NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / பங்கு சந்தை: 20,000 புள்ளிகளை முதல்முறையாக கடந்து வரலாறு படைத்தது NIFTY
    பங்கு சந்தை: 20,000 புள்ளிகளை முதல்முறையாக கடந்து வரலாறு படைத்தது NIFTY
    வணிகம்

    பங்கு சந்தை: 20,000 புள்ளிகளை முதல்முறையாக கடந்து வரலாறு படைத்தது NIFTY

    எழுதியவர் Sindhuja SM
    September 11, 2023 | 03:54 pm 1 நிமிட வாசிப்பு
    பங்கு சந்தை: 20,000 புள்ளிகளை முதல்முறையாக கடந்து வரலாறு படைத்தது NIFTY
    இன்று சுமார் 3:15 மணியளவில், 179 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த NIFTY 20,000த்தை தாண்டியது.

    தேசிய பங்குச் சந்தையின்(NSE) முதன்மைக் குறியீடான NIFTY, முதல்முறையாக 20,000 புள்ளிகளை எட்டி வரலாறு படைத்துள்ளது. இந்தியாவில் பாம்பே பங்குச் சந்தை(BSE) மற்றும் தேசிய பங்குச் சந்தை(NSE) என்ற இரண்டு பங்கு சந்தைகள் இருக்கின்றன. இதில், பாம்பே பங்குச் சந்தையின் குறியீடு SENSEX என்றும், தேசிய பங்குச் சந்தையின் முதன்மைக் குறியீடு NIFTY என்றும் அழைக்கப்படுகிறது. அதாவது, தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் முதன்மையான 50 நிறுவனங்களின் கூட்டு பங்குகள் தான் NIFTY ஆகும். NIFTY எந்த அளவு உயர்கிறதோ அந்த அளவு தேசிய பங்குச் சந்தையின் மதிப்பு அதிகரித்துள்ளது என்று அர்த்தம் கொள்ளலாம். இந்நிலையில், இன்று சுமார் 3:15 மணியளவில், 179 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த NIFTY 20,000த்தை தாண்டியது.

    கடந்த வாரத்தில் இருந்தே, பங்கு சந்தையில் குறிப்பிடத்தக்க ஏற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது 

    தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் முதன்மையான 50 நிறுவனங்களின் பங்குகள் வலுவாக உயர்ந்ததை அடுத்து, NIFTYயின் புள்ளிகள் 20,000த்தை தாண்டின. கடந்த ஜூலை மாதம், NIFTY இந்த சாதனையை ஒரு சிறு மயிரிழையில் தவறவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூலையில், NIFTY 50 வலுவான மேல்நோக்கு பாதையில் இருந்ததால், 20,000 புள்ளிகளை NIFTY அப்போதே எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும், மார்ச் 2023இல் இருந்து 15 சதவீத வளர்ச்சியை NIFTY பதிவு செய்துள்ளது. ஆனால், பலவீனமான உலக பொருளாதாரம் மற்றும் பங்கு சந்தையின் ஏற்ற இறக்கங்களால், 20,000 புள்ளிகளை NIFTY எட்டுவது தாமதமாகியது. கடந்த வாரத்தில் இருந்தே, பங்கு சந்தையில் குறிப்பிடத்தக்க திருப்பம் ஏற்பட்டுள்ளது. SENSEX மற்றும் NIFTY இரண்டும் கடுமையாக உயர்ந்துள்ளன.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    பங்குச் சந்தை
    பங்குச்சந்தை செய்திகள்
    இந்தியா

    பங்குச் சந்தை

    3.8 ட்ரில்லியன் டாலர்கள் சந்தை மதிப்பை எட்டிய இந்திய பங்குச்சந்தை இந்தியா
    அதானி வில்மரின் 44% பங்குகளை விற்பனை செய்கிறதா அதானி குழுமம்? வணிகம்
    ரூ.1 லட்சம் கோடி சந்தை மதிப்பை எட்டியது பேங்க் ஆஃப் பரோடா வங்கி வணிகம்
    பங்குச்சந்தை வராலற்றில் புதிய சாதனையைப் படைத்த MRF நிறுவனப் பங்கு! பங்குச்சந்தை செய்திகள்

    பங்குச்சந்தை செய்திகள்

    அதானி குழுமப் பங்குகளின் வீழ்ச்சியில் Short Selling மூலம் லாபமடைந்த 12 நிறுவனங்கள் வணிகம்
    பஜாஜ் ஆட்டோ... காலாண்டு முடிவுகள் எப்படி இருக்கும்?  பஜாஜ்
    130 மில்லியன் டாலர்கள் மதிப்புடைய கடன் பத்திரங்களை திரும்பப் பெறுகிறது அதானி துறைமுகம்!  இந்தியா
    நான்காம் காலாண்டில் குறைந்த லாபம்.. சரிவைச் சந்தித்த ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவன பங்குகள்!  பங்குச் சந்தை

    இந்தியா

    தீபாவளி 2023: பட்டாசுகளை விற்கவும் வாங்கவும் தடை விதித்தது டெல்லி அரசு  டெல்லி
    பெங்களூரில் இன்று முழுவதும் பந்த்: காரணம் என்ன? பெங்களூர்
    விமானத்தில் கோளாறு: இந்தியாவில் சிக்கி கொண்டார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனடா
    சவூதி இளவரசரை இன்று சந்திக்கிறார் பிரதமர் மோடி: இருதரப்பு பேச்சுவார்த்தையில் என்ன விவாதிக்கப்படும்? சவூதி அரேபியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    வணிகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Business Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023