NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / விவசாயிகளே அலெர்ட்; பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி பெற இதை கண்டிப்பாக செய்ய வேண்டும்
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    விவசாயிகளே அலெர்ட்; பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி பெற இதை கண்டிப்பாக செய்ய வேண்டும்
    கிசான் சம்மன் நிதி

    விவசாயிகளே அலெர்ட்; பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி பெற இதை கண்டிப்பாக செய்ய வேண்டும்

    எழுதியவர் Sekar Chinnappan
    Jan 16, 2025
    04:18 pm

    செய்தி முன்னோட்டம்

    பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா இந்தியா முழுவதும் தகுதியான விவசாயிகளுக்கு முக்கியமான நிதி உதவியை தொடர்ந்து வழங்கி வருகிறது.

    இந்த திட்டத்தில் மூன்று தவணையாக ₹2,000 என ஆண்டிற்கு மொத்தமாக ₹6,000 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    இதில் 19 வது தவணை நெருங்கி வரும் நிலையில், விவசாயிகள் பலன்களைப் பெற திட்டத்தின் தகுதித் தேவைகளுக்கு இணங்குவதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இந்த முறை கூடுதலாக விவசாயிகள் தங்கள் நில உரிமை தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

    தகுதி

    தகுதி அளவுகோல்கள் மற்றும் தேவையான செயல்கள்

    முதலில் விவசாயிகள் கட்டாய இ-கேஒய்சி செயல்முறையை முடிக்க வேண்டும். இதை ஆன்லைனில் http://pmkisan.gov.in அல்லது அருகிலுள்ள பொது சேவை மையத்தில் செய்யலாம்.

    இந்த படிநிலையை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டால், பணம் பெறுவது தள்ளிப்போகலாம். அடுத்து பூ-சத்யபன் எனப்படும் நில உரிமை சார்பார்ப்பை மேற்கொள்ள வேண்டும்.

    பணம் பெறுவதற்கான தகுதியை உறுதிப்படுத்த நில விவரங்கள் சரிபார்க்கப்பட்டு புதுப்பிக்கப்பட வேண்டும்.

    இந்த நடவடிக்கையை இன்னும் முடிக்காத விவசாயிகள் உடனடியாக மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    இறுதியாக உங்கள் ஆதார் அட்டையை உங்கள் வங்கிக் கணக்குடன் இணைப்பது மிகவும் முக்கியமானது.

    இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யாதவர்கள் உடனடியாக வங்கி கிளைக்குச் சென்று இணைக்கவும்.

    நிதி

    நிதியை சிக்கலின்றி பெறலாம்

    மேலே குறிப்பிட்டுள்ள மூன்று செயல்முறைகளையும் பூர்த்தி செய்வதன் மூலம், விவசாயிகள் தங்குதடையின்றி கிசான் சம்மன் நிதியைப் பெறலாம்.

    கிசான் சம்மன் நிதியில் விவசாயிகள் அல்லாதோர் மோசடியாக நிதியைப் பெற்று வருவதாக குற்றச்சாட்டுகள் இருந்து வரும் நிலையில், அதை நிவர்த்தி செய்ய, இந்த முறையிலிருந்து நிதியைப் பெற நில உரிமை ஆவணத்தை சரிபார்ப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    நிலத்தின் உரிமை தந்தை அல்லது குடும்பத்தில் வேறு உறுப்பினர் பெயரில் இருந்தாலும் நிதி கிடைப்பதில் சிக்கலை எதிர்கொள்ளலாம் என்பதால், நிலத்தின் உரிமையை விவசாயிகள் தங்கள் பெயருக்கு மாற்றி ஆவணத்தை சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விவசாயிகள்
    இந்தியா
    பிரதமர்

    சமீபத்திய

    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்

    விவசாயிகள்

    100 நாள் வேலை திட்ட கூலி தொழிலாளர்களுக்கு 3 மாத ஊதிய நிலுவை - காரணம் என்ன? தமிழ்நாடு
    மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 7,563 கன அடியாக உயர்வு மழை
    விவசாயிகள் மீதான குண்டர் சட்டம் குறித்து காவல்துறை விளக்கம்  குண்டர் சட்டம்
    மும்பை-பெங்களூர் நெடுஞ்சாலையில் கரும்பு விவசாயிகள் சாலை மறியல்  போராட்டம்

    இந்தியா

    ஜிஎஸ்டி நோட்டீஸிற்கு உச்ச நீதிமன்றம் தடை; ஆன்லைன் கேமிங் நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்வு ஆன்லைன் கேமிங்
    'Undivided India' நிகழ்ச்சிக்கு பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு இந்தியா அழைப்பு  வானிலை ஆய்வு மையம்
    ₹37 லட்சம் விலையில் மெரிடியன் எஸ்யூவி மாடலை மீண்டும் இந்தியாவில் அறிமுகம் செய்தது ஜீப் எஸ்யூவி
    இந்தியா முழுவதும் அறுவடை திருநாள் எப்படி வித்தியாசமாக கொண்டாடப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள் பொங்கல்

    பிரதமர்

    "நன்றி சென்னை.. இன்றைய நாள் சிறப்பான நாள்": சென்னை ரோடு ஷோ குறித்து பிரதமர் மோடி நெகிழ்ச்சி பதிவு பிரதமர் மோடி
    சல்மான் கான் வீட்டில் துப்பாக்கி சூடு எதிரொலி: பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்த சினிமா தொழிலாளர்கள் அமைப்பு சல்மான் கான்
    ஏப்ரல் 22: இந்தியாவில் டெஸ்லாவின் தொழில் திட்டங்களை பற்றி அறிவிக்கிறார் எலான் மஸ்க் டெஸ்லா
    சர்ச்சைகளை ஈர்த்த பிரதமர் மோடியின் 'ஊடுருவல்காரர்களுக்குச் செல்வம்' கருத்து பிரதமர் மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025