NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / விரைவில் 10 வயதுக்கு மேற்பட்ட மைனர்களும் பேங்க் அக்கவுண்ட்டை அணுகலாம்: இதோ விவரங்கள்
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    விரைவில் 10 வயதுக்கு மேற்பட்ட மைனர்களும் பேங்க் அக்கவுண்ட்டை அணுகலாம்: இதோ விவரங்கள்
    விரைவில் மைனர்களும் பேங்க் அக்கவுண்ட்டை அணுகலாம்: RBI

    விரைவில் 10 வயதுக்கு மேற்பட்ட மைனர்களும் பேங்க் அக்கவுண்ட்டை அணுகலாம்: இதோ விவரங்கள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 22, 2025
    01:02 pm

    செய்தி முன்னோட்டம்

    சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) புதிய விதிகளை அறிவித்துள்ளது. அதன்படி, 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் தங்கள் சொந்த சேமிப்பு அல்லது கால வைப்பு வங்கிக் கணக்குகளை சுயாதீனமாகத் திறந்து இயக்க அனுமதிக்கிறது.

    இந்த விதி அனைத்து வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்தும்.

    இதில் முதன்மை (நகர்ப்புற) கூட்டுறவு வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கிகள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் அடங்கும்.

    புதுப்பிக்கப்பட்ட விதிகளை விளக்கும் ஒரு சுற்றறிக்கையை மத்திய வங்கி திங்களன்று வெளியிட்டது.

    அதில் ஒரு பகுதியாக சிறார்களுக்கான வைப்பு கணக்குகளைத் திறப்பதற்கும் இயக்குவதற்கும் உள்ள விதிகளை ரிசர்வ் வங்கி இப்போது எளிமைப்படுத்தி ஒன்றிணைத்துள்ளது.

    வங்கி கணக்கு

    "சிறுவர்கள் தாங்களாகவே புதிய வங்கி கணக்கை திறக்கலாம், அணுகலாம்"

    RBI புதிய விதிப்படி, சிறார்களும் தாங்களாகவே கணக்குகளைத் திறக்கலாம் "எந்தவொரு வயதினரும் தங்கள் இயற்கையான அல்லது சட்டப்பூர்வ கார்டியன் மூலம் சேமிப்பு மற்றும் கால வைப்பு கணக்குகளைத் திறந்து இயக்க அனுமதிக்கப்படலாம்" என்று ரிசர்வ் வங்கி தனது வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

    புதிய விதியின்படி, எந்தவொரு மைனரும், வயதைப் பொருட்படுத்தாமல், தங்கள் இயற்கையான அல்லது சட்டப்பூர்வ கார்டியன் மூலம் சேமிப்பு அல்லது கால வைப்பு கணக்கைத் திறக்கலாம்.

    இருப்பினும், குறைந்தது 10 வயது நிரம்பிய மைனர்கள் இப்போது இந்தக் கணக்குகளைத் தாங்களாகவே திறந்து நிர்வகிக்கலாம்.

    உச்ச வரம்பு

    வங்கி கணக்கின் உயர் வரம்பை வங்கிகள் தீர்மானிக்கும்

    வங்கிகள் தங்கள் சொந்த இடர் மேலாண்மைக் கொள்கைகளின் அடிப்படையில் இந்தக் கணக்குகளுக்கான விதிகளை அமைக்க நெகிழ்வுத்தன்மை வழங்கப்பட்டுள்ளன.

    இதில் அத்தகைய கணக்குகளில் வைத்திருக்கக்கூடிய பணத்தின் அளவுக்கான வரம்புகளை நிர்ணயிப்பதும், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை முடிவு செய்வதும் அடங்கும்.

    இந்த விதிமுறைகள் அக்கவுண்ட்டை ஓபன் செய்யும் சிறார்களிடம் தெளிவாகப் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்.

    கணக்கு மாற்றம்

    மைனாராக இருக்கும் போது திறக்கப்பட அக்கவுண்ட், மேஜராக மாறியதும் மாறுமா?

    ஒரு மைனர், 18 வயதை அடைந்து பெரியவராக மாறியதும், வங்கி புதிய கணக்கு இயக்க வழிமுறைகளையும் புதிய மாதிரி கையொப்பத்தையும் அந்தந்த வங்கிகள் பெற வேண்டும்.

    கணக்கு முன்பு ஒரு கார்டியானால் இயக்கப்பட்டிருந்தால், வங்கி கணக்கு இருப்பையும் உறுதிப்படுத்த வேண்டும்.

    கணக்கு வைத்திருப்பவருக்கு 18 வயதை எட்டிய பிறகு கணக்கு விவரங்களைப் புதுப்பிப்பதில் தாமதம் ஏற்படாமல் இருக்க, முன்கூட்டியே நடவடிக்கை எடுத்து கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்குமாறு வங்கிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

    சேவைகள்

    ATM கார்டு, ஆன்லைன் பாங்கிங் உள்ளிட்ட சேவைகளும் வழங்கப்படும்

    வங்கிகள், இந்த சிறார் கணக்கு வைத்திருப்பவர்களுக்கும், வங்கி சேவைகளை வழங்கவும் அதிகாரம் தரப்பட்டுள்ளது.

    இவற்றில் ஆன்லைன் பாங்கிங், ஏடிஎம் அல்லது டெபிட் கார்டுகள் மற்றும் காசோலை புத்தகங்கள் ஆகியவை அடங்கும்.

