NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / பாதுகாப்பு தரச்சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற டாடா சஃபாரி மற்றும் ஹேரியர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாதுகாப்பு தரச்சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற டாடா சஃபாரி மற்றும் ஹேரியர்
    பாதுகாப்பு தரச்சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற டாடா சஃபாரி மற்றும் ஹேரியர்

    பாதுகாப்பு தரச்சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற டாடா சஃபாரி மற்றும் ஹேரியர்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Oct 18, 2023
    01:20 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்களுடைய சஃபாரி மற்றும் ஹேரியர் எஸ்யூவி மாடல்களின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன்களை இந்தியாவில் வெளியிட்டது டாடா மோட்டார்ஸ்.

    இந்த கார்களானது குளோபல் NCAP பாதுகாப்பு தரச்சோதனையில் 5 ஸ்டார்களைப் பெற்று அசத்தியிருக்கிறது. இந்தியாவில் பாதுகாப்பான கார்களை உருவாக்குவதற்கு பெயர் போன நிறுவனம் டாடா.

    இந்தப் புதிய பாதுகாப்பு ரேட்டிங்குகளுடன் இந்தியாவில் தற்போது டாடா நிறுவனம் விற்பனை செய்து வரும் ஏழு கார் மாடல்களில், ஐந்து கார் மாடல்கள் குளோபல் NCAP பாதுகாப்பு தரச்சோதனையில் 5 ஸ்டார்களைப் பெற்ற கார் மாடல்களாக இருக்கின்றன.

    டாடா மோட்டார்ஸ்

    அதிக மதிப்பை பெற்று புதிய சாதனை: 

    மேலும் இந்த பாதுகாப்பு தரச்சோதனையில், இந்தியாவிலிருந்து சோதனை செய்யப்பட்ட கார்களிலேயே அதிக மதிப்பெண்களைப் பெற்ற கார்கள் என்ற பெயரையும் பெற்றிருக்கின்றன சஃபாரியும், ஹேரியரும்.

    பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 34 புள்ளிகளுக்கு 33.05 புள்ளிகளைப் பெற்றிருக்கின்றன இந்த இரண்டு எஸ்யூவிக்களும். முன்னதாக ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் ஃபோக்ஸ்வாகன வெர்ட்டஸ் ஆகிய கார்கள் பெற்ற 29.71 புள்ளிகளே அதிகபட்ச மதிப்பெண்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    அதேபோல், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 49 புள்ளிகளுக்கு 45 புள்ளிகளைப் பெற்று அசத்தியிருக்கின்றன டாடாவின் சஃபாரியும், ஹேரியரும்.

    இத்துடன் இந்தியாவிற்கான பாதுகாப்பான கார்கள் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டிருக்கிறது குளோபல் NCAP அமைப்பு.

    பாரத் NCAP

    இனி குளோபல் NCAP ரேட்டிங்குகள் இந்திய கார்களுக்கு இல்லை: 

    குளோபல் NCAP-ன் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவிற்கான பாரத் NCAP பாதுகாப்பு தரச்சோதனையை கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தினார் மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி.

    அந்த பாரத் NCAP தரச்சோதனையானது கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்திருக்கிறது. எனவே, இனி இந்திய கார்களானது பாரத் NCAP தரச்சோனதையின் மூலமே சோதனை செய்யப்படவிருக்கின்றன.

    மேற்கூறிய டாடாவின் கார்களான சஃபாரி மற்றும் ஹேரியரை பாரத் NCAP தரச்சோதனைக்கு அனுப்பத் திட்டமிட்டிருக்கிறது டாடா.

    தங்களது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய எஸ்யூவிக்களின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களின் கட்டமைப்பையும் மேம்படுத்தியிருப்பதாக டாடா நிறுவனம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டாடா மோட்டார்ஸ்
    டாடா சஃபாரி
    எஸ்யூவி

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    டாடா மோட்டார்ஸ்

    ரத்தன் டாடாவின் 85 வது பிறந்தநாள் ஸ்பெஷல்: டாடாவின் 5 விலை உயர்ந்த பொருட்கள் வாகனம்
    ஜனவரி சலுகை: மாதம் ரூ.65,000 வரை தள்ளுபடி விலையில் டாடா கார்கள் ஆட்டோமொபைல்
    மாருதி டாடா ஹூண்டாய் கார்களுக்கு செம்ம தள்ளுபடி அறிவிப்பு! விலையை சரிபார்க்கவும் கார் உரிமையாளர்கள்
    2023-இல் வெளியாகும் மாருதி மற்றும் ஹூண்டாய் டாடா கார்கள்! கார் உரிமையாளர்கள்

    டாடா சஃபாரி

    ரூ.16.19 லட்சம் விலையில் வெளியான புதிய டாடா சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் டாடா மோட்டார்ஸ்

    எஸ்யூவி

    இந்தியாவில் வெளியானது மெர்சிடீஸ்-பென்ஸின் புதிய G 400d மாடல் கார் மெர்சிடீஸ்-பென்ஸ்
    பல வித கூர்க்கா மாடல்களை சோதனை செய்து வரும் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் கார்
    அடுத்து இந்தியாவில் வெளியாகவிருக்கும் எஸ்யூவிக்கள் என்னென்ன? ஆட்டோமொபைல்
    ஆகஸ்ட் மாதம் 5-டோர் தாரை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் மஹிந்திரா மஹிந்திரா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025