NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / தாமாதமாகும் கடன் தகவல் பதிவேற்றம், நாளொன்றுக்கு ரூ.100 அபராதம்.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
    அடுத்த செய்திக் கட்டுரை
    தாமாதமாகும் கடன் தகவல் பதிவேற்றம், நாளொன்றுக்கு ரூ.100 அபராதம்.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
    தாமாதமாகும் கடன் தகவல் பதிவேற்றம், நாளொன்றுக்கு ரூ.100 அபராதம்

    தாமாதமாகும் கடன் தகவல் பதிவேற்றம், நாளொன்றுக்கு ரூ.100 அபராதம்.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

    எழுதியவர் Prasanna Venkatesh
    Oct 27, 2023
    11:26 am

    செய்தி முன்னோட்டம்

    வாடிக்கையாளர்களின் கடன் தகவல்கள் குறித்த புகார்களை நிவர்த்தி செய்வது மற்றும் அதனை தகவல் தளத்தில் பதிவேற்றம் செய்வது தொடர்பான புதிய அறிவிப்பு ஒன்றை கடன் தகவல்கள் நிறுவனங்கள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு வெளியிட்டிருக்கிறது ரிசர்வ் வங்கி.

    அதன்படி, சிபில், ஈக்விஃபேக்ஸ், எக்ஸ்பெரியன் மற்றும் CRIF உள்ளிட்ட கடன் தகவல் நிறுவனங்கள் அல்லது பிற கடன் வழங்கும் நிறுவனங்களானது, தனிநபர்களின் கடன் தகவல் குறித்த புகாரைப் பெறும் பட்சத்தில், 30 நாட்களுக்குள் அதற்கு தீர்வளிக்க வேண்டும்.

    தனிநபரின் கடன் தகவல் குறித்த புகாருக்கு தீர்வளிப்பது மட்டுமல்லாமல் 30 நாட்களுக்குள் அதனை தகவல் தளத்தில் பதிவேற்றியும் இருக்க வேண்டும்.

    ரிசர்வ் வங்கி

    நாளொன்றுக்கு ரூ.100 அபராதம்: 

    மேற்கூறிய வகையில் 30 நாட்களுக்குள் புகாரை நிவர்த்தி செய்யவோ அல்லது அதனை பதிவேற்றவோ தவறும் பட்சத்தில் புகார் அளித்தவருக்கு, கூடுதலாக எடுத்துக் கொள்ளும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.100 அபராதமாகச் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கிறது ரிசர்வ் வங்கி.

    ஒரு தனிநபர் புகார் அளித்த பின்பு, கடன் தகவல் நிறுவனங்களுக்குத் தேவைப்படும் தகவல்களை கடன் வழங்கும் நிறுவனங்கள் கொடுக்கத் தவறும் பட்சத்தில், கடன் வழங்கும் நிறுவனங்களே மேற்கூறிய வகையில் புகார் அளித்தவருக்கான அபராதத் தொகையை செலுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கிறது ரிசர்வ் வங்கி.

    கடன் தகவல் நிறுவனங்களுக்கு 30 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில், கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு 21 நாட்கள் அவகாசம் அளித்திருக்கிறது ரிசர்வ் வங்கி.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரிசர்வ் வங்கி
    கடன்

    சமீபத்திய

    ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு மத்திய பாதுகாப்பு பட்ஜெட் அதிகரிப்பு: ரூ.50,000 கோடி ஒதுக்கியதாக தகவல் மத்திய அரசு
    இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் மே 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது இந்தியா
    தமிழ்நாட்டில் SSLC பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் 93.80% தமிழ்நாடு
    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்

    ரிசர்வ் வங்கி

    டாஸ்மாக் கடைகளில் ரூ.2000 நோட்டுகளுக்கு தடை இல்லை - செந்தில் பாலாஜி விளக்கம் தமிழ்நாடு
    உரிமை கோரப்படாத பணத்தை திருப்பியளிக்க ரிசர்வ் வங்கியின் புதிய திட்டம்! இந்தியா
    2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அடையாள அட்டை தேவையில்லை: SBI இந்தியா
    2000 நோட்டு அறிவிப்பு எதிரொலி.. நகைக்கடைகளில் குவியும் மக்கள்? இந்தியா

    கடன்

    வீட்டுக்கடன் விண்ணப்பிக்கும் போது கவனத்தில் கொள்ளவேண்டியவை வீட்டு கடன்
    கடனை சரிவர செலுத்தாததால் குண்டு தயாரிப்பதாக போலீசில் மாட்டிவிட்ட ஆன்லைன் லோன் செயலி-அதிர்ச்சி சம்பவம் தமிழ்நாடு
    ரெப்போ வட்டி விகிதம் 6.50 அதிகரிப்பு! உயரும் வீடு வாகன கடன்; தொழில்நுட்பம்
    ரெப்போ வட்டி விகிதம் உயர்வு: சமானிய மக்களுக்கு உண்டாகும் பாதிப்புகள் என்ன? தொழில்நுட்பம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025