NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / ரத்தன் டாடா: டாடா குழுமத்தை 5 பில்லியன் டாலரிலிருந்து 100 பில்லியன் டாலராக உயர்த்திய தலைவர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரத்தன் டாடா: டாடா குழுமத்தை 5 பில்லியன் டாலரிலிருந்து 100 பில்லியன் டாலராக உயர்த்திய தலைவர்
    டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவரான ரத்தன் டாடா

    ரத்தன் டாடா: டாடா குழுமத்தை 5 பில்லியன் டாலரிலிருந்து 100 பில்லியன் டாலராக உயர்த்திய தலைவர்

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 10, 2024
    09:27 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் தொழிலதிபர்கள் மற்றும் பரோபகாரர்களில் ஒருவரான ரத்தன் நேவல் டாடா, தனது 86வது வயதில், அக்டோபர் 9, 2024 புதன்கிழமை அன்று காலமானார்.

    கடந்த சில நாட்களாக மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் வயது மூப்பிற்கான நோயினால் சிகிச்சை பெற்று வந்தார் ரத்தன் டாடா.

    1991 முதல் 2012 வரை டாடா குழுமத்தை வழிநடத்திய நபராக, ரத்தன் டாடாவின் பாரம்பரியம் உயர்ந்த வணிக சாதனைகளில் ஒன்றல்ல, ஆனால் "இந்தியா மற்றும் இந்தியர்களுக்கு" முதலிடம் கொடுக்கும் நெறிமுறையில் ஆழமாக வேரூன்றியுள்ளது.

    ஆரம்பகால வாழ்க்கை 

    கடைநிலை ஊழியராக தனது பயணத்தை தொடங்கிய டாடா

    டிசம்பர் 28, 1937 அன்று மும்பையில் பிறந்த ரத்தன் டாடா ஒரு புகழ்பெற்ற பார்சி குடும்பத்தில் இருந்து வந்தவர்.

    பெற்றோர்கள் பிரிவினையால் பாட்டி நவாஜ்பாய் டாடாவால் வளர்க்கப்பட்டவர் ரத்தன் டாடா.

    கார்னெல் பல்கலைக்கழகம் மற்றும் ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூல் போன்ற மதிப்புமிக்க நிறுவனங்களில் கல்வி கற்றவர் ரத்தன் டாடா.

    1961 இல் டாடா குழுமத்தில் நுழைந்த ரத்தன் டாடா, முதலில் டாடா ஸ்டீலின் கடைத் தளத்தில் தொடங்கி, அங்கு அவர் தொழிலாளர்களுடன் பணிபுரிந்தார்.

    இந்த அனுபவமே, இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த மக்களைப் பற்றிய தனித்துவமான புரிதலை அவருக்கு அளித்தது.

    தலைமை 

    டாடா குழுமத்திற்கு தலைமையேற்ற ரத்தன் டாடா

    ஜே.ஆர்.டி டாடாவுக்குப் பிறகு 1991 ஆம் ஆண்டு டாடா சன்ஸ் தலைவராக ரத்தன் டாடா பொறுப்பேற்றார்.

    அந்த நேரத்தில், டாடா குழுமம் பெரும்பாலும் ஒரு இந்திய நிறுவனமாக மட்டுமே இருந்தது.

    அதன் ஆண்டு வருமானம் சுமார் $5 பில்லியன் தான். ரத்தன் டாடாவின் தொலைநோக்கு தலைமையின் கீழ், 2012 இல் அவர் ஓய்வுபெறும் போது குழுமம் $100 பில்லியன் வருவாயாக விரிவடைந்தது.

    இன்று, டாடா குழுமம் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்குகிறது.

    எஃகு மற்றும் ஆட்டோமொபைல்களில் இருந்து IT சேவைகள் மற்றும் நுகர்வோர் பொருட்கள் வரை தொழில்களில் வலுவான முன்னிலையில் உள்ளது.

