NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / கீழடியில் திடீர் போராட்டத்தில் குதித்த இயக்குனர் பேரரசு; காரணம் தெரியுமா?
    கீழடியில் திடீர் போராட்டத்தில் குதித்த இயக்குனர் பேரரசு; காரணம் தெரியுமா?
    1/2
    பொழுதுபோக்கு 1 நிமிட வாசிப்பு

    கீழடியில் திடீர் போராட்டத்தில் குதித்த இயக்குனர் பேரரசு; காரணம் தெரியுமா?

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 08, 2023
    03:22 pm
    கீழடியில் திடீர் போராட்டத்தில் குதித்த இயக்குனர் பேரரசு; காரணம் தெரியுமா?
    இயக்குனர் பேரரசு

    கீழடி அகழ்வாராய்ச்சி தளத்தில், பண்டைய பொருட்களுக்கு ஒரு அருங்காட்சியகத்தை சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அந்த அருங்காட்சியகத்தில், கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களும், பண்டைய கலை பொருட்களும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. தென்னிந்தியா நாகரீக வளர்ச்சியை பறைசாற்றும் பல அரிய வகை பொருட்களை அங்கே காணலாம். அதை காண, பல நகரங்களில் இருந்தும் மக்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர். சமீபத்தில் கூட, நடிகர் சூர்யா, அவரது மனைவி ஜோதிகா, அவர்களது குழந்தைகள் மற்றும் நடிகர் சிவகுமாருடன் அங்கே வருகை தந்திருந்தார். தமிழ் மொழியில், சிவகுமாருக்கு இருக்கும் ஈடுபாடு பலரும் அறிந்திருப்பார்கள். அதனால், அவர்கள் குடும்பத்தாருடன் வந்திருந்தனர்.

    2/2

    அருங்காட்சியகத்தை திறக்க சொல்லி போராட்டம்

    இந்நிலையில், தற்போது கோடை விடுமுறையாகையால், பல பள்ளி, கல்லூரி மாணவர்கள், கீழடி அருங்காட்சியகத்திற்கு நேற்று (ஏப்ரல் 8) வந்திருந்தனர். அந்த மக்களுடன், இயக்குனர் பேரரசுவும் அருங்காட்சியகத்தை பார்வையிட வந்திருந்தார். ஆனால், அங்கே வந்த பிறகு தான் தெரிந்தது, நேற்று அருங்காட்சியகத்திற்கு விடுமுறை என்று. இதனால், ஆத்திரம் அடைந்த பேரரசு, அருங்காட்சியகத்தை திறக்க சொல்லி போராட ஆரம்பித்தார். இதனை அறிந்த ஊடகத்துறையினரும் அங்கே கூட்டமாக வந்துள்ளனர். விஷயத்தை கேள்விப்பட்ட, அந்த தொகுதியின் MP யான சு.வெங்கடேசன், அதிகாரிகளிடம் பேசி, மக்களை உள்ளே அனுமதிக்க ஆவண செய்தார். நேற்று புனித வெள்ளியை முன்னிட்டு, அரசு விடுமுறையாகையால், அருங்காட்சியகம் மூடப்பட்டுள்ளது. இதை அறியாத மக்கள், கூட்டமாக வந்து போராடினர் என்கின்றனர். அருங்காட்சியக அலுவலர்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சிவகங்கை
    கோலிவுட்
    தமிழ்நாடு

    சிவகங்கை

    சிவகங்கை கீழடி அருங்காட்சியகத்தில் என்னென்ன இருக்கிறது என ஓர் பார்வை தமிழ்நாடு
    தமிழக விவசாயிகளுக்கு 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம் - மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழ்நாடு
    கீழடி 9ம் கட்ட அகழாய்வு பணிகளை 6ம் தேதி துவக்கி வைக்கிறார் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்
    எம்.பி. கார்த்திக் சிதம்பரத்தின் ரூ.11.04 கோடி சொத்தினை முடக்கிய அமலாக்கத்துறை  காங்கிரஸ்

    கோலிவுட்

    கமல் முதல் ரஜினி வரை: தமிழ் திரைப்படங்களில் ப்ரோஸ்த்தெடிக் மேக்அப் உபயோகித்த பிரபலங்கள் கமல்ஹாசன்
    நடிகர் பாலாவிற்கு அறுவை சிகிச்சை; வெற்றிகரமாக முடிந்ததாக தகவல் வைரல் செய்தி
    நடிகை குஷ்பு, கடுமையான ஃப்ளு காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி வைரல் செய்தி
    AK 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் வெளியேற இதுதான் காரணமா?! வைரல் செய்தி

    தமிழ்நாடு

    தமிழக நிதியமைச்சர் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு - பணம் கேட்டு மெசேஜ் அனுப்பியதால் அதிர்ச்சி இன்ஸ்டாகிராம்
    தமிழக அரசு விருந்தினர் மாளிகையில் ரூ.32.68 லட்ச லஞ்ச பணம் பறிமுதல் ராமநாதபுரம்
    சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பிரதமர் மோடி வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு பிரதமர் மோடி
    கோவையில் எந்தவொரு திட்டத்தினையும் செயல்படுத்தாத தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கோவை
    அடுத்த செய்திக் கட்டுரை

    பொழுதுபோக்கு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Entertainment Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023