மார்க் ஆண்டனி படத்தின் எழுத்தாளர் இயக்கத்தில் செவிலியராக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்
ஐஸ்வர்யா ராஜேஷ் தனது அடுத்த படத்தில், செவிலியராக நடிக்க இருப்பதாக படத்தின் இயக்குனர் சவரி முத்து தெரிவித்துள்ளார். மார்க் ஆண்டனி, அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் எழுத்தாளராக பணியாற்றிய சவரி முத்து, தற்போது ஐஸ்வர்யா ராஜேஷை இயக்குகிறார். துவாரகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு, இசையமைப்பாளர் இமான் இசையமைக்கிறார். படத்தின் பூஜை நேற்று மாலை நடைபெற்ற நிலையில், படத்தில் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, சந்தான பாரதி உள்ளிட்டோரும் படத்தில் நடிக்கின்றனர். முழுக்க முழுக்க காமெடி திரில்லர் படமாக உருவாகும் இப்படம், சமூகக் பிரச்சனைகளையும் பேசும் எனவும், ஐஸ்வர்யா ராஜேஷின் கதாபாத்திரம், செவிலியராக மிகவும் சக்தி வாய்ந்த கதாபாத்திரமாக இருக்கும் என படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.