    உலகளாவிய விரிவாக்கம்

    இந்தியாவை முதன்மைப்படுத்தி விரிவாக்க நடைமுறைகள்

    ரத்தன் டாடாவின் துணிச்சலான அணுகுமுறை, டாடா குழுமத்தை உலகளாவிய அதிகார மையமாக மாற்ற வழிவகுத்தது.

    இந்தியாவையும் அதன் மக்களையும் முதன்மைப்படுத்த வேண்டும் என்ற அவரது தத்துவம், உலக அரங்கில் நாட்டின் பிம்பத்தை உயர்த்துவதற்காக சர்வதேச கையகப்படுத்துதல்களை அவர் எவ்வாறு பயன்படுத்தினார் என்பதில் அவரது வியாபார நோக்கம் தெளிவாகத் தெரிகிறது.

    கையகப்படுத்துதல்

    டாடா கையகப்படுத்திய வெளிநாட்டு நிறுவனங்களின் பட்டியல்

    டெட்லி (2000): பிரிட்டிஷ் தேயிலை நிறுவனத்தை $450 மில்லியனுக்கு கையகப்படுத்தியது. இது உலகளாவிய பான சந்தையில் டாடாவின் நுழைவைக் குறித்தது.

    கோரஸ் (2007): டாடா ஸ்டீல் $13 பில்லியன் கோரஸை கையகப்படுத்தியது. இதன் மூலம் டாடா உலகின் மிகப்பெரிய எஃகு உற்பத்தியாளர்களில் ஒன்றாக மாற்றியது.

    ஜாகுவார் லேண்ட் ரோவர் (2008): ரத்தன் டாடா இந்த சின்னமான பிரிட்டிஷ் கார் பிராண்டுகளை $2.3 பில்லியன் கையகப்படுத்தியதன் மூலம் டாடா மோட்டார்ஸை ஒரு உலகளாவிய ஆட்டோமோட்டிவ் பிளேயராக மாற்றினார். இந்த ஒப்பந்தம் டாடா மோட்டார்ஸை உலகளாவிய போட்டியாளராக மாற்றியது மட்டுமின்றி சொகுசு கார் பிராண்டுகளுக்கும் புத்துயிர் அளித்தது.

    மலிவு ரக கார்

    'இந்தியாவும் இந்தியர்களும் முதலில்': டாடாவின் தாரக மந்திரம்

    2008 இல் தொடங்கப்பட்ட டாடா நானோவை விட ரத்தன் டாடாவின் இந்தியா மீதான அர்ப்பணிப்பை வேறு எந்த திட்டமும் சிறப்பாகக் குறிக்கமுடியாது.

    இந்திய நடுத்தர வர்க்கத்தினருக்கு மலிவு விலையில் கிடைக்கக்கூடிய வகையில், ரூ.1 லட்சம் விலையில், உலகின் மலிவான காரை உருவாக்குவதே அவரது பார்வையாக இருந்தது.

    இந்த கார் வணிக ரீதியில் வெற்றி பெறவில்லை என்றாலும், நானோவின் அறிமுகத்திற்கு பின்னால் உள்ள உணர்வு டாடாவின் மக்களை மையப்படுத்திய தலைமைக்கு சான்றாக இருந்தது.

    புதுமைகளின் மூலம் மில்லியன் கணக்கான இந்தியர்களின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும் என்ற ரத்தன் டாடாவின் விருப்பத்தை இது பிரதிபலித்தது.

    விருதுகள்

    விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்

    வணிகம், பரோபகாரம் மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்கு ரத்தன் டாடாவின் பங்களிப்புகள், உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் அவருக்கு ஏராளமான பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றுத் தந்தது.

    ரத்தன் டாடா இதுவரை பெற்ற விருதுகளின் பட்டியல்:

    பத்ம பூஷன்(2000), பத்ம விபூஷன்(2008): இந்தியா அரசின் உயரிய குடிமகன் விருதுகள்

    கெளரவ நைட் கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி பிரிட்டிஷ் எம்பயர்(KBE, 2009): இங்கிலாந்து-இந்தியா உறவுகளுக்கான அவரது சேவைகளுக்காக இரண்டாம் எலிசபெத் மகாராணியால் விருது வழங்கப்பட்டது.

