Page Loader
சஹாரா குழுமத்தின் தலைவரான சுப்ரதா ராய் காலமானார் 
இது குறித்து அவரது குழுமம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

சஹாரா குழுமத்தின் தலைவரான சுப்ரதா ராய் காலமானார் 

எழுதியவர் Sindhuja SM
Nov 15, 2023
09:53 am

செய்தி முன்னோட்டம்

இந்தியா: சஹாரா குழுமத்தின் தலைவரான சுப்ரதா ராய்(75), நீண்டகால உடல்நலக்குறைவுக்குப் பிறகு நேற்று மரணமடைந்தார். இது குறித்து அவரது குழுமம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து, சக ஊழியர்கள், அரசியல்வாதிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் ஆகியோர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், ராயின் மறைவு மாநிலத்திற்கும், நாட்டிற்கும் ஏற்படும் மிகப்பெரும் இழப்பு என்று கூறி இரங்கல் தெரிவித்துள்ளார். "ஏனென்றால், அவர் மிகவும் வெற்றிகரமான தொழிலதிபராக இருந்ததோடு, எண்ணற்ற மக்களுக்கு உதவி செய்து அவர்களுக்கு ஆதரவாகவும் இருந்தார்." என்று அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

எக்ஜச

பிரபலங்கள் சுப்ரதா ராயிக்கு இரங்கல் 

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ்தீப் சபீர், இந்த ஆழ்ந்த இழப்பு குறித்து தனது இதயப்பூர்வமான இரங்கலை பகிர்ந்து கொண்டார். முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தனது சமூக வலைதள பதிவில், "சிறந்த ஊக்குவிப்பாளர், பேச்சாளர் மற்றும் விளையாட்டு பிரியரை நாம் இழந்துவிட்டோம்" என்று கூறியுள்ளார். ராயின் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் அனுமதிக்கப்பட்டார். மெட்டாஸ்டேடிக் வீரியம், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு ஆகியவற்றால் ஏற்படும் சிக்கல்களுடன் தொடர்ந்து போராடி வந்த அவர், கார்டியோஸ்பிரேட்டரி மாரடைப்பு காரணமாக நேற்று இரவு 10.30 மணியளவில் மருத்துவமனையில் காலமானார்.