாடு

    கோலிவுட்

    ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த பொன்னியின் செல்வன் 2 ட்ரைலர், வெளியானது திரைப்பட அறிவிப்பு
    ஹாப்பி பர்த்டே விக்ரமன்! உறவுகளின் முக்கியத்துவத்தை பேசும் படங்களை தந்த இயக்குனரின் பிறந்தநாள்! பிறந்தநாள்
    விகடன் விருதுகள் விழாவில் புறக்கணிக்கப்பட்டாரா இயக்குனர் நெல்சன்? வைரலான ட்வீட்
    ரோஹினி திரையரங்கு விவகாரம்: கோலிவுட்டில் வலுக்கும் கண்டன குரல்கள் தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு வானிலை அறிக்கை
    இன்று முதல் கீழடி அருங்காட்சியகத்திற்குள் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிப்பு வைரல் செய்தி
    சென்னை கலாஷேத்ரா கல்லூரி இயக்குநர், துணை இயக்குநர் திங்கட்கிழமை ஆஜராக உத்தரவு சென்னை
    கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் - குவியும் பாராட்டுக்கள் கோவை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025