NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / வயநாடு நிலச்சரிவு: ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கிய சிரஞ்சீவி - ராம் சரண்
    அடுத்த செய்திக் கட்டுரை
    வயநாடு நிலச்சரிவு: ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கிய சிரஞ்சீவி - ராம் சரண்
    சிரஞ்சீவி - ராம் சரண்

    வயநாடு நிலச்சரிவு: ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கிய சிரஞ்சீவி - ராம் சரண்

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 05, 2024
    12:02 am

    செய்தி முன்னோட்டம்

    கேரளாவில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டிற்கு மெகாஸ்டார் சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் ராம் சரண் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 4) நிதியுதவி அளித்துள்ளனர்.

    இருவரும் சேர்ந்து பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு ₹1 கோடியை கூட்டாக வழங்கியுள்ளனர்.

    இதுகுறித்து சிரஞ்சீவி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "கடந்த சில நாட்களாக கேரளா இயற்கை சீற்றம் காரணமாக நூற்றுக்கணக்கான விலைமதிப்பற்ற உயிர்கள் பேரழிவு மற்றும் இழப்புகளால் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்ந்துள்ளது.

    வயநாடு சோகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டு வர பிரார்த்திக்கிறேன். நானும் சரணும் சேர்ந்து கேரளா முதல்வர் நிவாரண நிதிக்கு ₹1 கோடியை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குகிறோம்." எனத் தெரிவித்துள்ளார்.

    நடிகர்கள் நிதியுதவி

    வயநாடு நிலச்சரிக்கு நிவாரண நிதி வழங்கிய நடிகர்கள்

    முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை தெலுங்கு நடிகருமான அல்லு அர்ஜூனும், கேரளாவில் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக ₹25 லட்சம் வழங்குவதாக அறிவித்தார்.

    முன்னதாக, கடந்த வாரத்தில், தமிழ் திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள் சூர்யா, விக்ரம், நயன்தாரா, விக்னேஷ் சிவன் ராஷ்மிகா மந்தனா மற்றும் மலையாள திரையுலகைச் சேர்ந்த மம்முட்டி, துல்கர் சல்மான், ஃபஹத் பாசில், நஸ்ரியா உள்ளிட்டோர் நன்கொடை அளித்திருந்தனர்.

    மேலும், சனிக்கிழமையன்று ராணுவத்தில் கவுரவ அதிகாரியாக உள்ள மோகன்லால் தனது ராணுவ உடையில் நிலச்சரிவு ஏற்பட்ட வயநாட்டை பார்வையிட்டார்.

    அப்போது பேரழிவால் பாதிக்கப்பட்ட பகுதியின் மறுவாழ்வுப் பணிகளுக்காக ₹3 கோடி நன்கொடை அளிப்பதாக உறுதியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ராம் சரண்
    வயநாடு
    நிலச்சரிவு

    சமீபத்திய

    தமிழ்நாட்டில் SSLC பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் 93.80% தமிழ்நாடு
    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்
    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்

    ராம் சரண்

    பெண் குழந்தைக்கு அப்பாவானார் தெலுங்கு நடிகர் ராம் சரண்  தெலுங்கு திரையுலகம்
    தெலுங்கு நடிகருக்கு வில்லனாகும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி  விஜய் சேதுபதி
    கிரிக்கெட்டில் கால் பதித்த நடிகர் சூர்யா- புதிய கிரிக்கெட் அணியை வாங்கினார் நடிகர் சூர்யா
    ராமர் கோவில் குடமுழுக்கு: அயோத்தியில் குவிந்த திரை பிரபலங்கள் அயோத்தி

    வயநாடு

    வயநாடு நிலச்சரிவுக்கு என்ன காரணிகள் பங்களித்தன?  நிலச்சரிவு
    வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 344 ஆக உயர்வு; மீட்புப் பணிகள் தீவிரம் நிலச்சரிவு
    வயநாடு மக்களுக்கு 100 வீடுகளை கட்டித் தருவதாக கர்நாடக அரசு அறிவிப்பு சித்தராமையா

    நிலச்சரிவு

    ஹிமாச்சல் நிலச்சரிவு: 15-கிமீ டிராபிக் ஜாமால் சுற்றுலா பயணிகள் அவதி  ஹிமாச்சல பிரதேசம்
    உத்தரகாண்டில் கனமழை, நிலச்சரிவு, வெள்ள அபாய எச்சரிக்கை  உத்தரகாண்ட்
    மகாராஷ்டிரா நிலச்சரிவு: 26 பேர் உயிரிழப்பு, 86 பேரை காணவில்லை  மகாராஷ்டிரா
    மகாராஷ்டிரா நிலச்சரிவு: 78 பேர் கண்டுபிடிக்கப்படாத நிலையில் மீட்புப் பணிகள் நிறுத்தம் மகாராஷ்டிரா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025