NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / AR ரஹ்மான்- சாய்ரா பானு பிரிவு குறித்து முதல்முறையாக மனம்திறந்த அவர்களின் பிள்ளைகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    AR ரஹ்மான்- சாய்ரா பானு பிரிவு குறித்து முதல்முறையாக மனம்திறந்த அவர்களின் பிள்ளைகள்
    வதந்திகளுக்கு கண்டனம் தெரிவித்த AR அமீன் மற்றும் ரஹீமா ரஹ்மான்

    AR ரஹ்மான்- சாய்ரா பானு பிரிவு குறித்து முதல்முறையாக மனம்திறந்த அவர்களின் பிள்ளைகள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 22, 2024
    04:06 pm

    செய்தி முன்னோட்டம்

    இசையமைப்பாளர் AR ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் தங்களது 29 வருட திருமண வாழ்க்கையை முடித்துக்கொண்டதாக இரு தினங்களுக்கு முன்னர் அறிவித்தனர்.

    ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்த இந்த செய்தி குறித்து அதன் பின்னர் பல்வேறு வதந்திகள் பரவ ஆரம்பித்தது.

    குறிப்பாக அவருடைய இசைக்குழுவில் இருந்த மோஹினி டேவும் அதே நேரத்தில் அவருடைய விவாகரத்து குறித்து அறிவித்ததும்.

    இதனைத்தொடர்ந்து இருவரை குறித்தும் பல தவறான செய்திகள் யூட்யூபில் உலவ ஆரம்பித்தது.

    இது குறித்து இரு தரப்பினரும் எந்த வித பதிலும் கூறாத நிலையில் தற்போது AR ரஹ்மானின் பிள்ளைகள் இதற்கு காட்டமாக பதிலளித்துள்ளனர்.

    கண்டனம்

    வதந்திகளுக்கு கண்டனம் தெரிவித்த AR அமீன் மற்றும் ரஹீமா ரஹ்மான்

    ரஹ்மானின் மகள் ரஹீமா ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்... வதந்திகள் வெறுப்பாளர்களால் கொண்டு செல்லப்படுகின்றன, முட்டாள்களால் பரப்பப்படுகின்றன, மற்றும் முட்டாள்களால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன" என்று ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார்.

    அதேபோல ஏ.ஆர் ரஹ்மானின் மகன் AR Ameen தன்னுடைய சமூக வலைதளத்தில், "எனது தந்தை ஒரு லெஜெண்ட். திரைத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளால் மட்டுமல்ல. இத்தனை வருடங்களாக அவர் சமபதித்த மதிப்பு, மரியாதை மற்றும் அன்பு காரணமாக அவர் லெஜெண்ட். ஆதாரமற்ற வதந்திகள் பரவுவதை பார்க்கும் போது மனம் உடைகிறது. ஒருவரின் வாழ்க்கை பற்றி பேசும்போது உண்மையின் முக்கியத்துவத்தையும் மரியாதையையும் அனைவரும் நினைவில் கொள்ளவேண்டும். பொய்யான தகவல் பகிர்வதை தவிர்க்கவும். அவரின் கண்ணியத்தை மதித்து அதை காக்க வேண்டும்" என்றார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஏஆர் ரஹ்மான்

    சமீபத்திய

    2025இல் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா நீடிக்கும்; ஐநா அறிக்கையில் தகவல் பொருளாதாரம்
    முதன்முறையாக 90 மீட்டருக்கும் மேல்... தோஹா டயமண்ட் லீக்கில் புதிய சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா நீரஜ் சோப்ரா
    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்

    ஏஆர் ரஹ்மான்

    'மறக்குமா நெஞ்சம்': ஏ.சி.டி.சி நிறுவனர் ஹேமந்த் மன்னிப்பு; ரசிகர்களுக்கு பணத்தை திருப்பித்தரும் பணி துவக்கம் சென்னை
    'அது முற்றிலும் பொய்யே'; விஜய் ஆண்டனி வெளியிட்ட அறிக்கை இசையமைப்பாளர்
    'மறக்குமா நெஞ்சம்' ஏஆர் ரஹ்மான் இசைநிகழ்ச்சி: ஈமெயில் அனுப்ப நாளையே கடைசி நாள் இசையமைப்பாளர்
    தொடரும் சோதனை: ஏ.ஆர்.ரகுமான் மீது வழக்குப்பதிவு செய்த அறுவைச்சிகிச்சை நிபுணர்கள் சங்கம் இசையமைப்பாளர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025