NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / முடி முதல் சருமம் வரை அற்புத நன்மைகளை அள்ளி தரும், ஆமணக்கு எண்ணெய்
    அடுத்த செய்திக் கட்டுரை
    முடி முதல் சருமம் வரை அற்புத நன்மைகளை அள்ளி தரும், ஆமணக்கு எண்ணெய்
    ஆமணக்கு எண்ணெயின் நன்மைகள்

    முடி முதல் சருமம் வரை அற்புத நன்மைகளை அள்ளி தரும், ஆமணக்கு எண்ணெய்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 17, 2023
    07:30 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆமணக்கு விதையிலிருந்து தயாரிக்கப்படும், இந்த ஆமணக்கு எண்ணெய்/ விளக்கெண்ணெய், சிறந்த மலமிளக்கியாக செயல்படுகிறது. ஆமணக்கு எண்ணெய் உடலுக்கு அள்ளி தரும் மற்ற நன்மை பற்றி காண்போம்.

    சரும பொலிவிற்கு: ரிசினோலிக் அமிலம் நிறைந்த ஆமணக்கு எண்ணெய், சருமத்தில் ஏற்படும் நீர் இழப்பை ஈடு செய்து, சருமம் மிருதுவாக மாற உதவுகிறது.

    காயங்களை ஆற்றம் அருமருந்து: இதில்,பாக்டீரியா மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் நிரம்பியுள்ளன. அது தீக்காயங்கள், சிரங்கு, புண்கள் மற்றும் அறுவை சிகிச்சை காயங்களுக்கு சிகிச்சையளிக்க உதவும்.

    இயற்கையான கூந்தல் கண்டிஷனர்: ஆமணக்கு எண்ணெய், உங்கள் தலையை வறட்சியிலிருந்து காக்கிறது. இதில் உள்ள ஓலிக் மற்றும் லினோலிக் அமிலங்கள் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, பொடுகு மற்றும் உச்சந்தலையில் ஏற்படும் தொற்றுக்கு சிகிச்சையளிக்க உதவுகின்றன.

    உடல் ஆரோக்கியம்

    செரிமானத்திற்கு உதவும் விளக்கெண்ணெய்

    செரிமானத்திற்கு உகந்தது: ஆமணக்கு எண்ணெய், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் (FDA) ஒரு சிறந்த இயற்கை மலமிளக்கியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

    இந்த எண்ணெயில் உள்ள ரிசினோலிக் அமிலம் மற்றும் ஒமேகா -9 கொழுப்பு அமிலத்தின் அதிக உள்ளடக்கம், மலமிளக்கி பண்புகளை அளிக்கிறது. இது செரிமான செயல்பாடுகளை மேம்படுத்த உதவுகிறது.

    நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க: ஆமணக்கு எண்ணெய் உட்கொள்வதால், உங்கள் வெள்ளை இரத்த அணுக்கள் அதிகரிக்கிறது. ஆராய்ச்சியின் படி, இந்த எண்ணெய், T-11 செல்களின் எண்ணிக்கையையும், இரத்தத்தில் லிம்போசைட்டுகளின் உற்பத்தியையும் அதிகரிக்கிறது.

    அதனால் உடலில், அதிக நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறது. இது, பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் புற்றுநோய் செல்களை அழிக்க உதவுகிறது. மேலும், இரத்த ஓட்டத்தை அதிகரித்து, நிணநீர் வெளியேற்றத்தை மேம்படுத்துகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உடல் நலம்
    உடல் ஆரோக்கியம்

    சமீபத்திய

    நடிகர் விஷால் திருமணம் செய்யவிருக்கும் நடிகை இவர்தான்! இணையத்தில் வைரலாகும் தகவல் விஷால்
    அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்களின் நுழைவை எளிதாக்க கொள்கைகளை மறுசீரமைக்க மத்திய அரசு ஆலோசனை  அணுசக்தி
    இந்தியா விநியோகத்தைக் குறைத்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் அணை கட்டுமானத்தை சீனா துரிதப்படுத்துகிறது பாகிஸ்தான்
    கவாசாகி எலிமினேட்டருக்கு போட்டியாக ரெபெல் 500 க்ரூஸரை இந்தியாவில் அறிமுகம் செய்தது ஹோண்டா ஹோண்டா

    உடல் நலம்

    பகலில் தூங்கினால் என்ன ஆகும் தெரியுமா? எடை குறைப்பு
    'மெட்ராஸ் - ஐ' பருவகாலங்களில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடதாவை வைரஸ்
    கர்நாடகாவில் பரவும் ஜிகா வைரஸ் - 5 வயது சிறுமிக்கு தொற்று உறுதி இந்தியா
    குளிர்காலத்தில் இயற்கையாகவே உடலின் வெப்பத்தை தக்கவைக்க உதவும் 5 மூலிகைகள் ஆரோக்கியமான உணவுகள்

    உடல் ஆரோக்கியம்

    குழந்தைகள் ஓடியாடி விளையாடினால் கிடைக்கும் பலன்கள் ஆரோக்கியம்
    குளிர்கால நேரங்களில் பருவகால மாற்றங்கள் உண்மையில் ஹைப்போதைராய்டை பாதிக்கிறதா? தைராய்டு
    மழைக்காலத்தில் தயிர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டுமா? ஆரோக்கியம்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் சருமத்துக்கு என்ன நன்மைகளை எல்லாம் தருகிறது சரும பராமரிப்பு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025