NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / திரிஷாவிடம் ₹1 கோடி நஷ்ட ஈடு கேட்ட வழக்கு- மன்சூர் அலிகான் வழக்கறிஞரிடம் நீதிபதி காட்டம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    திரிஷாவிடம் ₹1 கோடி நஷ்ட ஈடு கேட்ட வழக்கு- மன்சூர் அலிகான் வழக்கறிஞரிடம் நீதிபதி காட்டம்
    வழக்கு விசாரணை வரும் 22ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.

    திரிஷாவிடம் ₹1 கோடி நஷ்ட ஈடு கேட்ட வழக்கு- மன்சூர் அலிகான் வழக்கறிஞரிடம் நீதிபதி காட்டம்

    எழுதியவர் Srinath r
    Dec 11, 2023
    04:04 pm

    செய்தி முன்னோட்டம்

    நடிகை திரிஷாவுக்கு எதிராக, மன்சூர் அலிகான் தாக்கல் செய்திருந்த மான நஷ்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மன்சூர் அலிகானுக்கு எதிராக திரிஷா தான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளது.

    கடந்த மாதம் பத்திரிகையாளர் சந்திப்பில், இவர்கள் இருவரும் நடித்திருந்த லியோ படம் தொடர்பாக, திரிஷா குறித்த ஆபாச கருத்துக்களை மன்சூர் அலிகான் பதிவுசெய்திருந்தார்.

    இந்த விவகாரத்தில் மன்சூர் அலிகானுக்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது. மேலும் திரிஷாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் திரைத்துறை சார்ந்த பல்வேறு சங்கங்கள் அவரை வலியுறுத்தினா.

    இருப்பினும், மன்னிப்பு கேட்க மறுத்து வந்த மன்சூர் அலிகான், கடைசியாக அறிக்கை வெளியிட்டு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

    2nd card

    நடிகராக இருப்பவருக்கு பொதுவெளியில் எவ்வாறு பேச வேண்டும் என தெரிந்திருக்க வேண்டும்- நீதிபதி

    இந்நிலையில் இந்த விவகாரத்தில் தன்னுடைய பேட்டி தொடர்பான முழு வீடியோவையும் பார்க்காமல், தன் பெயருக்கு கலங்கம் விளைவித்து விட்டதாக, நடிகை திரிஷா, குஷ்பூ மற்றும் சிரஞ்சீவிக்கு எதிராக தலா ₹1 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு பதிவு செய்திருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த விவகாரத்தில் திரிஷா தான் வழக்கு தொடர்ந்து இருக்க வேண்டும். எங்களுக்கு எதுவும் தெரியாது என நினைக்க வேண்டாம் என நீதிபதி மன்சூர் திறப்பு வழக்கறிஞரிடம் கூறினார்.

    நடிகராக இருக்கும் நபரை பல்வேறு இளைஞர்கள் பின் தொடரும் நிலையில், பொதுவெளியில் எவ்வாறு பேச வேண்டும் என அவருக்கு தெரிந்திருக்க வேண்டுமென நீதிபதி கருத்து தெரிவித்தார்.

    3rd card

    வழக்கு விசாரணை டிசம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

    எந்த தப்பும் செய்யவில்லை என தற்போது கூறும் மன்சூர், கைது நடவடிக்கைகளில் இருந்து தப்பவா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்த அவரது தரப்பு வழக்கறிஞர், மன்சூர் பேசிய முழு காணொளியையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதாக தெரிவித்தார். மேலும் மன்சூரை பற்றி திரிஷா பதிவிட்டுள்ள ட்விட்டை நீக்க உத்தரவிடும்படியும் வாதிட்டார்.

    இந்நிலையில், மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டவுடன் பிரச்சனை தீர்ந்து விட்டதாக தெரிவித்த திரிஷா வழக்கறிஞர், மன்சூர் அலிகான் எதற்காக இந்த வழக்கை தொடர்ந்திருக்கிறார் என தெரியவில்லை என கூறினார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மன்சூர் அலிகான் வழக்கு குறித்து, திரிஷா, குஷ்பூ மற்றும் சிரஞ்சீவி பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை வரும் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மன்சூர் அலிகான்
    த்ரிஷா
    த்ரிஷா
    உயர்நீதிமன்றம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    மன்சூர் அலிகான்

    நடிகர் சங்க அறிக்கை குறித்து, நாசரிடம் தொலைபேசியில் மன்சூர் அலிகான் வாக்குவாதம் த்ரிஷா
    மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க தயாரிப்பாளர் சங்கம் வலியுறுத்தல் த்ரிஷா
    சர்ச்சை பேச்சு விவகாரம்: மன்சூர் அலிகான் மீது பாய்ந்தது வழக்கு! த்ரிஷா
    'மன்சூர் அலிகான் மோசமானவர் இல்லை' - ஆதரவு தெரிவிக்கும் சீமான்  சீமான்

    த்ரிஷா

    அடுத்த ரௌண்டுக்கு ரெடி ஆகும் திரிஷா; D50 படத்தில் இணையப்போவதாக தகவல்  தமிழ் திரைப்படம்
    10 ஆண்டுகளுக்கு பின்னர் செல்வராகவனுக்கு பதிலளித்த த்ரிஷா - வைரலாகும் ட்வீட்  ட்விட்டர்
    அக்டோபர் 4ல் தொடங்குகிறது விடாமுயற்சி படப்பிடிப்பு? அபுதாபியில் படக்குழு நடிகர் அஜித்
    துபாய் விமான நிலையத்தில் அஜித், திரிஷா; அஸிர்பைஜானில் தொடங்குகிறதா விடாமுயற்சி படப்பிடிப்பு?  நடிகர் அஜித்

    த்ரிஷா

    உள்நாட்டு போரில் பாதிப்படைந்துள்ள அஜர்பைஜானில் அஜித்தின் 'விடாமுயற்சி' படப்பிடிப்பு திரைப்பட துவக்கம்
    த்ரிஷா இடம்பெற்றுள்ள லியோ பட போஸ்டரை வெளியிட்டது பட குழு இயக்குனர்
    ஐந்து ஆண்டு தடைக்கு பின், தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி ஆன பாடகி சின்மயி பாடகர்
    கட்டாயம் அந்த வார்த்தையை பேச வேண்டுமா?- லோகேஷ் கனகராஜிடம் கேட்ட விஜய் லியோ

    உயர்நீதிமன்றம்

    மரணதண்டனை மனு விசாரணை: யாசின் மாலிக்கை ஒசாமா பின்லேடனுடன் ஒப்பிட்ட NIA இந்தியா
    ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு புதிய உத்தரவு பிறப்பிக்க தேவையில்லை - மதுரை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு
    சடலங்களுடன் உடலுறவு கொள்வதற்கு எதிராக சட்டம் இயற்றப்பட வேண்டும்: உயர்நீதிமன்றம் இந்தியா
    வனப் பாதுகாப்பு மசோதா தமிழ் மொழியில் வெளியிடப்படும்: மத்திய அரசு  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025