    வாழ்நாள் சாதனையாளர் விருது (2014): ராக்பெல்லர் அறக்கட்டளையால் அவரது பரோபகார முயற்சிகளுக்காக வழங்கப்பட்டது.

    பரோபகாரத்திற்கான கார்னகி பதக்கம் (2007) உள்ளிட்ட சர்வதேச விருதுகளை பெற்றுள்ளார்.

    அது மட்டுமின்றி சிறந்த தலைமைக்கான விருதுகளும், சிறந்த மனிதாபிமானிக்கான விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டாடா
    இந்தியா
    வணிகம்
    வணிக செய்தி

    சமீபத்திய

    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தலை முடியை விரித்து போட்டு ஆடினால் தான் மரியாதையாம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டிரம்பை வரவேற்க பெண்கள் Al-Ayyala நடனம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

    டாடா

    ரூ.15,000 கோடி மதிப்புடைய BSNL ஒப்பந்தத்தை கைப்பற்றிய டாடா குழுமம்! டிசிஎஸ்
    புதுமைகளை முன்னெடுக்கும் உலகின் டாப் 50 நிறுவனங்கள்.. டாடா குழுமத்திற்கு 20வது இடம்! உலகம்
    பேட்டரி தயாரிப்பிற்காக இந்திய நிறுவனத்துடன் கைகோர்த்த JLR  எலக்ட்ரிக் கார்
    CNG வசதியுடனும் வெளியாகிறதா டாடா 'கர்வ்'? டாடா மோட்டார்ஸ்

    இந்தியா

    கிரிக்கெட் சங்கத்தில் முறைகேடு; அமலாக்கத்துறை முன் ஆஜராக முன்னாள் இந்திய கேப்டனுக்கு மீண்டும் சம்மன் அமலாக்கத்துறை
    இவி9 எலக்ட்ரிக் எஸ்யூவி காரை இந்தியாவில் அறிமுகம் செய்தது கியா மோட்டார்ஸ்; விலை ரூ.1.3 கோடி மட்டுமே! கியா
    சத்தீஸ்கரில் போலி எஸ்பிஐ வங்கி கிளை கண்டுபிடிப்பு; பல லட்சங்களை இழந்த மக்கள் எஸ்பிஐ
    அமெரிக்காவின் மத சுதந்திர அறிக்கையை நிராகரித்தது இந்தியா; வெளியுறவு அமைச்சகம் பதிலடி அமெரிக்கா

    வணிகம்

    வாரிசுகளுக்கு வழிவிடும் வகையில் 8 ஆண்டுகளில் படிப்படியாக ஓய்வு பெற அதானி திட்டம் அதானி
    மீண்டும் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி கொடுக்கும் நிறுவனங்கள்; பின்னணி என்ன? தொழில்நுட்பம்
    கானாவை விலைக்கு வாங்கியது ரேடியோ மிர்ச்சியின் தாய் நிறுவனம் இஎன்ஐஎல் வணிக செய்தி
    காபி டே எண்டர்பிரைசஸ் லிமிடெட் திவால்; தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் அறிவிப்பு வணிக செய்தி

    வணிக செய்தி

    கச்சா எண்ணெய் மீதான விண்ட்ஃபால் வரியை ரூ.2,500 குறைத்தது மத்திய அரசு; டீசல், ஏடிஎஃப் மீதான வரி ரத்து மத்திய அரசு
    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திற்கு ₹17 கோடி ஜிஎஸ்டி வரிஏய்ப்பு நோட்டீஸ் ஜிஎஸ்டி
    Paytm இன் பொழுதுபோக்கு டிக்கெட் வணிகத்தை Zomato வாங்க உள்ளது; மேலும் தகவல்கள் சோமாட்டோ
    போன்பே, பேடிஎம் யுபிஐ செயலிகளுக்கு போட்டியாக super.money'ஐ களமிறக்கிய ஃபிளிப்கார்ட்  யுபிஐ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025