NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / ஜூன் முதல் 30 நிமிட டெலிவரி சேவையை அறிமுகம் செய்கிறது  ஜியோமார்ட் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜூன் முதல் 30 நிமிட டெலிவரி சேவையை அறிமுகம் செய்கிறது  ஜியோமார்ட் 

    ஜூன் முதல் 30 நிமிட டெலிவரி சேவையை அறிமுகம் செய்கிறது  ஜியோமார்ட் 

    எழுதியவர் Sindhuja SM
    May 29, 2024
    04:45 pm

    செய்தி முன்னோட்டம்

    ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அதன் துணை நிறுவனமான ஜியோமார்ட் மூலம் 30 நிமிடங்களுக்கு குறைவான டெலிவரி சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

    இந்த புதிய சேவை ஜூன் மாதத்தில் தொடங்கப்பட உள்ளது என்றும், ஆரம்பத்தில் ஏழு முதல் எட்டு நகரங்களில் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

    இந்த விரைவான விநியோக சேவையை இந்தியா முழுவதும் 1,000 நகரங்களுக்கு விரிவுபடுத்துவதை ரிலையன்ஸ் நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

    விரைவான வணிகச் செயல்பாடுகளைச் செயல்படுத்த, ரிலையன்ஸ் ரீடெய்லுக்குச் சொந்தமான கடைகள் மற்றும் மையங்களின் விரிவான நெட்வொர்க்கைப் பயன்படுத்த ஜியோமார்ட் திட்டமிட்டுள்ளது.

    ரிலையன்ஸ் 

    ஜியோமார்ட் எக்ஸ்பிரஸ் சேவை ஒரு வருடத்திற்கு முன் நிறுத்தப்பட்டது 

    இந்த புதிய திட்டம் விரைவு வர்த்தகத்தில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் டார்க் ஸ்டோர் மாடலில் இருந்து வேறுபட்டதாகும்.

    டார்க் ஸ்டோர் மாடல் என்பது ஆன்லைன் விற்பனைக்காக பொருட்கள் பெரிய கிடங்குகளில் சேமிக்கப்படும் மாடலாகும்.

    இதில் இருந்து ரிலையன்ஸ் மாறுபடுவதால், இந்த நடவடிக்கை ஜியோமார்ட்டுக்கு சந்தையில் போட்டித்தன்மையை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஜியோமார்ட் எக்ஸ்பிரஸ் என்ற 90 நிமிட மளிகை விநியோக சேவையை ரிலையன்ஸ் நிறுத்தி ஒரு வருடம் ஆகும் நிலக்கியில், அந்த நிறுவனம் விரைவான வர்த்தகத்தில் இறங்கியுள்ளது.

    தற்போது, ​​ஜியோமார்ட் அதன் வாடிக்கையாளர்களுக்கு அடுத்த நாள் டெலிவரி விருப்பங்களை வழங்கி வருகிறது. இது 30 நிமிட டெலிவரி வசதியாக மாற்றப்பட உள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரிலையன்ஸ்

    சமீபத்திய

    கடந்த 10 நாட்களில் இந்தியாவில் 164 கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன கோவிட் 19
    2025 ஆம் ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த Solar flares பூமியைத் தாக்கும் என நாசா எச்சரிக்கை சூரியன்
    பெங்களூருவில் 12 மணிநேரத்தில் 130 மி.மீ கனமழை: 3 பேர் உயிரிழப்பு - ஆரஞ்சு எச்சரிக்கை வெளியீடு பெங்களூர்
    காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால், தடைகள் விதிக்கப்படும் என்று மிரட்டும் இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா காசா

    ரிலையன்ஸ்

    CampaCola-வை மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்திய ரிலையன்ஸ்! குளிர்கால பராமரிப்பு
    1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது ஜியோமார்ட் நிறுவனம்! வணிகம்
    அனில் அம்பானியைத் தொடர்ந்து டீனா அம்பானியும் அமலாக்கத்துறையின் முன் ஆஜர் இந்தியா
    'Dark Pattern' பயன்படுத்தினால் நடவடிக்கை: அமேசான், பிக் பாஸ்கட் போன்ற நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு வணிகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025