NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / பங்குச் சந்தை முதலீடு மூலம் ரூ.10 கோடிக்கு அதிபதியான எளிய மனிதர் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பங்குச் சந்தை முதலீடு மூலம் ரூ.10 கோடிக்கு அதிபதியான எளிய மனிதர் 
    பங்குச் சந்தை முதலீடு மூலம் ரூ.10 கோடிக்கு அதிபதியான எளிய மனிதர்

    பங்குச் சந்தை முதலீடு மூலம் ரூ.10 கோடிக்கு அதிபதியான எளிய மனிதர் 

    எழுதியவர் Prasanna Venkatesh
    Sep 28, 2023
    06:14 pm

    செய்தி முன்னோட்டம்

    பங்குச்சந்தை மற்றும் முதலீட்டில் ஆர்வம் இருப்பவர்கள் கண்டிப்பாக காம்பவுண்டிங்கைப் (Compounding) பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

    அதாவது, தொடர்ந்து ஒரு சிறிய தொகையை முதலீடு செய்து கொண்டே வரும் போதோ அல்லது ஒரு பெரிய தொகையை நீண்ட காலத்திற்கு முதலீடு செய்திருக்கும் போதோ அது பல்கிப் பெருகுவதையே காம்பவுண்டிங் என்கிறார்கள்.

    முதல் சில பத்தாண்டுகளுக்கு சிறிய முதலீடு மற்றும் லாபமாகத் தெரியும் பணம், அதற்குப் பிறகு மிக வேகமாக பெருகி நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு நமக்கு லாபத்தைத் தரும்.

    ஒழுக்கம் மற்றும் பொறுமை ஆகியவற்றையே காம்பவுண்டிங்கின் தாரக மந்திரமாகக் கூறுவார்கள். உலக பணக்காரர்களுள் ஒருவரான வாரன் பஃப்பட்டும், மறைந்த இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளாரான ராகேஷ் ஜுன்ஜூன்வாலாவும் இதற்கான மிகச்சிறந்த உதாரணங்கள்.

    பங்குச்சந்தை

    ரூ.10 கோடி சொத்துமதிப்பைக் கொண்ட எளிய மனிதர்: 

    இந்நிலையில் நம்மிடையே வாழும் எளிய மனிதர் ஒருவர் பங்குச்சந்தை மூலம் ரூ.10 கோடிக்கு அதிபதியாகியிருப்பதாகக் கூறும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.

    அந்தக் காணொளியில், தான் 27,855 L&T பங்குகள், 2475 அல்ட்ராடெக் சிமெண்ட் பங்குகள் மற்றும் 4000 கர்நாடகா வங்கிப் பங்குகளைக் கொண்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் அவர்.

    இன்றைய நிலவரப்படி இந்த பங்குகளின் மொத்த மதிப்பு ரூ.10 கோடிக்கும் மேல் இருக்கிறது. மேலும், இந்தப் பங்குகளின் மூலம் ஆண்டுக்கு ரூ.6 லட்சம் டிவிடெண்ட்டாக பெறுவதாகவும் தெரிவித்திருக்கிறார் அவர்.

    சந்தையின் ஏற்ற இறக்கத்தைப் பொருட்படுத்தாமல், நல்ல பங்குகளில் முதலீடு செய்து பொறுமையாக இருப்பது எப்படி என்ற பாடத்தை இவரின் மூலம் கற்றுக் கொள்ளலாம்.

    embed

    சமூக வலைத்தளங்களில் வைரலான காணொளி:

    As they say, in Investing you have to be lucky once He is holding shares worth ₹80 crores L&T ₹21 crores worth of Ultrtech cement shares ₹1 crore worth of Karnataka bank shares. Still leading a simple life#Investing @connectgurmeet pic.twitter.com/AxP6OsM4Hq— Rajiv Mehta (@rajivmehta19) September 26, 2023

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பங்குச் சந்தை
    முதலீடு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    பங்குச் சந்தை

    அதானி குழுமத்தில் செய்த முதலீட்டில் இழப்பு ஏதும் இல்லை: LIC இந்தியா
    அதானி குழும பிரச்சனை: பங்குகள் சரிவடைந்தற்கு பதிலளித்த நிதியமைச்சர் இந்தியா
    அதானி பங்குகள் மீண்டும் சரிவு! காரணம் என்ன? தொழில்நுட்பம்
    அதானி பங்குகளில் முதலீட்டை அதிகரித்திருக்கும் எல்ஐசி!  முதலீடு

    முதலீடு

    OpenAI Mafia - 1 பில்லியன் எட்டியுள்ளது! பின்னணியில் யார்? தொழில்நுட்பம்
    நிகர மதிப்பின் மூலம் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? முதலீட்டு திட்டங்கள்
    புத்தக வாசிப்பு தந்த நம்பிக்கையில் பங்குச்சந்தை ஆலோசகரான நபரின் உண்மை கதை பங்கு சந்தை
    FTX தளத்தில் முறைகேடு: சர்ச்சையில் சிக்கிய நிஷாத் சிங் யார் இவர்? தொழில்நுட்பம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025