Page Loader
கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் மீண்டும் விமான சேவையை தொடங்க டிஜிசிஏ ஒப்புதல்
கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் மீண்டும் விமான சேவையை தொடங்க டிஜிசிஏ ஒப்புதல்

கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் மீண்டும் விமான சேவையை தொடங்க டிஜிசிஏ ஒப்புதல்

எழுதியவர் Sekar Chinnappan
Jul 21, 2023
06:00 pm

செய்தி முன்னோட்டம்

சில நிபந்தனைகளுடன் கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் மீண்டும் விமான சேவையை தொடங்குவதற்கு இந்திய விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான டிஜிசிஏ வெள்ளிக்கிழமை (ஜூலை 21) ஒப்புதல் அளித்துள்ளது. முன்னதாக, வாடியா குழுமத்திற்கு சொந்தமான கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கிய பிறகு, மே 3 அன்று விமானங்களை இயக்குவதை நிறுத்தியது மற்றும் தற்போது திவால்நிலைத் தீர்வு செயல்முறைக்கு உட்பட்டுள்ளது. இந்நிலையில் விமானங்களுக்கான இடைக்கால நிதி, டெல்லி உயர்நீதிமன்றம் மற்றும் தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ள ரிட் மனுக்களின் முடிவுகளுக்கு உட்பட்டு, விமானங்களை மீண்டும் இயக்குவதற்கு டிஜிசிஏ அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து கோ ஃபர்ஸ்ட் முதற்கட்டமாக 15 விமானங்கள் மற்றும் 114 தினசரி விமானங்களை இயக்க உள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

டிஜிசிஏ ஒப்புதல்