'டிமான்டி காலனி-2' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது
இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் அருள்நிதி நடித்து கடந்த 2015ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் 'டிமான்ட்டி காலனி'. இப்படம் பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கு வரவைக்கும் திரில்லர் படமாக எடுக்கப்பட்டு, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினையும் பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த நவம்பர் மாதம் துவங்கிய நிலையில், அருள்நிதியுடன் இணைந்து பிரியா பவானி ஷங்கர் இதில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கிறது. இதனிடையே தற்போது அருள்நிதி ஹாரர் லுக்கில் காணப்படும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரினை படக்குழு இணையத்தில் வெளியிட்டுள்ளது.