NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / இனி வங்கிக் கணக்குகளில் நான்கு நாமினிக்களை நியமிக்க முடியும்; வங்கி சட்டங்கள் திருத்த மசோதா நிறைவேற்றம்
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    இனி வங்கிக் கணக்குகளில் நான்கு நாமினிக்களை நியமிக்க முடியும்; வங்கி சட்டங்கள் திருத்த மசோதா நிறைவேற்றம்
    இனி வங்கிக் கணக்குகளில் நான்கு நாமினிக்களை நியமிக்க முடியும்

    இனி வங்கிக் கணக்குகளில் நான்கு நாமினிக்களை நியமிக்க முடியும்; வங்கி சட்டங்கள் திருத்த மசோதா நிறைவேற்றம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Mar 28, 2025
    04:02 pm

    செய்தி முன்னோட்டம்

    வங்கிச் சட்டங்கள் (திருத்தம்) மசோதாவை மாநிலங்களவை நிறைவேற்றியுள்ளது.

    இதன் மூலம் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் ஒருவருக்குப் பதிலாக நான்கு நாமினிக்களை நியமிக்க முடியும்.

    இந்தத் திருத்தம் நிதி நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துவதையும் வங்கிகளில் கோரப்படாத வைப்புத்தொகையைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

    கூடுதல் விபரங்கள் இங்கே:-

    முக்கிய மாற்றங்கள்

    நாமினி நியமன விதிகளில் முக்கிய மாற்றங்கள்

    முன்னர், கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் மறைவின் போது நிதியைப் பெற ஒரு நாமினியை மட்டுமே நியமிக்க முடியும். இந்தத் திருத்தம் இப்போது பல நாமினிகளை நியமிக்க அனுமதிக்கிறது.

    இது, மென்மையான சொத்து விநியோகத்தை உறுதி செய்கிறது. மேலும், இது ஒரே நேரத்தில் மற்றும் அடுத்தடுத்து என இரண்டு வகையான பரிந்துரைகளையும் அறிமுகப்படுத்துகிறது.

    ஒரே நேரத்தில் நியமனம்: இதன்படி கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் வைப்புத்தொகையின் குறிப்பிட்ட சதவீதத்தை வெவ்வேறு நாமினிகளுக்கு ஒரே நேரத்தில் ஒதுக்கலாம்.

    தொடர் நியமனம்: இந்த முறை ஒரு முன்னுரிமை வரிசையை உருவாக்குகிறது.

    இதன்படி முதன்மை நாமினி அவற்றைக் கோர முடியாவிட்டால் அடுத்த கிடைக்கக்கூடிய நாமினிக்கு நிதி மாற்றப்படுவதை உறுதி செய்கிறது.

    லாக்கர்

    லாக்கர் நியமன விதிகள்

    வங்கி சட்டத்தில் கூடுதலாக வங்கி லாக்கர் நியமன விதிகளும் திருத்தப்பட்டுள்ளது.

    இரண்டு முறைகளும் பொருந்தும் வைப்பு கணக்குகளைப் போலன்றி, லாக்கர்கள் அடுத்தடுத்த நியமனத்தை மட்டுமே அனுமதிக்கும்.

    வங்கி கணக்குகளில் உள்ள கோரப்படாத வைப்புத்தொகைகள் மார்ச் 2023 இல் ₹62,225 கோடியிலிருந்து மார்ச் 2024 இல் ₹78,213 கோடியாக உயர்ந்துள்ள நிலையில், இந்த திருத்தங்கள், குடும்பங்களுக்கு தடையற்ற நிதி பரிமாற்றங்களை உறுதி செய்வதோடு, வங்கிகளுக்கான சட்ட மோதல்கள் மற்றும் நிர்வாகச் சுமைகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

    முன்னதாக, இந்த சட்டத் திருத்தம் இரண்டு நாட்களுக்கு முன்பு மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்றவுடன் சட்டமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வங்கிக் கணக்கு
    மாநிலங்களவை
    நாடாளுமன்றம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    வங்கிக் கணக்கு

    ஒருவர் எத்தனை வங்கிக் கணக்குகள் வைத்துக் கொள்வது நல்லது வாழ்க்கை
    வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் வைக்காததற்கான அபராதம்: ரூ.21,000 கோடி வசூல்  மத்திய அரசு
    இந்தியாவில் நிரந்தர வைப்புநிதிக்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள் முதலீட்டு குறிப்புகள்
    உரிமை கோரப்படாத வைப்புநிதி குறித்த தகவல்களுக்கு புதிய வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது ரிசர்வ் வங்கி ரிசர்வ் வங்கி

    மாநிலங்களவை

    அதானி நிறுவன பிரச்சனை: நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் ஒத்திவைப்பு இந்தியா
    சில எம்.பி.க்கள் இந்த சபைக்கு அவப்பெயரை ஏற்படுத்துகின்றனர்: பிரதமர் மோடி இந்தியா
    நேரு குடும்பப்பெயரைக் கண்டு ஏன் காந்திகள் பயப்படுகிறார்கள்: பிரதமர் மோடி இந்தியா
    தமிழ் பழமொழி குறித்து நாடாளுமன்றத்தில் விவாதித்த நிதியமைச்சர் டெல்லி

    நாடாளுமன்றம்

    நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்குகிறது இந்தியா
    குளிர்கால கூட்டத்திற்கான அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தியது மத்திய அரசு; முக்கிய மசோதாக்களின் பட்டியல் மத்திய அரசு
    குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளே அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகள்: நாடாளுமன்றம் நவம்பர் 27ஆம் தேதி வரை ஒத்திவைப்பு இந்தியா
    சோசலிசம் மற்றும் மதச்சார்பின்மையை அரசியலமைப்பில் இருந்து நீக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025