NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / தேர்தல் பத்திரங்களை வாங்கிய முக்கிய கார்ப்பரேட் நிறுவன தலைவர்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தேர்தல் பத்திரங்களை வாங்கிய முக்கிய கார்ப்பரேட் நிறுவன தலைவர்கள்

    தேர்தல் பத்திரங்களை வாங்கிய முக்கிய கார்ப்பரேட் நிறுவன தலைவர்கள்

    எழுதியவர் Sindhuja SM
    Mar 19, 2024
    10:54 am

    செய்தி முன்னோட்டம்

    ஏப்ரல் 2019 மற்றும் ஜனவரி 2024 க்கு இடையில் மொத்தம் 333 நபர்கள் ₹358.91 கோடி மதிப்பிலான பத்திரங்களை வாங்கியதாக இந்திய தேர்தல் ஆணையத்தின்(ECI) தேர்தல் பத்திரங்களின் தரவுகள் தெரிவிக்கின்றன.

    அப்படி தேர்தல் பத்திரங்கள் வாங்கிய 15 நபர்கள், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் குறிப்பிடத்தக்க பதவிகளை வகிக்கின்றனர்,

    அந்த 15 பேரும் ரூ.158.65 கோடி மதிப்பிலான பத்திரங்களை வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியா 

    அந்த 15 நபர்களின் விவரங்கள்

    லட்சுமி நிவாஸ் மிட்டல்(ஆர்செலர் மிட்டல்): ரூ.35 கோடி

    லக்ஷ்மிதாஸ் வல்லபதாஸ்(ரிலையன்ஸ் லைஃப் சயின்சஸ்): ரூ.25 கோடி

    ராகுல் பாட்டியா(இண்டிகோ): ரூ.20 கோடி

    இந்தர் தாகுர்தாஸ் ஜெய்சிங்கனி(பாலிகேப்): ரூ.14 கோடி

    ராஜேஷ் மன்னாலால் அகர்வால்(அஜந்தா பார்மா): ரூ.13 கோடி

    ஹர்மேஷ் ராகுல் ஜோஷி(ஓம் சரக்கு குழுமம்): தலாரூ.10 கோடி

    கிரண் மஜும்தார் ஷா(பயோகான்): ரூ.6 கோடி

    இந்திராணி பட்நாயக்: ரூ.5 கோடி

    சுதாகர் கன்சர்லா(யோடா குழுமம்): ரூ.5 கோடி

    அபிராஜித் மித்ரா(Searock Infraproject): ரூ.4.25 கோடி

    சரோஜித் குமார்டே(ஜேடி அக்ரோ டெவலப்மென்ட் ): ரூ.3.4 கோடி

    திலீப் ராமன்லால் தாக்கர்(சமுத்ரா ரியல் எஸ்டேட்): ரூ.3 கோடி

    பிரகாஷ் பல்வந்த் மெங்கனே(ஸ்ரீநாத் ஸ்தபத்யா): ரூ.3 கோடி

    நிர்மல் குமார் பத்வால்(பெங்குயின் டிரேடிங்): ரூ.2 கோடி

    இந்தியா 

    தேர்தல் பத்திர திட்டம் மூலம் திமுகவுக்கு ரூ.509 கோடி நன்கொடை

    இந்த தரவுகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டன.

    அப்போது, 'லாட்டரி மன்னன்' சாண்டியாகோ மார்ட்டினின் ஃபியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனம் தேர்தல் பத்திர திட்டம் மூலம் திமுகவுக்கு ரூ.509 கோடி நன்கொடை வழங்கியது தெரியவந்தது.

    அரசியல் கட்சிகளுக்கு அதிகமாக நன்கொடை வழங்கியவர்களின் பட்டியலில் 'லாட்டரி மன்னன்' சாண்டியாகோ மார்ட்டினின் ஃபியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது.

    அந்த நிறுவனம் மொத்தம் ரூ.1,368 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது. அந்த நிறுவனம் வழங்கிய 37% நன்கொடை, அதாவது ரூ.509 கோடி, திமுகவுக்கு வழங்கப்பட்டதாகும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தேர்தல் பத்திரங்கள்

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    தேர்தல் பத்திரங்கள்

    'வாக்களிக்கும் உரிமைக்கு தகவல் அவசியம்': தேர்தல் பத்திரத் திட்டத்தை ரத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வாக்காளர்
    அரசியல் கட்சிகளால் பணமாக்கப்படாத தேர்தல் பத்திரங்கள் திரும்பப் பெறப்படும் எஸ்பிஐ
    தேர்தல் பத்திர விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம்; ரூ.1,368 கோடிக்கு பத்திரங்கள் வாங்கிய கோவை தொழிலதிபர் உச்ச நீதிமன்றம்
    தேர்தல் பத்திர எண்களை வெளியிடாத எஸ்பிஐக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் உச்ச நீதிமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025