LOADING...
மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்த கை கோர்க்கிறது மாருதி சுஸுகி-டொயோட்டா நிறுவனங்கள் 

மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்த கை கோர்க்கிறது மாருதி சுஸுகி-டொயோட்டா நிறுவனங்கள் 

எழுதியவர் Sindhuja SM
Mar 26, 2024
07:46 pm

செய்தி முன்னோட்டம்

மாருதி சுஸுகி மற்றும் டொயோட்டா இணைந்து YMC என்ற பெயரில் அனைத்து மின்சார பல்நோக்கு வாகனங்களையும்(MPV) அறிமுகப்படுத்த உள்ளன. இந்த புதுமையான வாகனத் தொடரை வரவிருக்கும் ஆண்டுகளில் தொடர்ந்து வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ஒய்எம்சி செப்டம்பர் 2026க்குள் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பிறகு அதே வாகனம் டொயோட்டா-பிராண்ட் டைட்டிலுடன் வெளியாகும். கூடுதலாக, அந்த இரண்டு ஆட்டோ ஜாம்பவான்களும் ஒரு eVX SUVயை இணைந்து தயாரித்து வருகின்றன. இது YMC போன்ற அதே இயங்குதளத்தையும் பவர்டிரெய்னையும் கொண்டிருக்கும்.

மாருதி சுஸுகி

புதிய மாடல்களின் உற்பத்தி மற்றும் விற்பனை கணிப்புகள்

YMC MPV மற்றும் eVX SUV அறிமுகம், மாருதி சுஸுகி மற்றும் டொயோட்டா ஆகிய இரண்டு நிறுவனங்களின் பொருளாதாரத்தையும் கணிசமாக மேம்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது. டொயோட்டாவின் அர்பன் எஸ்யூவி கான்செப்ட், eVX இல் இணைக்கப்பட உள்ளது. இது 2025-26 இல் அறிமுகமாகும். இந்த அறிமுகத்திற்குப் பிறகு, மாருதி சுஸுகி eVX இன் விலைகள் மார்ச் 2025 க்குள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது வெளியாகிய பிறகு, இதன் டொயோட்டாவின் பதிப்பு சுமார் ஒன்பது முதல் 12 மாதங்களுக்குப் பிறகு வெளியாகும். 2026 இன் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட இருக்கும் மாருதி சுஸுகியின் மாடல்கள், 50,000 முதல் ஒரு லட்சம் யூனிட்களுக்கு மேல் வால்யூம் திறனைக் கொண்டிருக்கும்.