NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / பட்ஜெட் 2024இல் என்னென்ன மாற்றங்கள் அறிமுகமாக வாய்ப்புள்ளது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பட்ஜெட் 2024இல் என்னென்ன மாற்றங்கள் அறிமுகமாக வாய்ப்புள்ளது 

    பட்ஜெட் 2024இல் என்னென்ன மாற்றங்கள் அறிமுகமாக வாய்ப்புள்ளது 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 18, 2024
    02:32 pm

    செய்தி முன்னோட்டம்

    பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது பதவிக்காலம் தொடங்கி உள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் புகழைப் பாதிக்கும் பணவீக்கம் போன்ற முக்கியமான பிரச்சினைகளுக்கு பட்ஜெட் 2024இல் தீர்வு காணப்படும் என்று நம்பப்படுகிறது.

    அதே வேளையில், தனியார் முதலீட்டை ஊக்குவிப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை வளர்ப்பதிலும் பாஜக அரசு கவனம் செலுத்தும்.:

    இதற்கிடையில், கச்சா எண்ணெய்யின் உலகளாவிய விலை பீப்பாய் ஒன்றுக்கு $70 க்கும் கீழே சரிந்த பின்னரே விலை குறைப்பு சாத்தியமாகும் என்று எண்ணெய் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார். எனவே, பெட்ரோல்-டீசல் விலை குறைய வாய்ப்பில்லை என்று தெரிகிறது.

    முதல் முறையாக வீடு வாங்குபவர்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியதில் இருந்து வீட்டு விலைகள் அதிகரித்துள்ளன.

    இந்தியா 

    வீடுகளின் விலை வரம்பை அரசாங்கம் உயர்த்தக்கூடும் 

    எனவே அடுத்த கட்டமாக, வீடுகளின் விலை வரம்பை அரசாங்கம் உயர்த்தும் என்று கூறப்படுகிறது.

    அப்படி ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டால் அது நடுத்தர வர்க்கத்தினருக்கு உதவும். மேலும், கட்டுமானம் தொடர்பான வேலைகளையும் இது உருவாக்கும். டெவலப்பர்கள் முதல் சிமெண்ட் தயாரிப்பாளர்கள், பெயிண்ட் நிறுவனங்கள் வரை அனைவருக்கும் இது லாபத்தை உண்டாக்கும்.

    நடப்பு நிதியாண்டில், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு ஏற்கனவே ₹80,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பான ரூ.4 லட்சம் கோடியில் தோராயமாக 20% ஏற்கனவே பிப்ரவரி இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.

    அரசியல் கூட்டணி அழுத்தங்கள் நிதி ஸ்திரத்தன்மைக்கு இடையூறாக இருக்காது என்பதை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காட்ட விரும்புவார்.

    எனவே, நிதிப்பற்றாக்குறையை நிர்ணயிக்கப்பட்ட 4.5% குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    இந்தியா 

    மின்சார பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அதிக முதலீடு 

    அரசாங்கத்தால் நடத்தப்படும் நிறுவனங்களின் மூலம் எதிர்பார்த்த அளவுக்கு வேலை வாய்ப்பை வழங்க முடியவில்லை என்பதால், தனியார் முதலீடுகளுக்கு அதிக முக்கியத்துவம் அழிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    குஜராத்தின் கிஃப்ட் சிட்டியில் இருக்கும் நிறுவனங்களை, பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ போன்ற இந்திய பங்குச்சந்தைகளில் பட்டியலிட அனுமதிக்கும் மற்றொரு கொள்கையை அரசாங்கம் பின்னர் செயல்படுத்தலாம் என்று வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    இந்திய சாலைகளில் மின்சார பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் ரூ.70,000 கோடி ஒதுக்கலாம் என்று கூறப்படுகிறது. நாடு முழுவதும் மின்சார பேருந்துகளுக்கான சார்ஜிங் மையங்களை அமைப்பதில் பெரும்பாலான பணம் முதலீடு செய்யப்படும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    மத்திய அரசு
    பிரதமர் மோடி
    நிர்மலா சீதாராமன்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    இந்தியா

    அமைச்சர் பதவி வேண்டாம் என நடிகர் சுரேஷ் கோபி திடீர் அறிவிப்பு கேரளா
    மணிப்பூர் முதலமைச்சரின் கான்வாய் மீது தாக்குதல்: பாதுகாப்பு அதிகாரி ஒருவர் காயம் மணிப்பூர்
    அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை: நடிகர் சுரேஷ் கோபி விளக்கம்  பாஜக
    பாலியல் குற்றம்சாட்டப்பட்ட பாஜக தலைவர் அமித் மாளவியாவை பதவி நீக்க வேண்டும் என்று கோரியது காங்கிரஸ்  மேற்கு வங்காளம்

    மத்திய அரசு

    நாளை நடைபெற இருக்கிறது விவசாயிகளுடனான மத்திய அரசின் 4-வது சுற்று பேச்சுவார்த்தை டெல்லி
    பயிர்களுக்கு குறைந்தபட்ச பாதுகாப்பு விலை கோரிய விவசாயிகளுக்கான மத்திய அரசின் 5 ஆண்டு முன்மொழிவு பஞ்சாப்
    வெங்காய ஏற்றுமதி தடையை மார்ச் 31 வரை நீட்டித்தது மத்திய அரசு இந்தியா
    திருமணம் செய்து கொண்டதால் பணிநீக்கம் செய்யப்பட்ட இராணுவ செவிலியருக்கு ரூ.60 லட்சம் இழப்பீடு  இந்திய ராணுவம்

    பிரதமர் மோடி

    தேர்தல் முடிவுகளுக்கு முன்னதாக தமிழகம் வரும் பிரதமர்; விவேகானந்தர் பாறையில் 3 நாட்கள் தியானம் பிரதமர்
    'கௌரவத்தை குறைக்கும் முதல் பிரதமர்...': மோடியை கடுமையாக சாடிய மன்மோகன் சிங் மன்மோகன் சிங்
    விவேகானந்தர் நினைவிடத்தில்  45 மணி நேர தியானத்தை தொடங்கினார் பிரதமர் மோடி கன்னியாகுமரி
    இறுதிக்கட்ட பொது தேர்தல்: பிரதமர் மோடியின் தொகுதி உட்பட 57 இடங்களில் இன்று வாக்குப்பதிவு  இந்தியா

    நிர்மலா சீதாராமன்

    ஜி20 நிகழ்வில் நிதியமைச்சரை சந்தித்த கீதா கோபிநாத் நிர்மலா சீதாராமன்
    அதானி கடன் விவரங்களை வெளியிட முடியாது! நிர்மலா சீதாராமன் பதில் நிர்மலா சீதாராமன்
    மகிளா சம்மான் சேமிப்பு திட்டம் - 7.5% வட்டியில் எப்போது கிடைக்கும்? சேமிப்பு திட்டங்கள்
    எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும்: நிர்மலா சீதாராமன் வேண்டுகோள்  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025