NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / சென்செக்ஸ் 1109 புள்ளிகள் சரிவு: முதலீட்டாளர்களுக்கு ரூ.14 லட்சம் கோடி இழப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்செக்ஸ் 1109 புள்ளிகள் சரிவு: முதலீட்டாளர்களுக்கு ரூ.14 லட்சம் கோடி இழப்பு

    சென்செக்ஸ் 1109 புள்ளிகள் சரிவு: முதலீட்டாளர்களுக்கு ரூ.14 லட்சம் கோடி இழப்பு

    எழுதியவர் Sindhuja SM
    Mar 13, 2024
    06:37 pm

    செய்தி முன்னோட்டம்

    புதன்கிழமை, மார்ச் 13, 2024 அன்று பங்குச் சந்தை கடுமையாக சரிந்ததால், முதலீட்டாளர்கள் பெரும் இழப்பை சந்தித்தனர்.

    இன்று பிற்பகல் சென்செக்ஸ் 1109 புள்ளிகள் சரிந்து 72,558 ஆக இருந்தது. இந்த குறிப்பிடத்தக்க சரிவு மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் நிறுவனங்களை கடுமையாக தாக்கியது.

    பங்கு சந்தையின் சரிவு காரணமாக நிஃப்டியும் பாதிக்கப்பட்டது. 422 புள்ளிகள் சரிந்த நிஃப்டி, இன்று பங்கு சந்தையின் முடிவில் 21,913 ஆக இருந்தது.

    இதனால், நிஃப்டி நேற்றைய லாபங்களை இழந்ததுடன், முதலீட்டாளர்களிடையே நிலவும் அவநம்பிக்கையை மேலும் அதிகரித்தது.

    பங்குசந்தை 

    89 பங்குகள் மட்டுமே 52 வார உச்சத்தை எட்டியது

    14 லட்சம் கோடி அளவுக்கு முதலீட்டாளர்கள் பெரும் இழப்பை சந்தித்தனர்.

    முந்தைய அமர்வின் சொத்து மதிப்பான ரூ.385.64 லட்சம் கோடியிலிருந்து மொத்த முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு ரூ.371.69 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது.

    பவர்கிரிட், என்டிபிசி, டாடா ஸ்டீல், பார்தி ஏர்டெல், டைட்டன் மற்றும் டாடா மோட்டார்ஸ் போன்ற பங்குகளால் தான் சென்செக்ஸில் பெரும் இழப்பு ஏற்பட்டது.

    மொத்தத்தில் 223 பங்குகள் கடுமையாக சரிந்து, கடந்த 52 வாரம் இல்லாத சரிவை சந்தித்துள்ளது. பிஎஸ்இயில் இருக்கும் 89 பங்குகள் மட்டுமே 52 வார உச்சத்தை எட்டியது.

    3,926 பங்குகளில் 351 பங்குகள் மட்டுமே பச்சை நிறத்தில் வர்த்தகமாகியது. 3,526 பங்குகளில் பெரும்பாலானவை சிவப்பு நிறத்தில் வர்த்தகம் செய்யப்பட்டன. 66 பங்குகள் மாற்றமே இல்லாமல் இருந்தன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பங்குச் சந்தை
    சென்செக்ஸ்

    சமீபத்திய

    பாகிஸ்தான் பயங்கரவாதத்தை அம்பலப்படுத்த ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களுடன் உலகநாடுகளுக்கு இன்று கிளம்புகிறது MPக்கள் குழு  இந்தியா
    ஐபிஎல் 2025: மும்பைக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் போட்டியை இடமாற்றம் செய்யக்கோரும் டெல்லி அணி டெல்லி கேப்பிடல்ஸ்
    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025

    பங்குச் சந்தை

    அதானி குழுமத்தில் செய்த முதலீட்டில் இழப்பு ஏதும் இல்லை: LIC இந்தியா
    அதானி குழும பிரச்சனை: பங்குகள் சரிவடைந்தற்கு பதிலளித்த நிதியமைச்சர் இந்தியா
    அதானி பங்குகள் மீண்டும் சரிவு! காரணம் என்ன? தொழில்நுட்பம்
    அதானி பங்குகளில் முதலீட்டை அதிகரித்திருக்கும் எல்ஐசி!  முதலீடு

    சென்செக்ஸ்

    நிஃப்டி மற்றும் சென்செக்ஸில் ஏன் இந்த திடீர் சரிவு? வணிகம்
    இதுவரை இல்லாத அளவு 22,150 புள்ளிகளை எட்டியது நிஃப்டி 50  பங்குச் சந்தை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025