Page Loader
ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் ஜூலை 12ஆம் தேதி மும்பையில் நடைபெறவுள்ளது
ஊகித்ததற்கு மாறாக, மும்பையிலேயே திருமணம் நடைபெறவுள்ளது

ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் ஜூலை 12ஆம் தேதி மும்பையில் நடைபெறவுள்ளது

எழுதியவர் Venkatalakshmi V
May 30, 2024
03:38 pm

செய்தி முன்னோட்டம்

ரிலையன்ஸ் நிறுவனர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, தனது வருங்கால மனைவி ராதிகா மெர்ச்சண்டை ஜூலை 12ஆம் தேதி மும்பையில் திருமணம் செய்ய உள்ளார். மணி கண்ட்ரோல் வெளியிட்ட செய்திப்படி, "சேவ் தி டேட்" என தலைப்பிடப்பட்ட அழைப்பிதழில், இவர்களின் ஆடம்பர திருமணம் BKC இல் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது. பல சர்வதேச இடங்களை நெட்டிஸின்கள் ஊகித்ததற்கு மாறாக, மும்பையிலேயே திருமணம் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனந்த், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸில் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் மற்றும் ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் வாரியங்களில் இயக்குநராக பல்வேறு பதவிகளில் பணியாற்றினார். இதற்கிடையில், ராதிகா நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர், மேலும் என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தில் இயக்குநராக உள்ளார்.

அட்டவணை

மூன்று நாள் திருமண கொண்டாட்டம் திட்டமிடப்பட்டுள்ளது 

ஆனந்த்- ராதிகா திருமணம் ஜூலை 12 முதல் ஜூலை 14 வரை மூன்று நாட்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'ஷுப் விவா' என்று அழைக்கப்படும் முக்கிய திருமண விழா, வெள்ளிக்கிழமை, ஜூலை 12 அன்று தொடங்கும் எனவும், விருந்தினர்கள் இந்திய பாரம்பரிய உடைகளை அணியுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் எனவும் அந்த அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த நாள் 'தெய்வீக ஆசீர்வாத விழா' நடைபெறுகிறது. மறுநாள், ஜூலை 14, ஞாயிற்றுக்கிழமை கொண்டாட்டங்களின் இறுதி நாளான திருமண வரவேற்பு நடைபெறும். இந்நிலையில் இத்தாலியில் இரண்டாவது ப்ரீ-வெட்டிங் கொண்டாட்டங்களும் தொடங்கி விட்டது. இதில், ஷாருக்கான், தோனி மற்றும் சல்மான் கான் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். முன்னதாக மார்ச் மாதம், ஜாம்நகரிலும் இதேபோல ப்ரீ-வெட்டிங் கொண்டாட்டங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.