Page Loader
மனைவியை பிரிந்ததும் AR ரஹ்மான் போட்ட முதல் ட்வீட் இதுதான்
தனது சமூக வலைத்தளத்தில் பதிவை இட்டுள்ளார் AR ரஹ்மான்

மனைவியை பிரிந்ததும் AR ரஹ்மான் போட்ட முதல் ட்வீட் இதுதான்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 20, 2024
11:52 am

செய்தி முன்னோட்டம்

ஆஸ்கார் விருது வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும், அவரது மனைவி சாய்ரா பானுவும் 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு பிரிவதாக நேற்று அறிவித்தனர். ஆரம்பத்தில் இந்த பிரிவு அறிக்கை AR ரஹ்மானின் மனைவி சாய்ரா பானுவின் வழக்கறிஞர் மூலம் தான் வெளிவந்தது. எனினும் இது குறித்து ரஹ்மான் தரப்பில் எந்த கருத்தும் வெளியாகாத நிலையில் ரசிகர்கள் கவலையில் இருந்தனர். இதன் தொடர்ச்சியாக, நேற்று நள்ளிரவு ஏ.ஆர். ரஹ்மான் தனது சமூக வலைத்தளத்தில், தங்கள் தனியுரிமையை மதிப்பதற்காக நன்றி தெரிவிக்கும் உணர்ச்சிக் குறிப்பைப் பகிர்ந்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

அறிக்கை

AR ரஹ்மானின் உணர்ச்சி பதிவு

ரஹ்மான் இந்த பிரிவு முடிவு ஒரு 'சிதறல்' முடிவு என்று குறிப்பிட்டார். மேலும் அவர்கள் தங்கள் முப்பத்தாவது திருமண ஆண்டை கொண்டாட நினைத்திருந்த நேரத்தில் இப்படி ஒரு முடிவை எட்டவேண்டிய நிலைமை துரதிருஷ்டமானது என்றார். "எல்லாமே கண்ணுக்குத் தெரியாத முடிவைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. கடவுளின் சிம்மாசனம் கூட உடைந்த இதயங்களின் கனத்தில் நடுங்கக்கூடும். இருப்பினும், இந்த சிதைவில், துண்டுகள் மீண்டும் தங்கள் இடத்தைக் கண்டுபிடிக்கவில்லை என்றாலும், அர்த்தத்தைத் தேடுகிறோம்" என்று நெகிழ்ச்சியான, உள்ளர்த்தம் பொதிந்த பதிவை வெளியிட்டுள்ளார். "இந்த பலவீனமான அத்தியாயத்தில் (sic) நாங்கள் நடக்கும்போது உங்கள் கருணை மற்றும் எங்கள் தனியுரிமைக்கு நன்றி" என்றும் அவர் கூறியுள்ளார்.