Page Loader
ஜெயம்ரவி 34: 'டாடா' பட இயக்குனருடன் கைகோர்க்கும் ஜெயம் ரவி
ஜெயம் ரவி

ஜெயம்ரவி 34: 'டாடா' பட இயக்குனருடன் கைகோர்க்கும் ஜெயம் ரவி

எழுதியவர் Venkatalakshmi V
Oct 05, 2024
11:57 am

செய்தி முன்னோட்டம்

நடிகர் ஜெயம் ரவி, தனது 34 வது படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இம்முறை அவர் கைகோர்த்திருப்பது டாடா படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் கணேஷ் கே பாபுவுடன். இப்படத்தின் முதல் போஸ்டர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. ஜெயம் ரவி தற்போது இயக்குனர் ராஜேஷ் உடன் 'பிரதர்' படத்தில் நடித்துள்ளார், அப்படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. அதனையடுத்து தனது அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார் ஜெயம் ரவி. JR 34 படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கும் ஹாரிஸ் ஜெயராஜ் மெட்டமைக்கிறார். ஸ்க்ரீன் ஸீன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இது ஜெயம் ரவியுடன் அவர்கள் இணையும் 3வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post