NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / மகள் ஆராத்யாவின் வழக்கு குறித்து முதல்முறையாக மனம் திறந்தார் ஐஸ்வர்யா ராய் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மகள் ஆராத்யாவின் வழக்கு குறித்து முதல்முறையாக மனம் திறந்தார் ஐஸ்வர்யா ராய் 
    மகள் ஆராத்யாவுடன் ஐஸ்வர்யா ராய்

    மகள் ஆராத்யாவின் வழக்கு குறித்து முதல்முறையாக மனம் திறந்தார் ஐஸ்வர்யா ராய் 

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 26, 2023
    11:33 am

    செய்தி முன்னோட்டம்

    கோலிவுட் மட்டுமல்லாது, பாலிவுட்டிலும் மிகவும் பிரபலமான நடிகை, ஐஸ்வர்யா ராய். இவருக்கும், நடிகர் அபிஷேக் பச்சனுக்கும் 11 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    ஆராத்யா பச்சன் என்று அழைக்கப்படும் அந்த சிறுமி சில தினங்களுக்கு முன்னர், டெல்லி உயர் நீதிமன்றத்தில், ஒரு வழக்கு தொடுத்தார்.

    அந்த வழக்கில், குறிப்பிட்ட சில யூட்யூப் சேனல்கள், தன்னுடைய உடல்நிலை குறித்து தவறான செய்திகள் பரப்பி வருவதாகவும், அதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    சில நாட்களுக்கு முன்னர். ஆராத்யாவின் உடல் நிலை மோசமாக இருப்பதாகவும், அவர் விரைவில் இறந்துவிடுவார் என்றும், சில யூட்யூப் வீடியோக்களில், அவர் இறந்து விட்டார் என்றும் கூறப்பட்டது. இதுதான், ஆராத்யா தரப்பில் நீதிமன்ற தீர்வை அணுக காரணம்.

    card 2

    தவறான செய்திகள் பரவுவதை குறித்து கருத்து கூறிய ஐஸ்வர்யா ராய் 

    வழக்கின் தீர்ப்பு வந்த பிறகும், அது குறித்து பொதுவெளியில் பேசாதிருந்தார் ஐஸ்வர்யா ராய்.

    இதனிடையே, நேற்று மும்பையில், 'பொன்னியின் செல்வன் 2' படத்தின் ப்ரோமோஷனும், நிருபர்கள் சந்திப்பும் நடைபெற்றது. அப்போது ஐஸ்வர்யாவிடம், தவறான தகவல்கள் பரவுவது குறித்து கருத்து கேட்கப்பட்டது.

    "ஊடகத்தைச் சேர்ந்த ஒரு உறுப்பினர் போலி தகவல் இருப்பதை அங்கீகரிப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எனவே நீங்கள் வெளிப்படையாக அதை பரப்பபோவதில்லை என்று எங்களுக்கு ஒரு பெரிய நம்பிக்கையைத் தருகிறது. மேலும், நீங்கள் அதை ஊக்குவிக்கப் போவதில்லை என்று தெரிகிறது. எனவே எங்கள் உணர்வுக்கு நீங்கள் தரும் ஆதரவிற்கும், அதை அங்கீகரித்த உங்களுக்கும் மிக்க நன்றி" என்று ஐஸ்வர்யா ராய் கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கோலிவுட்
    பாலிவுட்

    சமீபத்திய

    முன்னாள் தவெக உறுப்பினர் கோவை வைஷ்ணவி செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தார் திமுக
    பயங்கரவாதத்தை நிறுத்த பாகிஸ்தானுக்கு துருக்கி அழுத்தம் கொடுக்க வேண்டும்; இந்தியா அறிவுறுத்தல் துருக்கி
    ஐபிஎல் 2025 ஜிடிvsஎல்எஸ்ஜி: டாஸ் வென்றது குஜராத் டைட்டன்ஸ்; லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    'Ozempic teeth' என்றால் என்ன, எடை இழப்பு மருந்தின் புதிய பக்க விளைவினைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள் எடை குறைப்பு

    கோலிவுட்

    நடிகை இலியானா கர்ப்பமா? குழப்பத்தில் நெட்டிஸன்கள் பாலிவுட்
    சமந்தா சினிமாவில் நீடிப்பதற்காக 'மலிவான' செயல்களில் ஈடுபடுகிறார்: தயாரிப்பாளர் சிட்டிபாபு  சமந்தா ரூத் பிரபு
    மன உளைச்சலில் உள்ளேன்: பிச்சைக்காரன் 2 தடைக்கு விஜய் ஆண்டனி வேதனை!  திரைப்பட வெளியீடு
    பொன்னியின் செல்வன் படத்தில் உருவான மத சர்ச்சைகளுக்கு பதிலளித்த மணிரத்னம்  லைகா

    பாலிவுட்

    பாலிவுட்டில் கால் பதிக்கும் யாஷ்! 'ராமாயணம்' படத்தில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை! வைரல் செய்தி
    முதல் முறையாக மகளின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பிரியங்கா சோப்ரா வைரல் செய்தி
    590 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்துள்ள 'பதான்' திரைப்படம் திரைப்பட வெளியீடு
    பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை திருமணம் செய்ய போகும் 'தோனி' பட நாயகி கியாரா திருமணங்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025