NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / பலேனோ, வேகன்ஆர் ஆகிய மாடல்களை சேர்ந்த 16,000 கார்களை திரும்ப பெற அழைப்பு விடுத்தது மாருதி சுஸுகி
    அடுத்த செய்திக் கட்டுரை
    பலேனோ, வேகன்ஆர் ஆகிய மாடல்களை சேர்ந்த 16,000 கார்களை திரும்ப பெற அழைப்பு விடுத்தது மாருதி சுஸுகி

    பலேனோ, வேகன்ஆர் ஆகிய மாடல்களை சேர்ந்த 16,000 கார்களை திரும்ப பெற அழைப்பு விடுத்தது மாருதி சுஸுகி

    எழுதியவர் Sindhuja SM
    Mar 23, 2024
    06:47 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, அதன் பலேனோ மற்றும் வேகன்ஆர் மாடல்களின் 16,041 யூனிட்களை திரும்பப் பெற உள்ளதாக அறிவித்துள்ளது.

    இந்த குறிப்பிட்ட மாடல்களின் எரிபொருள் பம்பில் குறைபாடுகள் இருக்கக்கூடும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    எரிபொருள் பம்ப் மோட்டாரின் ஒரு பகுதி பழுதடைதிருக்கும் என்று நம்பப்படுகிறது.

    அப்படி அது பழுதடைந்திருந்தால், என்ஜின் திடீரென்று ஸ்தம்பித்து தீ பிடித்து எரிதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

    எனவே முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தற்போது மாருதி சுஸுகி திரும்பப்பெற இருக்கும் வாகனங்கள் ஜூலை மற்றும் நவம்பர் 2019 க்கு இடையில் தயாரிக்கப்பட்டவையாகும்.

    மாருதி 

    மாருதி சுஸுகி நிறுவனத்தின் உத்தரவாதம்

    பலேனோ பிரீமியம் ஹேட்ச்பேக்கின் 11,851 யூனிட்களும், வேகன்ஆர் மிட்-சைஸ் ஹேட்ச்பேக்கின் 4,190 யூனிட்களும் திரும்பபெறப்பட உள்ளன.

    இந்த மாடல்கள் மாருதி சுஸுகியின் மிகவும் விரும்பப்படும் வாகனங்களாகும்.

    பலேனோ பிரீமியம் ஹேட்ச்பேக், இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் பிரீமியம் ஹேட்ச்பேக் என்ற பெயரை பெற்ற மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிதியாண்டில் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான காலக்கட்டத்தில், பலேனோ காரின் விற்பனை 180,018 ஆகவும், வேகன்ஆர் காரின் விற்பனை 183,810 ஆகவும் இருந்ததாக மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    பாதிக்கப்பட்ட வாகனங்கள் திரும்பபெறப்பட்டு பழுதடைந்த பகுதிகள் மாற்றியமைக்கப்படும் என்று மாருதி சுஸுகி உத்தரவாதம் அளித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மாருதி

    சமீபத்திய

    உக்ரைன் ட்ரோன் தாக்குதலால் கனிமொழி தலைமையிலான குழு பயணித்த விமானத்தை மாஸ்கோவில் தரையிறக்க முடியாமல் அவதி கனிமொழி
    அந்தமான் & நிக்கோபார் தீவுகளின் மேல் விமானங்கள் பறக்க தடை விதித்து NOTAM அறிவிப்பு அந்தமான் நிக்கோபார்
    தாங்கள் உருவாக்கிய அதே AI அமைப்புகளால் பணிநீக்கம் செய்யப்பட்ட மைக்ரோசாப்ட் பொறியாளர்கள் மைக்ரோசாஃப்ட்
    பாகிஸ்தானுக்கு நிதி கொடுக்க காரணம் இதுதான்; சர்வதேச நாணய நிதியம் விளக்கம் சர்வதேச நாணய நிதியம்

    மாருதி

    புதிய ஜிம்னியின் வேரியன்ட்களில் என்னென்ன வசதிகளைக் கொடுத்திருக்கிறது மாருதி? ஆட்டோமொபைல்
    ஜூலை மாதம் வெளியாகவிருக்கும் மாருதியின் புதிய எம்பிவி 'இன்விக்டோ' கார்
    இந்தியாவில் மாருதியின் அடுத்த லைன்-அப் என்ன? கார்
    ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகமாகவிருக்கும் புதிய கார்கள் கார்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025