    இருப்பினும், வங்கி அதன் இடர் மேலாண்மை விதிகளை மதிப்பாய்வு செய்து, தயாரிப்புகள் இளம் பயனர்களுக்கு ஏற்றவை என்பதை உறுதிப்படுத்திய பின்னரே இந்த சேவைகளை வழங்க முடியும்.

    சுதந்திரமாகவோ அல்லது பாதுகாவலரால் (Guardian) இயக்கப்படும் சிறார்களின் கணக்குகள் ஓவர் டிராஃப்ட்டுக்கு மாற்றப்படக்கூடாது என்று ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.

    இதன் பொருள் கணக்கு இருப்பு எப்போதும் நேர்மறையாக இருக்க வேண்டும்.

    அத்தகைய கணக்குகளில் கடன் அல்லது எதிர்மறை இருப்பு இல்லை என்பதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும்.

    காலக்கெடு

    இன்னும் 2 மாதங்களில் இந்த சேவைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

    அனைத்து வங்கிகளும் ஜூலை 1, 2025 க்குள் புதிய ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப தங்கள் உள் கொள்கைகளை புதுப்பிக்க வேண்டும் அல்லது உருவாக்க வேண்டும்.

    சிறார்களுக்கான கணக்குகளைத் திறக்கும்போது வங்கிகள் KYC விதிகளைப் பின்பற்ற வேண்டும்.

    கணக்கைத் திறக்கும்போது முறையான சரிபார்ப்புகளைச் செய்வதும், காலப்போக்கில் கணக்கைத் தொடர்ந்து சரிபார்ப்பதும் இதில் அடங்கும்.

    இந்த விதிகள் பிப்ரவரி 2016 இல் RBI வெளியிட்ட KYC குறித்த முதன்மை உத்தரவின் ஒரு பகுதியாகும், இது அவ்வப்போது புதுப்பிக்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரிசர்வ் வங்கி
    ஆர்பிஐ
    வங்கிக் கணக்கு
    வங்கி வட்டி விகிதம்

    சமீபத்திய

    மாலத்தீவுக்கு மீண்டும் 50 மில்லியன் டாலர் ரோல்ஓவர் நிதி உதவியை வழங்கியது இந்தியா மாலத்தீவு
    பாகிஸ்தானுடனான மோதலின் போது இந்தியாவின் உயர் அதிகாரிகளுக்கு உதவிய ப்ளூ புக்; என்னது அது? இந்தியா
    வர்த்தகப் போரில் திடீர் U-turn: அமெரிக்காவும் சீனாவும் வரிகளைக் குறைக்க ஒப்புக்கொண்டன அமெரிக்கா
    கத்தாரில் இருந்து 400 மில்லியன் டாலர் மதிப்புள்ள 'பறக்கும் அரண்மனை' ஜெட் விமானத்தை வாங்கும் டிரம்ப் டொனால்ட் டிரம்ப்

    ரிசர்வ் வங்கி

    வெளிநாடு வாழ் இந்தியர்களின் டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் அதிகரிப்பு; ஆர்பிஐ அறிவிப்பு ஆர்பிஐ
    தொடர் சரிவிற்கு பிறகு இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு மீண்டும் அதிகரிப்பு; ஆர்பிஐ தகவல் இந்தியா
    ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக வருவாய்த்துறை செயலாளர் சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம்; யார் அவர்? ஆர்பிஐ
    ரிசர்வ் வங்கிக்கு ரஷ்ய மொழியில் வெடிகுண்டு மிரட்டல் வெடிகுண்டு மிரட்டல்

    ஆர்பிஐ

    ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி ரிசர்வ் வங்கி
    இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு $656.58 பில்லியனாக குறைந்தது இந்தியா
    ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்-இன் பதவிக்கு ஆபத்தா? ரிசர்வ் வங்கி
    ரெப்போ ரேட் விகிதத்தில் மாற்றமில்லை; ஆர்பிஐ கவர்னர் சக்தி காந்த தாஸ் அறிவிப்பு ரிசர்வ் வங்கி

    வங்கிக் கணக்கு

    வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் வைக்காததற்கான அபராதம்: ரூ.21,000 கோடி வசூல்  மத்திய அரசு
    இந்தியாவில் நிரந்தர வைப்புநிதிக்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள் முதலீட்டு குறிப்புகள்
    உரிமை கோரப்படாத வைப்புநிதி குறித்த தகவல்களுக்கு புதிய வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது ரிசர்வ் வங்கி ரிசர்வ் வங்கி
    பொதுமக்கள் வங்கி கணக்குகளில் திடீர் டெபாசிட் - அதிர்ச்சியில் வங்கி ஊழியர்கள்  தெலுங்கானா

    வங்கி வட்டி விகிதம்

    அஞ்சல் நிலையங்களா? வங்கிகளா? எங்கு நிரந்தர வைப்புநிதி கணக்கு தொடங்குவது?  முதலீடு
    நிதி அடிப்படையிலான கடன் விகிதத்தின் விளிம்பு விலையை உயர்த்தியது இந்தியன் வங்கி  கடன்
    தொடர்ந்து மூன்றாவது மாதமாக கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது எஸ்பிஐ எஸ்பிஐ
    டிசம்பர் முதல் ஆர்பிஐ வட்டி விகிதத்தைக் குறைக்கும்; யுபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில் தகவல் ரிசர்வ் வங்கி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025