NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / சுயசார்பு கொள்கையால், மைக்ரோசாப்ட் செயலிழப்பினால் பெரிதும் பாதிப்படாத சீனா
    அடுத்த செய்திக் கட்டுரை
    சுயசார்பு கொள்கையால், மைக்ரோசாப்ட் செயலிழப்பினால் பெரிதும் பாதிப்படாத சீனா
    சீனாவில் விமான சேவைகள் பாதிக்கப்படவில்லை

    சுயசார்பு கொள்கையால், மைக்ரோசாப்ட் செயலிழப்பினால் பெரிதும் பாதிப்படாத சீனா

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 20, 2024
    04:13 pm

    செய்தி முன்னோட்டம்

    நேற்று, ஜூலை 19 அன்று, உலக நாடுகளை போலவே சீனாவில் உள்ள வெளிநாட்டு வணிகங்கள் மற்றும் சொகுசு ஹோட்டல்களை பாதித்த மைக்ரோசாப்ட் விண்டோஸ் செயலிழப்பு, அந்த நாட்டின் முக்கிய உள்கட்டமைப்பை, விமான நிறுவனங்கள் முதல் வங்கிகள் வரை பாதிக்கவில்லை.

    இதனை தொழில்துறை ஆதாரங்கள் மற்றும் சமூக ஊடக பதிவுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

    உள்ளூர் நேரப்படி மாலை 6 மணி நிலவரப்படி, உலகமே ஸ்தம்பித நேரத்தில், சீனாவின் பிரதான நிலப்பரப்பில் உள்கட்டமைப்பு சீர்குலைவுகள் குறித்து எந்த அறிக்கையும் இல்லை.

    விமான சேவைகள்

    உலகெங்கும் பாதிக்கப்பட்ட விமான சேவைகள் 

    மைக்ரோசாப்ட் செயலிழப்பால் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் ஹாங்காங் முதல் ஆஸ்திரேலியா வரையிலான பல விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

    ஒரு சில விமானங்கள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

    ஆனால், பெய்ஜிங் மற்றும் ஷாங்காயில் உள்ள சர்வதேச விமான நிலையங்கள் வழக்கம் போல் இயங்கியதாக அவர்களின் இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கொள்கை

    சுயசார்பு கொள்கை 

    நாடு முழுவதும் உள்ள பல வெளிநாட்டு வணிக அலுவலகங்கள் செயலிழப்பால் பாதிக்கப்பட்டன. எனினும், சீனாவின் பொதுச் சேவைகள் பெருமளவில் பாதிக்கப்படவில்லை.

    இதற்கு காரணமாக, மைக்ரோசாப்ட் மற்றும் வைரஸ் தடுப்பு நிறுவனமான CrowdStrike போன்ற வெளிநாட்டு சேவை வழங்குநர்கள் மீது சீனா பெரிதாக சார்ந்தில்லாமல் இருப்பது.

    சமீபத்திய ஆண்டுகளில், வெளிநாட்டு வன்பொருள் மற்றும் அமைப்புகளை உள்நாட்டில் மாற்றுவதற்கு சீனா தனது அரசாங்கத் துறைகள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்பு ஆபரேட்டர்களை கட்டாயமாக்கி உள்ளது.

    சீனாவில் மைக்ரோசாப்ட் செயலிழப்பின் குறைந்தபட்ச தாக்கம், "பாதுகாப்பான மற்றும் கட்டுப்படுத்தக்கூடிய" கணினி அமைப்புகளின் இலக்கை அடைவதில் நாடு சுயசார்புடன் இருக்கிறது என்பதை நிரூபித்துள்ளது என்று சீன அரசாங்க ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சீனா
    மைக்ரோசாஃப்ட்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    சீனா

    மாலத்தீவு அதிபர் முய்சுவுக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவா? மாலத்தீவு
    மாலத்தீவு பட்டப்பகலில் நடந்த கொடூரம்; அரசு வழக்கறிஞருக்கு கத்திக்குத்து மாலத்தீவு
    கனடா நாட்டு தேர்தலில் இந்தியா தலையிட்டதாக கனேடிய உளவுத்துறை குற்றச்சாட்டு  கனடா
    சீன செயலியான TikTok -ஐ தடை செய்ய வேண்டும்: நிக்கி ஹேலி மொபைல் ஆப்ஸ்

    மைக்ரோசாஃப்ட்

    மைக்ரோசாஃப்டின் அறிவிப்பு.. வழக்கு தொடர்வதாக எச்சரித்த எலான் மஸ்க்.. என்ன பிரச்சினை?  ட்விட்டர்
    மைக்ரோஃசாப்ட் - ஆக்டிவிஷன் பிலிசார்டு ஒப்பந்தத்தை தடை செய்தது பிரிட்டன்!  வீடியோ கேம்
    AI போட்டியில் முன்னேறும் மைக்ரோசாஃப்ட்.. என்ன செய்கிறது கூகுள்?  செயற்கை நுண்ணறிவு
    AI வசதியுடன் கூடிய 'பிங்' தேடுபொறி.. அனைத்து பயனர்களுக்கும் வெளியிட்டது மைக்ரோசாஃப்ட்! செயற்கை நுண்ணறிவு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025